Categories
தேசிய செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… சுற்றுலாப் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை… மத்திய சுகாதாரத்துறை மந்திரி கருத்து…!!!!!

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை எதிர்கொள்ளும் விதமாக இந்தியாவில் முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டில் நிலவக்கூடிய கொரோனா சூழல் குறித்து மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் தானாக முன்வந்து அறிக்கை அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஒரு வருடமாக கொரோனா தொற்று […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்க பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ.1,000 கோடியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்புக்காக ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஆலோசனை நடத்தினார். காணொலி முறையில் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும் முகக்கவசம் அணிந்தபடியே இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். அதில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்த ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும் – தெற்கு ரயில்வே விளக்கம்!

கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வரை 5,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் வெளியே வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வருகிற ஏப்ரல் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் அதிகம் பாதித்த தமிழகத்திற்கு குறைவாக நிதி ஒதுக்கியது ஏன்? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவாக நிதி ஒதுக்கியது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு கொரோனா நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.510 கோடி ஒதுக்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.966 கோடி, மத்தியபிரதேசத்துக்கு ரூ. 910 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல்

தமிழகத்தில் காலை முதல் இரவு வரை ஆவின் பால் தட்டுபாடின்றி கிடைக்கும் – ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் காலை முதல் இரவு வரை ஆவின் பால் தட்டுபாடின்றி கிடைக்கும் என்பதால் பொது மக்கள் அச்சப்பட வேண்டிய தேவை இல்லை என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவின் பாலகங்களுக்கு சென்று பொதுமக்கள் நேரடியாக தேவையான பாலை வாங்கிக்கொள்ளலாம். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பால் தங்கு தடையின்றி கிடைக்க […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அரசு ஊழியர்கள் பகுதி நேரமாக வேலை செய்தாலே போதும் – முதல்வர் பினராயி உத்தரவு!

கேரளாவில் அரசு ஊழியர்கள் பகுதி நேரமாக வேலை செய்ய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனோ” ஊரடங்கு உத்தரவு….. ஏன்….? எதற்கு…..?

ஊரடங்கு உத்தரவு ஏன் கடைபிடிக்கிறோம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். பிரெஞ்சு மொழியில் curfew என்றால் நெருப்பை மூடுவது என்று பொருள். இது பின்னொரு காலத்தில் பிரிட்டிஷார்களால் ஆங்கிலத்தில் மருவப்பட்டு சுதந்திர விடுதலைப் போராட்ட வீரர்களை ஒடுக்குவதற்காக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இதைத்தான் தற்போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொரோனோக்கு எதிரான ஆயுதமாக கையில் எடுத்துள்ளார். இந்த சுய ஊரடங்கு உத்தரவு பல்வேறு உலக நாடுகளில் வன்முறை மற்றும் கொடிய நோய்கள் பரவும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

“கொரோனோ” பழையதை கழி….. போதும் என்ற மனம் கொள்…..!!

வீட்டை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் . உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக தற்போது பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே தஞ்சமடைந்துள்ளனர். தற்போது மக்கள் அதிகம் இருக்கக்கூடிய பகுதி என்றால் அது வீடுதான். வெளியில் சென்று வந்தவுடன் தமது கைகளை கழுவி ஆடைகளை உடனடியாக சலவைக்கு நனைய வைத்து சுத்தத்தை மேற்கொள்கிறோம். நாம் வீட்டை பராமரிப்பதில் மிகப்பெரிய தவறையும் செய்துவருகிறோம். அது என்னவென்றால், இதற்கு […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 11,384….. இத்தாலியில் 675…. ஒரே நாளில் மரணம்….!!

கொரோனோ வைரஸ் பாதிக்கப்பட்டு இத்தாலியில் ஒரேநாளில் 675 பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி, நேற்றைய தினம் வரை கணக்கிடுகையில், கொரோனோ உயிரிழப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 11,384 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் சீனாவைவிட இத்தாலியில் கொரோனோ பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து வந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் மட்டும் ஒரே நாளில் 675 பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனோ” 9,000 பேருக்கு உணவு….. நீதிமன்றம் உத்தரவு….!!

சென்னையில் சாலையோர மக்களுக்கு தங்குமிடம், உணவு வசதி ஏற்படுத்தி தர கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக நாளை ஒருநாள் சுய ஊரடங்கு கடைபிடிக்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். அதன்படி பேருந்துகள்,மெட்ரோ,ரயில் உள்ளிட்ட எந்த போக்குவரத்து சேவையும் தமிழகத்தில் நாளை இயங்காது  பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலையோரங்களில் வசிக்கும் மக்களையும் பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனோ” PLEASE போகாதீங்க….. சுகாதாரத்துறை வேண்டுகோள்….!!

கேரள மாநிலத்திற்கு தமிழக மக்கள் செல்ல வேண்டாமென சுகாதாரதுறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக-கேரள எல்லைகளில் உள்ள மக்கள் அவ்வப்போது தேவைக்காக அண்டை மாநிலமான கேரளா சென்று வருகின்றன. இந்தியாவிலேயே கொரோனோ தாக்கம் சற்று அதிகமாக இருக்கக் கூடிய மாநிலம் கேரளா. ஆகவே மக்களை அம்மாநிலத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதோடு,  கேரள கர்நாடக எல்லைகளுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் சென்று வருவதாக வந்த தகவலை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழக-கேரள எல்லையை ஒட்டியுள்ள […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனோ” ஏப்ரல் முதல்….. நீதிமன்றங்களுக்கு விடுமுறை…..!!

கொரோனோ அச்சம் காரணமாக சென்னை நீதிமன்றத்தில் முன்கூட்டியே கோடை கால விடுமுறை விட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் உயிர்கொல்லி கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்குநாள் சற்று குறைவான வீரியத்துடன் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அதில் எந்த குறையும் இல்லை. கொரோனோவிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததோடு, மால்கள், மார்க்கெட், சினிமா தியேட்டர்கள், […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

“கொரோனோ” 5 மாத குழந்தைக்கு அறிகுறி….. தஞ்சையில் பரபரப்பு…..!!

தஞ்சையில் 5 மாத குழந்தைக்கு கொரோனோ நோய் தொற்று கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோ வைரஸ் நோய் தொற்று இந்தியாவிலும் தீவிரம் காட்டி வரும் சூழ்நிலையில், அதனை ஆரம்ப காலகட்டத்திலேயே தடுத்து நிறுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் நோயின் தாக்கம் சற்று வீரியத்துடன் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இதனுடைய தாக்கம் சற்றுக் குறைவாக காணப்பட்டாலும், ஆங்காங்கே கொரோனோ அறிகுறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், […]

Categories
தேசிய செய்திகள்

பஸ்…. ரயில்… மெட்ரோ….. எதுவும் இயங்காது…. முதல்வர் உத்தரவு….!!

சென்னையில் வருகின்ற 22 ஆம் தேதி மெட்ரோ ரயில்கள் இயங்காது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை முதற்கட்டமாக தவிர்க்கவே இந்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி வருகின்ற மார்ச் 22ஆம் தேதி சுய ஊரடங்கு உத்தரவை பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…… வதந்தி பிறப்பினால் கைது…… டிஜிபி உத்தரவு….!!

கொரோனோ வைரஸ் குறித்து தவறான வதந்தி பரப்புபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனோ வைரஸ் குறித்த அச்சம் பொதுமக்களிடம் பெரும் அளவில் பரவிக் கிடக்க அவ்வப்போது வாட்ஸ் அப் வதந்திகள் மூலமாக பயமுறுத்தல் என்பது அதிகமாகி வருகிறது. இந்த வதந்திகளை நம்பி வீணாக மக்கள் பதற்றம் அடைந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழக காவல் துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் வாட்ஸ் அப் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனோ” ஒவ்வொரு வீட்டிற்கும்…. ரூ15,000….. நீதிமன்றத்தில் மனு….!!

கொரோனோ வைரசால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 15,000 உதவித்தொகை அரசு வழங்க வேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்க, அதனுடைய தாக்கம் தமிழகத்தில் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பொதுமக்கள் கொரோனோ அச்சம் காரணமாக வீட்டின் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். பலர் வீட்டில் இருந்து வேலை பார்க்கின்றனர். இதில் சம்பளம் பிடித்தம் […]

Categories
மாநில செய்திகள்

இவங்களலாம்…… கை கழுவிடுங்க….. விவேக் அட்வைஸ்….!!

சோப்பு போட்டு கை கழுவுவதை போல் வதந்தி பார்ப்பவர்களையும் கைகழுவ வேண்டும் என நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனோ வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், நடிகர் விவேக் மீண்டும் மீண்டும் கொரோனோ குறித்து பல்வேறு நோய்களை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் பதிவு ஒன்றில் இவ்வாறு தெரிவித்தார். அதில், கொரோனோவை விட மிகப்பெரிய நோய் எதுவெனில் எதிர்மறை அவநம்பிக்கை தான். இந்த சூழல் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனோ” 19,00,000 இருப்பு…. சுகாதாரத்துறை தகவல்….!!

தமிழகத்தில் 19.30 லட்சம் போது முககவசங்கள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 19.30 லட்சம் முகக் கவசங்கள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் முக கவசம் சனிடைசர் உள்ளிட்டவை கிடைப்பதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல் சனிடைசர் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் சீனாவில் இருந்து இதுவரை இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் அதனை தற்போது இந்திய அரசு தடை செய்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

எது வைரஸ்…. கொரோனோவா…? மனிதனா….? மாதவன் கேள்வி…..!!

நடிகர் மாதவன் கொரோனா வைரஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் குறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், நடிகர் மாதவன் ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக ப்ளாக் டவுன் என்ற பெயரில் பொதுமக்கள் அவரவர் வீட்டினுள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை உலகெங்கும் ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில், அமெரிக்காவின் வெனிசுலா நகரத்தில் மக்கள் வீட்டுக்குள் முடங்கி […]

Categories
மாநில செய்திகள்

மார்ச் 22ல் தமிழகத்தில் கடைகள், ஓட்டல்கள் அடைப்பு!

வருகின்ற மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்கள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரராஜா அறிவித்துள்ளார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று சுய ஊரடங்கு உத்தரவை மதிக்கும் வகையில், அன்று ஒரு நாள் மட்டும் கடைகள் மற்றும் ஓட்டல்கள் செயல்படாது எனவும், ஆகையால் மக்கள் முன்கூட்டியே வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளுமாறு வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“கொரோனா” 2,300 பேர் பாதிப்பு….. பீதியில் தவிக்கும்….நியூயார்க் நகரம்…..!!

நியூயார்க் நகரில் மட்டும் 2,300 பேர் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனோ வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. அதன்படி, நியூயார்க் நகரத்தில் மட்டும் சுமார் 2,300 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அந்நகர மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என […]

Categories
தேசிய செய்திகள்

“உபி-சென்னை” பொது பெட்டியில் பயணம்….. தமிழகத்தில் கொரோனா..? சுகாதார துறை விளக்கம்….!!

உபியில் இருந்து ரயில் மூலம் தமிழகம் வந்த நபருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்திலிருந்து இரண்டு நாளுக்கு முன் தமிழகம் திரும்பிய சென்னையை சேர்ந்த யுவான் என்பவருக்கு கொரோனோ பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் வீடு மற்றும் பக்கத்து வீட்டு ஆட்களிடம் சோதனை மேற்கொள்கையில், 40 நபர்களுக்கு கொரோனோ அறிகுறி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் அவர் உபியில்இருந்து ரயிலின் பொது பெட்டியில் சென்னைக்கு வந்துள்ளார். ஆகையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவருடன் பயணித்தவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். […]

Categories
மதுரை மாநில செய்திகள்

“கொரோனா” தன்னார்வ தொண்டு….. மாநகராட்சியுடன் கை கோர்த்த மதுரை மாணவர்கள்….!!

கொரோனாவுக்கான  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் சனிடைசர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மதுரை மாணவர்கள் அதனை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் சனிடைசர் தட்டுப்பாடு என்பது உலக அளவில் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய தட்டுப்பாடு காரணமாக விலை சற்று அதிகம் உயர்த்தி விற்கப்பட்டு வருகிறது. மேலும் சானிடைசர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி பட கூடாது என்பதற்காக மதுரை பார்மஸி கல்லூரி மாணவர்கள் மாநகராட்சியுடன் இணைந்து நாளொன்றுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“மார்ச்-22” இன்னைக்கே எல்லாம் வாங்கிவிடுங்க….. அப்புறம் கிடைக்காது….. மோடி உத்தரவு….!!

மார்ச் 22ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள காய்கறி அங்கன்வாடி அன்றைய நாள் முழுவதும் முற்றிலுமாக செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் 22ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள காய்கறி அங்கன்வாடி முற்றிலுமாக செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று சுய ஊரடங்கு உத்தரவை மதிக்கும் வகையில், அன்று ஒரு நாள் மட்டும் காய்கறி அங்கன்வாடி கோயம்பேட்டில் செயல்படாது எனவும், ஆகையால் மக்கள் முன்கூட்டியே வீட்டிற்கு தேவையான காய்கறிகளை உடனடியாக வந்து வாங்கிச் […]

Categories
உலக செய்திகள்

சுயநலவாதிகளே….. கொரோனா உங்களுக்கான அறிகுறி…… பிரபல கால்பந்து பயிற்சியாளர் கருத்து….!!

சுயநலவாதிகளிடமிருந்து பூமி தன்னை பாதுகாத்துக் கொள்வதுன்  அறிகுறியே கொரோனா என பிரபல கால்பந்து பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கொரோனா வைரஸ் குறித்தும் பல்வேறு பிரபலங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஜெர்மனி கால்பந்து பயிற்சியாளரான ஜோச்சும் லோ இந்த வைரஸ் குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில், சுயநலவாதிகளிடமிருந்து பூமி தன்னை பாதுகாத்துக் கொள்வதன் அறிகுறியாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனோ…… இதை போடுங்க….. சரி ஆகிடும்….. சீனா பரிந்துரை….!!

உலக அளவில் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்டு உயிகருணாவை இந்த மருந்து கட்டுப்படுத்தும் என சீன அரசு மருந்து ஒன்றை பரிந்துரை செய்துள்ளது. கொரோனோ வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 9,000த்தை நெருங்க உள்ளது. இந்நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் வேலைகளில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். மருந்து கண்டுபிடிக்கும் பணி ஒருபுறம் நடக்க, மற்றொருபுறம் அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் அதற்கான மருந்தும் கண்டுபிடிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

முககவசம்…. 1 மீட்டர் இடைவெளி…. கொரோனோவுக்கு எதிராக CBSE….!!

சிபிஎஸ்சி அமைப்பு கொரோனோ முன்னெச்சரிக்கை குறித்து சில விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது. சிபிஎஸ்சி வழியில் பயின்ற 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சிபிஎஸ்இ அமைப்பு சில முக்கிய தகவல்களை அளித்துள்ளது.  அதில், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு முறையான முக கவசம் அணிய வேண்டும் எனவும், தேர்வெழுதும் மாணவர்களுக்கு இடையே ஒரு மீட்டர் தொலைவு இருக்க வேண்டும் என்றும், தேர்வறையில் முன்னெச்சரிக்கை குறித்த நடவடிக்கை அதற்கான கட்டுப்பாடுகள் குறித்து […]

Categories
உலக செய்திகள்

பூண்டு சாப்பிட்டால்…. கொரோனோ குணமாகுமா…..? WHO விளக்கம்….!!

கொரோனாவிடமிருந்து  தப்பிக்க பூண்டு மட்டும் போதாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பூண்டு சாப்பிட்டால் கொரோனா  வைரஸ் நம்மை அண்டாது என சமூக வலைதளங்களில் புதிய வதந்தி ஒன்று பரவி வருகிறது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பூண்டு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்டது. ஆனால் அது மட்டுமே வைரஸிலிருந்து நம்மை பாதுகாக்க முடியாது. அதனால் தேவையான முன்னெச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனோ EFFECT” 60% டிக்கெட்டுகள் ரத்து….. ரயில்வே அதிகாரிகள் தகவல்….!!

மார்ச் மாதத்தில் 60 சதவிகிதம் ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா  வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் பரவலாக அதிகரித்து வருவதால், அதனுடைய அச்சம் பொதுமக்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில், பொதுமக்களும் பயணங்களை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ரயில் பயணத்தை பயணிகள் விரும்பாமல் ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தால் அதை ரத்து செய்தும்  வந்துள்ளனர். அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் முன்பதிவு செய்த பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனோ” கூட்டம் கூட்டமா வராதீங்க….. பிரபல கோவில் நிர்வாகம் அறிவிப்பு….!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பிரபல வைஷ்ணவிதேவி கோவிலில் மக்கள் கூட்டமாக வருவதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பொதுமக்கள் ஆங்காங்கே கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும் கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளது. மேலும் வணிக வளாகம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் அங்கே கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் கொரோனோ சிகிச்சையா ? இப்பதான டிஸ்சார்ஜ் பண்ணீங்க…… கதறும் இளைஞர்….!!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் முழுமையாக குணமடைந்து 16ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்கு கொரோனோ நோய் தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக வந்த தகவலை அடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பூரண குணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்க கடந்த 16ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் மீண்டும் உடல்நிலை சரியில்லாததால் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

“NO FLIGHT” மணமகன் இல்லாமல் திருமணம்…… தெலுங்கானவில் பரபரப்பு….!!

தெலுங்கானாவில் மாப்பிள்ளை இல்லாமல் மணப்பெண்ணை மட்டும் வைத்து திருமணம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முகம்மது அத்னன், சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பே நமது குடும்பத்தினரால் இவருக்கு திருமணம்  தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டது. நிச்சயதார்த்தத்திற்கு பின் வேலைக்கு சென்றுவிட்டு திருமண நாளுக்கு மூன்று நாள் முன்பு மீண்டும் நாடு திரும்புகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார் முகமது. இந்நிலையில் கொரோனோ நோயின் […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா வைரஸ்” நல்ல செய்தி….. அரசு தான் நிர்ணயிக்கும்…… பேரவையில் அமைச்சர் பேச்சு….!!

கொரோனோ வைரஸ் தொடர்பாக நல்ல செய்தி விரைவில் வரும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவைரசுக்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் தனியார் மருத்துவமனைகளில் மருந்து தயாரிப்பதற்கான பரிசோதனை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது வரை காய்ச்சல், சளி, இருமலுக்கு என்ன மருந்தோ அது தான் கொடுக்கப்பட்டு வருவதாக சட்டமன்றத்தில் பேசிய விஜயபாஸ்கர், விரைவில் கொரோனோ வுக்கு மருந்து  கண்டுபிடித்து விட்ட நல்ல செய்தி வரும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தனியார் […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா” இத்தாலி….. பிரேசில்…… 40 பயணிகள்….. புது வரவு….. முதற்கட்ட சோதனை ஆரம்பம்…..!!

இத்தாலி பிரேசிலில் இருந்து தமிழகம் வந்த 40 பயணிகள் முதற்கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனோ நோய் தொற்றுக்கு எதிராக பல சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுகாதாரத் துறையுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பும் பயணிகளை கடும் பரிசோதனைகளுக்குப் பின்பே தமிழகத்தில் உள்நுழைய சுகாதாரத்துறை அனுமதித்து வருகிறது. அந்த வகையில் இன்று இத்தாலி பிரேசிலில் இருந்து 40 பயணிகள் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

40 பேருக்கு கொரோனா…… வைரல் வீடியோ……. வதந்தி பரப்பியவருக்கு போலீஸ் வலைவீச்சு……!!

மதுரையில் 40 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளதாக போலி வதந்தியை பரப்பியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே கொரோனோ வைரஸ் குறித்த அச்சம் நமது மக்களிடையே தாறுமாறாக அதிகரித்து உள்ள நிலையில், அதற்கேற்றபடி மேலும் அச்சத்தை பெருக்க வதந்திகளும் அவ்வப்போது கிளப்பி விடப்படுகிறது.  அந்த வகையில் மதுரையில் சுமார் 40 பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளதாக வீடியோ பதிவு ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தமிழக மக்களிடையே ஏற்படுத்தியது. ஆனால் கள நிலவரப்படி மதுரையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்…… புதிய உத்தரவு…… 5 பேர் செல்ல தடை…… டெல்லி அரசு அதிரடி…..!!

டெல்லியில் சாலையில் ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து செல்ல வேண்டாம் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கொரோனோ வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் மார்ச் 31ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்து உள்ளனர். இதன்படி மார்ச் 31ம் தேதி வரை வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள், திரையரங்குகள், மால்கள் என அனைத்தையும் மூட திட்டமிட்டுள்ளனர். மேலும் திருமண நிகழ்வுகள், ஊர் திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளை தவிர்க்குமாறும் உத்தரவிட்டுள்ளது. கல்வி […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா” உலக அளவில் முதல்முறை…… பலியான முதல் உயிர்…..!!

உலக அளவில் முதன்முறையாக வீட்டு வளர்ப்பு நாய்க்குட்டி கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.  ஹாங்காங்கை சேர்ந்த பெண் ஒருவர் ஆசையாக பொமரேனியன் நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இவருக்கு சில வாரங்களுக்கு முன் கொரோனோ வைரஸ் நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இவரிடம் இருந்து இவரது நாய்க்கும் வைரஸ் பரவியது. இதையடுத்து இவருக்கு தனியார் மருத்துவமனையில் ஒருபுறம் சிகிச்சை அளிக்கப்பட, மற்றொரு கால்நடை மருத்துவமனையின் தனிப்பிரிவில் நாய்க்கும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த நாய்க்குட்டி […]

Categories
உலக செய்திகள்

கொரோனோவின் கோர முகம்….. “தகராறு” மலையென குவிந்த விண்ணப்பம்….!!

சீனாவில் பரவும் கொரோனோ நோயால் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிட்ட நிலையில் கணவன் மனைவி இடையே பிரிவு ஏற்பட்டு இதுவரை 300க்கும்  மேல் விவாகரத்து விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. சீனாவின் ஹுகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் படிப்படியாக பரவி லட்சத்திற்கும் மேற்பட்டோரை அந்நாட்டில் பாதித்துள்ளது. இதுவரை ஆயிரக்கணக்கில் உயிர்களை பலி வாங்கி அதைத் தொடர்ந்து சீன அரசு வீட்டிலிருந்தபடியே ஊழியர்களை வேலை பார்க்க அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து வீட்டிலிருந்து ஊழியர்கள் பணியை தொடங்க குடும்பத்தினுள் சண்டை ஏற்பட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கொரோனோ அறிகுறி” பொதுக்கூட்டத்தில் வந்திருக்குமோ…? தன்னை தானே தனிமைப்படுத்திய அமைச்சர்…..!!

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தனக்கு கொரோனோ அறிகுறி இருப்பதாக நினைத்து 5 நாட்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொண்டார். வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன் கடந்த மார்ச் 14-ஆம் தேதி என்று கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசினார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினரான மருத்துவர் ஒருவருக்கு கொரோனோ நோய் அறிகுறி இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து தனக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைத்து […]

Categories
மாநில செய்திகள்

கோழிக்கறி….. சாப்பிட்டு நிரூபித்தால்…… ரூ1,00,00,000 பரிசு….. கோழி பண்ணையாளர் சங்க நிர்வாகி அறிவிப்பு…..!!

கோழி கறி சாப்பிடுவதால் கொரோனா நோய் வரும் என நிரூபித்தால் ரூபாய் ஒரு கோடி பரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கறி சாப்பிடுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவும்  என்பதை நிரூபித்தால் ரூ 1 கோடி பரிசு தருவதாகக் கூறி கோழி பண்ணையாளர்  சங்க நிர்வாகி சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கடந்த மாதத்தில் இந்தியாவில் கொரோனா  வைரஸ் கோழிக்கறி மூலமாகத்தான் பரவுகிறது என்று சிலர் வதந்தி பரப்பி வந்தனர். வதந்தி பரப்பிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விட்டதாகவும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது வரை பண்ணதெல்லாம் சூப்பர்…… இதையும் பண்ணிட்ட வேற லெவல்ங்க நீங்க…… பேரவையில் ஸ்டாலின் பேச்சு….!!

சட்டப்பேரவையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். சட்டப்பேரவையில் கொரோனா  முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசினார். அதில், கொரோனா  நோயிலிருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில், பாராட்டக்கூடிய விஷயம் என்னவென்றால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது நல்ல விஷயம்.  இதேபோன்று தொடர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது போல் அரசு மற்றும் தனியார் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

உள்ளே நுழைய தடை….. ஒரு நாளுக்கு 50 மட்டும் தான்….. நீதிமன்றத்தையும் விட்டுவைக்காத கொரோனா அச்சம்….!!

மார்ச் 31ம் தேதி வரை நீதிமன்றத்திலும் கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தியேட்டர், வணிக வளாகம், ஊர் திருவிழா, திருமண மண்டபம்   இவை யாவும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால், தமிழக அரசு இம்மாதிரியான இடங்களுக்கு தடை விதித்தது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிப்பட்டுள்ளது.  இவ்வாறு இருக்கையில் தற்போது நீதிமன்றத்திலும் கொரோனா அச்சம் காரணமாக, புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா வைரஸ்” சேவை செய்வதே நமது நோக்கம்…… MP-க்கள் கூட்டத்தில் மோடி பேச்சு….!!

மக்களுக்கு சேவை செய்வதே நமது நோக்கம் என்று டெல்லியில் நடந்த எம்பிகள் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நரேந்திர மோடி அவர்கள் கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்காக நாம் தொடர்ந்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வர வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்தொடர் விரைவில் முடிவடையாமல் அதனை ஏப்ரல் 3 வரை நீடித்திருக்கிறோம் ஆகையால் தொடர்ந்து விவாதித்து எம்பிக்கள் அவரவர் […]

Categories
உலக செய்திகள்

பிராத்தனை கூட்டம்…… புனிதநீரால் விபரீதம்….. 46 பேருக்கு கொரோனா….. தென்கொரியாவில் பீதி….!!

தென்கொரியாவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் புதியதாக 46 பேருக்கு கொரோனா  பரவிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவில் புகழ் பெற்ற கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் கொரோனோ வைரஸ் நோய் பிரச்சனை தீர வேண்டுமென சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இந்த பிரார்த்தனை கூட்டத்தில் 90 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் அனைவருக்கும் பாஸ்டர் புனிதநீரை கொடுத்துள்ளார். இந்த புனித நீரை ஒரே பாட்டிலில் அனைவரது வாயிலும் படும்படி அவர் கொடுத்ததன் காரணமாக புதியதாக […]

Categories
தேசிய செய்திகள்

“வாட்டி வதைக்கும் கொரோனா” ஈரானில் சிக்கிய இந்தியர்கள்….. 392 பேர் மீட்பு….. மோடிஜிக்கு குவியும் பாராட்டு…..!!

கொரோனா  வைரஸ் தாக்கம் அதிகமாக பரவி வரும் ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு துரித நடவடிக்கைகள் மூலம் மீட்டு வருகிறது. உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா  வைரஸின் தாக்கம் ஈரானில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் தொடர்ந்து மனுக்கள்  குவிந்த வண்ணமிருந்தன. இதை ஏற்ற மோடி தலைமையிலான அரசு துரித நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன்படி இதுவரை 336 பேர் சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனோ அச்சம்” L.K.G TO 5….. லீவ் உண்டா..? இல்லையா…? குழப்பத்தில் பெற்றோர்கள்…..!!

எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழக அரசு விடுமுறை அளிக்க கோரி உத்தரவிட்ட நிலையில், அதனை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிவிரைவாக பரவி வருகிறது. இதன் தாக்கம் தமிழகத்திலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்தும், தமிழகத்தின் எல்லையோர பகுதிகளில் உள்ள மால்கள், தியேட்டர்கள் […]

Categories

Tech |