மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக இருகின்றது. இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அம்மாநிலத்தில் கொரோனா வைரசால் இதுவரை 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 39 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் பலியாகியிருந்தனர். இந்த நிலையில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். […]
