இத்தாலியில் நேற்று ஒரேநாளில் 627 பேர் கொரோனாவால் பலியான நிலையில், மொத்தம் 4032 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் உருவான கொரோனா தற்போது இத்தாலியை நிலைகுலையைச் செய்துள்ளது. இத்தாலியில் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு தொடர்ந்து 5 நாட்களாக தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். அந்நாட்டில் கடந்த 4 நாட்களாக சராசரியாக 300 முதல் 400 பேர் பலியாகியுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் மட்டும் 627 பேரை கொரோனா வேட்டையாடியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏற்கனவே அங்கு 47,000 […]
