Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போதிய வருவாய் இல்லை… கிராமப்புறங்களில் இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் பாதியாக குறைப்பு?

போதிய வருவாய் இல்லாததாலும் பயணிகள் இல்லாததாலும் பேருந்துகள் இயக்கம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 50% பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 5,000திற்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் போதிய அளவுக்கு பேருந்துகளில் பயணிகள் பயணம் மேற்கொள்ளவில்லை. மேலும் கிராமங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் பயணம் மேற்கொள்ளவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

மே6 முதல் ஜூன் 2 வரை வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் 1.26 லட்சம் பேர்…!!

மே மாதம் 6ம் தேதியில் இருந்து ஜூன் 2ம் தேதி வரை வெளிமாநிலங்களில் இருந்து 1.26 லட்சம் பேர் தமிழகம் வந்துள்ளனர். சொந்த வாகனங்கள், ரயில், அரசு பேருந்துகள், விமானங்கள் மூலம் தமிழகம் வந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசு பேருந்துகள் மூலம் 35,034 பேர், சொந்த வாகனங்கள் மூலம் 76,589 பேர், ரயில் மூலம் 6,930 பேர், விமானங்கள் மூலம் 7,532 பேர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து 31,881 பேர், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று ஒரே நாளில்…! ”அடுத்தடுத்து ஷாக்” நடுங்கி போன தமிழகம் …!!

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஷாக் கொடுத்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது.  இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 964 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 15,770 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்ததால் மொத்த பலியானோர் எண்ணிக்கை 184-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 10,964 பேருக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அத்தியாவசிய பணிகளுக்காக சென்னையில் 200 பேருந்துகள் இயக்கப்படும்: மாநகர போக்குவரத்து கழகம்!!

சென்னையில் அத்தியாவசிய பணிகளுக்காக 200 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழக அரசும் ஊரடங்கை மே 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. அதில், சுமார் 25 மாவட்டங்களுக்கு சில புதிய தளர்வுகளை அறிவித்தது. அதில், மாவட்டங்களுக்குள் மட்டும் பயணம் மேற்கொள்ள பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல, 25 மாவட்டங்களில் 100 பேருக்கு குறைவாக உள்ள தொழில் நிறுவனங்களில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மக்களை படிப்போம்” ரூ76,030 சேமிப்பு பணத்தில் நிவாரணம்…. பேராசியர்க்கு குவியும் பாராட்டு…!!

ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது நீண்ட நாள் சேமிப்பு தொகையான ரூபாய் 76,030 ஐ நிவாரண பொருள்களாக வழங்கிய தற்காலிக பேராரசிரியர்க்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பலர் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் உணவின்றி தவிக்கும் பாமர மக்களுக்கு உதவுவதற்காக தனிமனிதர்கள் சிலரும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்து உதவி […]

Categories
அரசியல்

கொரோனா தொற்றில்-இரண்டாம் இடத்தை நெருங்கும் தமிழகம்…!

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் இன்று தமிழ்நாடு இரண்டாம் இடத்தை அடையும் சூழல்…. இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3722 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை கூறுகிறது. 24 மணிநேரத்தில் 134 பேர் இறந்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 78,003 பேர். இவர்களில் 26,235 பேர் குணமடைந்துவிட்டனர். 49,219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரசுக்கு இதுவரை நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் மீதான பொருளாதார தடை…?

கொரோனா விவகாரத்தில் சீனா மீது பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது…. கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்னர். சீனாவிடமிருந்து மிகப்பெரிய தொகையை இழப்பீடாக கேட்க உள்ளதாக அமெரிக்கா கூறிவருகிறது. இந்நிலையில் அமெரிக்கவின் செனட் சபையின் மூத்த உறுப்பினரான லிங்சுகிரகாம் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்து உள்ளார். அதனை 8 எம்.பிகள் வழிமொழிந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் […]

Categories
அரசியல்

“தனி போக்குவரத்து” பெட்ரோல்… டீசல் காலம்லா போச்சு…. இனி இதுக்குதான் மவுசு…!!

எதிர்காலத்தில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே மவுசு இருக்குமென பொதுமக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவி வருகிறது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நமது வாழ்வியல் முறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. நாம் நினைத்துப் பார்க்க முடியாத பல துறைகளில் ஒருபுறம் நஷ்டம் ஏற்பட்டாலும், மறுபுறம் நமது பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதனை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அந்த வகையில், போக்குவரத்து துறையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு பின்….. “மருத்துவத்துறை” இலவசமாகுமா…? அதீத வியாபாரமாகுமா…?

கொரோனாவுக்கு பின் மருத்துவத் துறையில் என்னென்ன மாற்றங்களை நிகழும் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். கொரோனா வைரஸ் நோய் நம் வாழ்வியல் முறைகளை நாம் எதிர்பார்க்காத அளவிற்கு புரட்டிப் போட்டுள்ளது. பலரது வாழ்வியல் இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில், மருத்துவத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், கியூபா உள்ளிட்ட நாடுகள் மருத்துவத்தை இலவசமாக வழங்கியதன் அடிப்படையே அங்கு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு இறப்பு விகிதமும் குறைவாக […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ….. ஊரடங்கு முடியட்டும்….. தயார் நிலையில் ரசாயனத்துறை….!!

வருங்காலத்தில் தொழில் துறையில் கொடிகட்டி பறக்கும் துறையாக ரசாயனத் துறை இருக்கும் என நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கொரோனோ வைரஸ் இன்று நம் வாழ்வியல் முறைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இனி வரக்கூடிய காலங்களில் பலர் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பல வதந்திகள் கூறப்பட்டு வந்தன. ஆனால் இதற்கெல்லாம் மாறாக வேலை இழப்புகள் ஒருபுறம் ஏற்பட்டாலும், பல்வேறு துறைகளில் புதிய புதிய வாய்ப்புகளை தந்திருக்கிறது. அந்த வகையில், ரசாயனத் துறையில் அதீத […]

Categories
அரசியல்

“LOCKDOWN” முடிஞ்சாலும்….. ஷாப்பிங் போக வேணாம்….. ஆன்லைன்ல பாத்துக்கலாம்…!!

ஆன்லைன் வர்த்தகத்தின் மதிப்பு இனி வரக்கூடிய காலங்களில் அதிகரிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் நோய் இன்று பலரிடையே வாழ்வியல் முறைகளை ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டது. நகரங்களில் வசிப்போர் எல்லாம் வார இறுதியில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஷாப்பிங் மால் உள்ளிட்டவற்றுக்கு சென்று ஷாப்பிங் செய்து வந்து பொழுதை கழித்து மனமகிழ்ந்து வருவர். அதில் ஒரு அனுபவம் இருக்கிறது என்றும் பெருமையாக கூறி வந்திருந்தனர். அவ்வாறு கூறிக் கொண்டிருந்தவர்கள், அனைவரும் தற்போது ஆன்லைன் ஷாப்பிங்க்கு […]

Categories
அரசியல்

“கொரோனா யதார்த்தம்” எரிச்சல் அடைந்தாலும்….. இனி இதுதான் வாழ்க்கை…!!

கொரோனா வைரஸ் நம் வாழ்வியல் முறைகளில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கொரோனா வைரஸ் நோயானது ஒரு கொள்ளை நோய். நம்முடைய அணுகுமுறை மற்றும் வாழ்வியலை முற்றிலும் மோசமாக புரட்டிப் போட்டு விட்டது. அதிலும் மிக முக்கியமானது இனி வரக்கூடிய காலங்களில் கூட்டமாக சேர்ந்து பணியாற்றுவது, நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது சாத்தியமில்லை. வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும்,  மிக குறைவாகவே இருக்கும். உலக சுற்றுலா மேற்கொள்ள முடியாது. பக்கத்து மாநிலத்துக்கு செல்ல வேண்டுமென்றாலும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,213 பேருக்கு கொரோனா …!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு 3,000 என்ற அளவில்தான் தான் இருந்து வந்தது. ஒரு நாளைக்கு 3,200 3,500 என்று தான் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது ஒரே நாளில் 4 ஆயிரத்து 213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இப்படி வந்துள்ள எண்ணிக்கை நிச்சயமாக ஒரு […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள்

செங்கல்பட்டில் ஒரே நாளில் 9 1 பேருக்கு கொரோனா …!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த இரண்டு நாட்களில் தோராயமாக 83 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. அதில் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்கள். அந்த வகையில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது . இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்கள். அதேபோல காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த அனைவரையும் கண்டறிந்து, […]

Categories
அரசியல்

கொரோனவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் சரியான திட்டமில்லை: ராகுல் காந்தி..!

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் சரியான திட்டமிடல் இல்லை என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மாநில அரசுகளை ஆலோசிக்காமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இது விமர்சிப்பதற்கான நேரமில்லை, அதே நேரத்தில் பொது முடக்கத்தில் இருந்து மீள சரியான உத்தி தேவை என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இப்போது தேவை ஆதரவும், நிதி உதவியும் தான். ஏழை மக்கள், கூலித் தொழிலாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவை தொடர்ந்து….. சத்தீஸ்கரில் விஷவாயு தாக்கம்….. 7 பேருக்கு தீவிர சிகிச்சை….!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது விஷவாயு தாக்கி மயக்கமடைந்த 7 தொழிலாளர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை ஒன்று செயல்பட்டுவருகிறது. இதனை சுத்தப்படுத்தும் பணியில் இன்று 7 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கி 7 பேர் ஆலையின் உள்ளே மயக்கம் அடைந்து விழுந்தனர். பின் இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் முகத்தில் கவசம் அணிந்து கொண்டு உள்ளே சென்று […]

Categories
தேசிய செய்திகள்

பிணங்களுக்கு நடுவே…. கொரோனா சிகிச்சை….. சர்ச்சையை கிளப்பிய வீடியோ…!!

மகாராஷ்டிராவில் சடலங்களுக்கு நடுவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்று உலகளவில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனாவை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா விளங்குகிறது. தற்போது அங்கே சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்களும், […]

Categories
தேசிய செய்திகள்

இனி சரக்கு… வீட்டிற்கே டோர் டெலிவரி….. சொமேட்டோ நிறுவனம் அதிரடி

மது பாட்டில்களை வீட்டுக்கே டெலிவரி செய்ய சொமேட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்க தமிழக அரசு முடிவெடுத்தது. அந்த வகையில், மதுபான கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் மது விற்பனையால் கொரோனா பாதிப்பு ஏற்படுவதுடன் பல்வேறு குடும்பங்கள் மேலும் வறுமைக்குள் தள்ளப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் […]

Categories
உலக செய்திகள்

உண்மை என்ன…? “கொரோனா பரவல்” இதுதான் காரணம்….. ஆதாரத்துடன் வெளியான உண்மை….!!

கொரோனா பரவல் முற்றிலும் இயற்கையாக நடந்த ஒன்று என பெருந்தொற்று நிபுணர் அன்டோனி பௌசி ஆதாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.  சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த  வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் வௌவால்கள்  மூலம் வேறு விலங்கிற்கு பரவி  அதன் மூலம் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்றும், இது சீனாவின் ஹுக்கான்  நகரில் உள்ள விலங்கு சந்தை மூலமாக மனிதர்களிடையே […]

Categories
மாநில செய்திகள்

3 நாளுக்கு ஒருமுறை…… 2 ஆஃப் அல்லது 4 குவாட்டர்…… தமிழக அரசு அறிவிப்பு….!!

தமிழகத்தில் இனி ஒரு நபருக்கு  3 நாளுக்கு ஒருமுறை  மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடும் எதிர்ப்புக்கு பிறகு இன்று முதல் பெரும்பாலான பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகின்றன. இதுவரை ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கும் கொரோனா மதுக்கடைகள் திறந்தபின் தாறுமாறாக அதிகரித்து விடக்கூடாது என்பதில், தமிழக அரசும், காவல் துறையினரும் கவனமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தற்போது புதிய அறிவிப்பை […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு விதி மீறல்….. ரூ4,46,89,179 அபராதம் வசூல்….. தமிழக காவல்துறை தகவல்….!!

தமிழகத்தில் ஊரடங்கை  மீறியவர்களிடமிருந்து  ரூ4,46,89,179 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா  பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்  முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில்தேவையின்றி ஊரடங்கு  விதிகளை மீறி வெளியே வருவோர்  மீது கடுமையான நடவடிக்கைகளை தமிழக காவல்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.  அந்த வகையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை  மீறியதாக கூறி  4,32,061 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுக்கப்பட்டுள்ளதாக  காவல்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் ஊரடங்கை  மீறியதாக இதுவரை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கொரோனா” மோடியின் கணிப்பால்….. சிறப்பான இந்தியா….. அமைச்சர் புகழாரம்…!!

மோடியின் கணிப்பால் தான் தற்போது இந்தியா கொரோனாவை சிறப்பாக கையாண்டு வருவதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வர, வல்லரசு நாடுகளான அமெரிக்கா போன்றவற்றை ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு, மற்றும் உயிரிழப்பு குறைந்த விகிதத்திலையே இருக்கிறது. மேலும் முன்பை காட்டிலும் கொரோனா பரவல்  குறைந்திருப்பதாகவும், 12 […]

Categories
அரசியல்

மே-17க்கு பின்….. 50% பேருந்துகள் இயக்கம்…… “6 அடி” சமூக இடைவெளி சாத்தியமா….?

தமிழக பேருந்தில் 6 அடி இடைவெளி விட்டு பயணம் செய்வது சாத்தியமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4500 கடந்துள்ள நிலையில், அதனுடைய தாக்கத்தைக் குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் என்று தமிழக மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழ்நிலையில், மே17 இற்குப் பிறகு இதனுடைய தாக்கம் குறையுமா என்று கேள்வியும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அங்க சுற்றி…. இங்க சுற்றி…. இறுதியில் CM வீட்டிற்கே வந்த கொரோனா….. சென்னையில் பரபரப்பு…!!

சென்னை முதல்வர் இல்லத்தில் பணிபுரிந்த பெண் காவலர்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பு 4500ஐ கடந்துள்ளது. அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடமாக தமிழகத்தின் தலைநகரான சென்னை உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் வீட்டில் அவரது பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ட்விட்டர் அப்புடினா என்ன….? பிரபல நடிகர் வீடியோவால்…. சமுகவளதளத்தில் சர்ச்சை….!!

சமீபத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்களின் பெயரில் டுவிட்டர் பக்கம் ஒன்று ஓபன் செய்யப்பட்டு வைரலாகி வரும் சூழ்நிலையில், டுவிட்டர் என்றால் என்னவென்றே  எனக்குத் தெரியாது என அவர் கருத்து தெரிவித்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடைபெற்று  வரக்கூடிய கோளாறு என்னவென்றால், பிரபலங்கள் நிறைய பேர் இது போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி இருக்கவே மாட்டார்கள். அப்படி இருக்கும் நபர்களின் பெயர் பட்டியல்களை கண்டறிந்து அதிக followersகளை  பெற […]

Categories
உலக செய்திகள்

என் பேச்சை கேட்கல….. அதான் இத்தனை சாவு…. USA சுகாதார துறை அதிகாரி புகார்…!!

கொரோனா  விஷயத்தில் அமெரிக்கா மிகப் பெரிய தவறிழைத்து விட்டது என BARDA வின்  முன்னாள் இயக்குனர் புகார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் இன்று 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடி வரும் இந்த வைரசை அந்நாட்டு அரசு நினைத்திருந்தால் முன்பே கண்டுபிடித்து தடுத்திருக்க முடியும் என்றும், அமெரிக்கா கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தவறு செய்து விட்டது என்றும், இந்த தவறுகள் அனைத்திற்கும்  அந்நாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” நமக்கு கிடைத்த ஆசிர்வாதம்….. மத்திய அமைச்சர் கருத்து….!!

கொரோனா வைரஸ்  நமக்கு கிடைத்த மறைமுக ஆசிர்வாதம் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா  வைரஸ் உலக அளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வர, பொதுமக்கள் அச்சத்தில் ஒருபுரமிருக்க, மற்றொருபுரம் இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசால் விதிக்கப்பட்ட ஊரடங்கினாலும்  பல குடும்பங்கள் வேலை வாய்ப்பின்றி, வருமானமின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இதிலிருந்து மீண்டு எழுவதற்கான நேர்மறையான […]

Categories
மாநில செய்திகள்

“NO டாஸ்மாக்” 30 கிமீ சுட்டெரிக்கும் வெயிலில் நடைபயணம்…. சிறுவர்களுக்கு குவியும் பாராட்டு…!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 5 சிறுவர்கள் 30 கிலோமீட்டர் வரை வெயிலில்  நடைபயணம் மேற்கொண்ட சம்பவம் நெட்டிசன்கள் மற்றும் குடிமகன்களிடையே குற்ற உணர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. கொரோனா  பாதிப்பை  தடுப்பதற்காக மே 17 வரை ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மால்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அதிக கூட்டம் கூடும் இடங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மாநில அரசுகளும், அதற்கு தடை விதித்திருக்கும் பட்சத்தில், அதிகளவில் கூடும் இடமான மதுபான […]

Categories
தேசிய செய்திகள்

இப்போதைக்கு கொரோனா போகாது….. நாம் தான் வாழ்வியலை மாற்றி கொள்ள வேண்டும்….. ஹர்ஷ்வர்தன் கருத்து…!!

கொரோனா வைரஸ் நீண்ட நாளுக்கு நம் நாட்டில் இருக்கும் நாம் தான் நம் வாழ்வியல் முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில்  மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக  சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகழுவுதல், உள்ளிட்டவற்றை  தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும், சிறுசிறு அலட்சியங்களால்  நோய் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆரோக்கிய சேது” 9,00,00,000 மக்களின் DATA…… நாளை பதிலளிக்கிறேன்….. மத்திய அரசுக்கு ஹேக்கர் பதில்…!!

ஆரோக்கியா சேது செயலியை ஹேக் செய்வது குறித்து நாளை உங்களை தொடர்பு கொள்கிறேன் என பிரான்ஸ் ஹேக்கர் ஒருவர் மத்திய அரசின் ஆரோக்கிய சேது  செயலியின்  ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு தனியார் மற்றும் அரசு சார்பில் இயக்கப்படும் நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டு நிறுவனங்களை இயக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் ஆரோக்கியா சேது செயலியை கட்டாயம் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு அழிவு….. காப்புரிமைக்காக WAITING…. உலக மக்கள் மகிழ்ச்சி….!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்க்கான தடுப்பு மருந்தை இஸ்ரேல் அரசு கண்டுபிடித்துள்ளது. உலக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளில் கோரதாண்டவம் ஆடி வருகிறது.  இன்று வரை அமெரிக்காவில் இறப்பு விகிதம் 72 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், இந்தியாவில் அதனுடைய மொத்த பாதிப்பு பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கும் உள்ளது. 33, 538 […]

Categories
மாநில செய்திகள்

சொந்த ஊர்….. சொந்த நாட்டிற்கு திரும்ப…. 4 வகை இணையதள முகவரி….!!

வெளியூர், வெளிமாநிலம் அல்லது பிற நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிகள் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் இருந்து தற்போது கொரோனா பாதிப்பு தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், ஒரு சில தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பொதுமக்கள் வேறொரு மாவட்டங்களுக்கோ அல்லது மாநிலங்களுக்கோ அல்லது பிற நாட்டில் வசிக்கும் தமிழர்கள் இந்திய நாட்டிற்குள்ளேயோ தற்போது வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலிருந்து காரில் வெளியூர் செல்வோர்  tnepass.tnega.org என்ற இணையதள முகவரியில் […]

Categories
அரசியல்

மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு… நாளை “கருப்புச்சின்னம்” அணியுங்க: மக்களுக்கு திமுக கூட்டணி கோரிக்கை!

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து மக்கள் அனைவரும் நாளை கருப்புச்சின்னம் அணியுமாறு திமுக தலைமையிலான கூட்டணி கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், அதற்கு திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி காட்சிகளில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக அரசு கொரோனா தடுப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்காமலும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

AC இருந்தா…… வெளியே ஸ்டிக்கர் ஓட்டணும்…… சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!

ACயை இயக்காமல் கடை நடத்த விரும்புவோர் கடைக்கு வெளியில் ஸ்டிக்கரை ஒட்டி கடை நடத்தலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவை மே 17ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஆனாலும் பல்வேறு பகுதிகளில் சிகப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களின் அடிப்படையில் சில தளர்வுகள் உடன் தனிகடைகளை  மே 4ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உள்ளிட்ட பிற மாநில அரசுகளும் அனுமதி அளித்திருந்தனர். அந்த வகையில், தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா பாதிப்பு” நாளொன்றுக்கு ஒரு முறை மட்டும் தான்….. மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு….!!

இனி நாளொன்றுக்கு ஒரு முறை மட்டுமே கொரோனா குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை உயரும் அதே சமயத்தில் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவைப் பொருத்தவரையில் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதற்கான தகவல்களை அந்தந்த மாநில அரசுகள் அவ்வப்போது மக்களிடையே தெரிவித்து வந்தது. அந்தவகையில், காலை மாலை என இருவேளைகளில் இதுவரை கொரோனா குறித்த தகவல்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசு வருமானம் கொடுக்கணும்….. மக்களிடமிருந்து பிடுங்க கூடாது…… MP கனிமொழி ஆதங்கம்…!!

டாஸ்மாக் கடை திறக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமென எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீக்கப்பட்டாலும், ஒருசில தளர்வுகளுடன் கடைகளைத் திறக்கலாம் வணிகர்கள் வியாபாரங்களை மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த வகையில், டாஸ்மாக் கடைகளை திறக்கவும் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வருகின்ற ஏழாம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்றும் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

“ஜூன்-1” LOCKDOWN END….. அனைத்திற்கும் அனுமதி…. மத்திய அரசு தகவல்….!!

மே 20ம் தேதிக்குப் பிறகு போக்குவரத்தில் படிப்படியாக மாற்றம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து சிறு குறு வியாபாரிகள் நடத்தக்கூடிய தனிகடைகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு திறக்கப்படுகின்றன. இருப்பினும் சிவப்பு மண்டலமாக இருக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து வசதி என்பது முற்றிலும் தடைபட்டுள்ளது. அதேபோல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டத்திற்கோ அல்லது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டாஸ்மாக் ஓபன் ஏன்…? ஒரிஜினல் இருக்கும் போது….. போலி போனி ஆகிட கூடாது….. அமைச்சர் விளக்கம்….!!

போலி மதுபாட்டில்கள் விற்பனையை தடுப்பதற்காகவே டாஸ்மாக் ஓபன் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நிலுவையில் உள்ள சமயத்தில், சில கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தனிக் கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. அந்த வரிசையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வருகின்ற மே 7-ஆம் தேதி முதல் சென்னையயை  தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை நடைபெறும் […]

Categories
அரசியல்

எதுவுமே சரியாகல….. பொய்யான தோற்றமளிக்கும் தமிழக அரசு….. ஸ்டாலின் குற்றசாட்டு…!!

தமிழகத்தில் கொரோனா  சரியாகி வருவது போன்ற பொய்யான தோற்றத்தை அரசு வெளியிட்டு வருவதாக திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  கடந்த மாதத்தில் கொரோனா பாதிப்பு எந்த அளவிற்கு அதிகமாக பரவி வந்ததோ அதற்கு சரி நிகராக குணமடைந்து வீட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் நடந்த சின்ன சின்ன அலட்சியங்களால் மிகப்பெரிய பாதிப்பை தற்போது தமிழகம் சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒவ்வொரு தவறும்…… உயிர் பலி வாங்குவது தெரியவில்லையா….? அரசு தலைமையிடம் கமல் கேள்வி….!!

அரசின் தவறுகள் உயிர்பலி வாங்குவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை  தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை,  மே 17 வரை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது.  இருப்பினும் பல்வேறு தகவல்களின் அடிப்படையில், தனிக் கடைகள் இயங்கும் என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், முடி வெட்டும் கடை, அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர பிற தனிக் கடைகள் திறக்கலாம்  என […]

Categories
அரசியல்

புதிய பாதிப்பு – 4….. 2 ஏரியாக்களுக்கு சீல்…… வெளியே வரவும்முடியாது, உள்ளே நுழையவும் முடியாது……!!

கோவையில் 4 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்புஏற்பட அவர்கள் வசித்த பகுதி முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பகுதியை அடுத்த வேலாண்டிபுரத்தில் 10 வயது சிறுமி உட்பட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதற்கு அருகில் இருக்கக்கூடிய வெங்கடாபுரம் பகுதியில் 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 4 பேரும் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள் சென்னை தேசிய செய்திகள்

தெற்காசியாவில் முதன்முறை….. “கழிவுநீரில் கொரோனா” சாதனை படைத்த சென்னை…!!

சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வாரியம் கழிவுநீர் தொட்டியில் இருந்து இறந்த கொரோனா வைரஸ் செல்களை கண்டறிந்துள்ளது.  சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு வாரியம், களிவுநீரில் கொரோனா வைரஸ் இருக்கிறதா? அதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதா? என்ற ஆராய்ச்சியில் இறங்கியது. அதன்படி, பெருங்குடி, அடையாறு, நெசப்பாக்கம், கோயம்பேடு, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள கழிவு நீர் மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொண்டது. அதில், கொரோனா வைரஸின் […]

Categories
தேசிய செய்திகள்

3…5 லிருந்து 12 நாட்களாகிடுச்சு…… குறைந்தது கொரோனா பரவல்….. NITI தகவல்….!!

கொரோனா பாதிப்பு இந்தியாவில் வேகமாக குறைந்து வருவதாக மத்திய நிதி ஆயோக் குழு கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் தொடர்ந்து பதற்ற நிலையில் இருந்தனர். இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட மத்திய நிதி ஆயோக் குழுவானது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் ஊராடங்கின் முதல் கட்டத்தில் 5 நாட்களில் இரண்டு மடங்காக பரவி வந்ததாகவும், அதற்கு முன் மூன்று நாட்களில் இரண்டு மடங்காக பரவி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஊரடங்கு விதிமீறல்” ஒரே நாளில்….. 70 வாகனம் பறிமுதல்….. 202 பேர் கைது….!!

தர்மபுரியில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாகக் கூறி 202 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக இன்று முடிவடைய இருந்த ஊரடங்கை மே 17ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் சில பகுதிகளில் விரக்தி அடைந்த மக்கள் தொடர்ந்து ஊரடங்கு நீட்டித்துக் கொண்டே தான் இருக்கும் இப்படியே சென்றால் பிழைப்பு என்னாவது என வெளியில் சுற்றித் திரிவதும், தடைகளை மீறி கடைகளை திறப்பதுமாக, தொடர்ந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

முடி வெட்டாதீங்க….. 3 பேருக்கு கொரோனா….. சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் சமீபத்தில் சலூன் கடையில் முடி வெட்டிய 3 இளைஞர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக அது சிவப்பு மண்டலமாக அறிவிக்கபட்டதுடன், பல்வேறு மண்டலங்கள் கடும் பாதுகாப்புடன் கவனிக்கப்பட்டு வருகின்றன. சென்னை நகரில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. அதில், ஓரிரு மண்டலங்களை தவிர அனைத்து மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்பு என்பது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் அப்பகுதியில் காவல்துறையினரும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா நிவாரணம்… அவரு கொடுத்துட்டாரு… நீங்களும் கொடுங்க… நடிகர்களிடம் உதவி கேட்கும் லாரன்ஸ்!

கொரோனா நிவாரண நிதி உதவியாக ராகவா லாரன்ஸ் நடிகர்களிடம் உதவி கேட்டு வேண்டுகோள் வைத்துள்ளார். இது தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ்அவரது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நான் கொரோனா வைரஸின் நிவாரண நிதிக்காக ரூ.3 கோடி வழங்குவதாக அறிவித்தேன். அதன் பிறகு பெரும்பாலான மக்களும், பிற சங்கங்களை சேர்ந்தவர்களும் என்னிடம் உதவி கேட்க அணுகினர். ஆகவே வினியோகஸ்தர் சங்கத்துக்கு ரூ.15 லட்சமும், நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சமும், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்கியுள்ளேன். மக்களுக்கு சேவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எனக்கு இப்போ சமைக்க தெரியும்…எல்லோரும் ருசிக்க சாப்புடுறாங்க…அசத்தும் ராஷி கன்னா…!!

கொரோனா ஊரடங்கில் நான் மிகவும் ருசியாக சமைப்பதற்கு கற்றுக்கொண்டேன் என நடிகை ராஷி கன்னா கூறியுள்ளார். கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அனைத்து திரை பிரபலங்களும் வீட்டில் தங்களுக்கு பிடித்த செயல்கள் என குடும்பத்தோடு பொழுதை கழிக்கின்றனர். அந்த வகையில் தமிழ் மொழி சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார் நடிகை ராஷி கன்னா. இவர் தெலுங்கு மொழி சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக உள்ளார். நடிகை ராஷி […]

Categories
அரியலூர் கடலூர் தஞ்சாவூர் திருவாரூர் மாநில செய்திகள்

நாளை முழு ஊரடங்கு….. வெளியே வரக்கூடாது….. 4 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி…!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கை கடைபிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், முதன்முதலாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு என அறிவித்தார். இவர் அறிவித்ததை தொடர்ந்து திருவாரூர், அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள் தங்களது மாவட்டத்தில் நாளை ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தற்போது முழு ஊரடங்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

“முதல் பாதிப்பு” ஒரே ஒரு நபரால் பறிபோன சுதந்திரம்….. அதிருப்தியில் கிருஷ்ணகிரி மக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பச்சை மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலமாக அம்மாவட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை கொரோனோ நோய் பாதிப்பு இல்லாமல் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனோ பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த நபர் ஒருவருக்கு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட்டு உள்ளது. எனவே பச்சை மண்டலத்திற்கான […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பா?… டெல்லியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்..!

டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், பரிந்துரைகள் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 38வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இந்தியாவில் 35 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. இதையடுத்து […]

Categories

Tech |