கொரோனா தடுப்பூசி மையம் பூட்டி கிடப்பதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். தமிழக அரசு கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி மணியகாரம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட தடுப்பூசி மையமானது ஒரு நாள் மட்டுமே செயல்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நாளில் சுமார் 700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அதன் பிறகு தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை. அதன் பின் அங்கு தடுப்பூசி போடுவதற்காக […]
