அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் கோவை பூ மார்க்கெட் சாலையில் மாநகராட்சி ஊழியர்கள் 10 பேர் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தவர்களை பிடித்து விசாரித்துள்ளனர். அதன் பின் மாநகராட்சி ஊழியர்கள் அவர்களை முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
