அதிகாரிகள் செய்த தொந்தரவால் பேருந்து நடத்துனர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில் உள்ள வ.உ.சி நகரில் இளவரசன் என்பவர் வசித்து வந்தார். இவர் மனைவி கீதா பிரியா. இவர்களுக்கு ஒரு மகனும்,ஒரு மகளும் உள்ளனர். இளவரசன் 14 ஆண்டுகளாக தண்டையார்பேட்டை அரசு பணிமனைக்குட்பட்ட பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சென்ற மாதம் பயணச்சீட்டு வழங்குவதில் தவறு செய்ததாக அதிகாரிகளிடம் இருந்து இவருக்கு “மெமோ” வழங்கப்பட்டுள்ளது. […]
