தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளதை உறுதிசெய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் உள்ள 3,090 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், 2,939 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கும் பணி, லார்சன் டர்போ நிறுவனம் மூலம் நிறைவேற்றப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளிக்கும் இணைய வசதியுடன் […]
