பிரதமர் மோடி ஏன் கேரள முதல்வர் பினராயி விஜயனை பின்பற்றக் கூடாது என பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனோ அச்சம் காரணமாக அனைத்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு உதவும் வண்ணம் பல அதிரடி நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி சுமார் ரூ20,000 கோடி நிதியை கொரோனோ நோய் தாக்கத்திற்கு உதவும் வகையில் ஒதுக்கியுள்ளது. மேலும் அனைத்து வீடுகளுக்கும் மாதம் முழுவதும் இலவச ரேஷன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. […]
