திருமணத்திற்குப் பிறகு கணவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொடுமைபடுத்துவதாகக் கூறி காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணை காவல் துறையினர் மீட்டனர். சென்னை அனகாபுத்தூர் திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் மேரி மெர்சி (22). இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் சகாய பிரவீன் என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து சில நாள்களுக்குப் பிறகு கணவர் சகாய பிரவீன், அவரது தந்தை பிரபல தொழிலதிபர் வர்கீஸ், தாயார் ஆகியோர் மேரியை […]
