சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அரசின் உத்தரவை மீறும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேட்டில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொண்ட போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறும்போது, செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக கொடுக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து காணும் பொங்கல் கொண்டாடுவதற்காக பொழுதுபோக்கு மையங்கள், கடற்கரை என பொது இடங்களுக்கு […]
