இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, அப்துல்கலாம் அவர்களின் நினைவுதினம் இன்று ஆகும் . இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான திரு. அப்துல்கலாம் அவர்கள் அக்டோபர் 15, 1931 ம் ஆண்டு ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த கலாம், […]
