கொழும்பிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ. 32 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், பல்வேறு நாடுகளிலிருந்து சென்னை வந்த பயணிகளின் உடமைகளைச் சோதனையிடும் பணியில் சுங்கத் துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ராவுத்தர் (43), கடலூரை சேர்ந்த சையத் முஸ்தபா (26), புதுக்கோட்டையைச் சேர்ந்த உதயகுமார் (40) ஆகியோரை நிறுத்தி விசாரித்தனர். […]
