அனைத்துக் கல்லூரிகளும் நாளை முதல் செயல்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனையடுத்து மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்ததால் புதுச்சேரியில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதோடு கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி முதல் ஆராய்ச்சி படிப்புகள், தனியார் கல்லூரிகளில் […]
