கல்லூரி மாணவர் இரவு நேரத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கோலியனூர் பகுதியில் மகேந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மகேந்திரா தனது சாதி சான்றிதழ் வழங்குமாறு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். அந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் 31.12.2021 தேதிக்குள் மகேந்திராவுக்கு […]
