வாக்குசாவடியை பார்வையிட சென்ற கலெக்டர் பொதுமக்களை இடைவெளி விட்டு நிற்குமாறு அறிவுறுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 3 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டதை மாவட்ட கலெக்டர் டி.மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது சாலை அகரம் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருப்பதை கலெக்டர் பார்த்துள்ளார். உடனே அங்குள்ள அதிகாரிகளை அழைத்து வாக்காளர்களை சமூக இடைவெளி விட்டு நிற்க […]
