ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களிடமிருந்து இதுவரை 11 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத்தொடர்ந்து, பொது மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டது. ஆனால் சிலர் தடையை மீறுவதால் அவர்களுக்கு தமிழக காவல்துறை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 77 நாட்களில், விதிகளை மீறிய […]
