5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாமகவினர் அதனை பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழ்நாடு அரசு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி பாமக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்திருந்தது. பாமகவின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ராமதாஸை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியது. இதனைத்தொடர்ந்து […]
