கோவையில் மாவட்டத்தில் ரூ.238.40 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். கோவையில் ரூ.166 கோடி மதிப்பிலான பில்லூர் 3வது குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். உக்கடத்தில் ரூ.39.74 கோடியில் புனரமைக்கப்பட்டு பெரிய குளத்தில் வடபுற குளக்கரையை மக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் திறந்து வைத்துள்ளார். வாலங்குளம் மேம்பாலத்தின் கீழ் ரூ.23.83 கோடியில் புனரமைக்கப்பட்டு பகுதி, ரூ.2.68 கோடியில் கட்டப்பட்டுள்ள அன்னுர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார். […]
