Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் பேரணி!

மயிலாடுதுறை அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் தேசியக் கொடியுடன் 1000க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர். இந்திய அரசியலமைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்பப் பெறக் கோரியும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூர் இஸ்லாமிய அமைப்பினர் தேசியக் கொடியை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். நீடூர் பள்ளிவாசலில் தொடங்கிய இப்பேரணி, முக்கிய கடை வீதிகள் வழியாக சென்று நெய்வாசல் என்ற இடத்தில் முடிவடைந்தது. பேரணியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து […]

Categories
தேசிய செய்திகள்

சிறையில் இருக்கும் தொண்டர் குடும்பத்தைச் சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் காங்கிரஸ் தொண்டரும், பெண் சமூக செயற்பாட்டாளருமான சதாப் ஜாபர் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடிய காங்கிரஸ் தொண்டரும், பெண் சமூக செயற்பாட்டாளருமான சதாப் ஜாபர் உத்தரப் பிரதேசக் காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்ற பிணை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவரின் வீட்டிற்குச் சென்று, அவரது குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேரணிக்கு அனுமதி மறுப்பு: தடையை மீறுமா திமுக?

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக தலைமையில் நாளை நடைபெறவுள்ள பேரணிக்கு மாநகர காவல் துறையினர் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பேரணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. கல்லூரி மாணவர்கள், எதிர்க்கட்சிகள் என ஒன்றாகத் திரண்டு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இதற்கு மறுபுறம் பாஜக, இந்து அமைப்புகள் சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

‘தடையை மீறி திமுக நடத்தும் பேரணி’… சிசிடிவியை சரிபார்க்கும் பணியில் போலீஸ்..!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தடையை மீறி திமுக நடத்தும் பேரணியில், ஏதேனும் வன்முறை நடந்தால் அதனைக் கண்டுபிடிக்கும் வகையில் காவல் துறையினர் கண்காணிப்புக் கேமராக்களை சரி செய்து வருகின்றனர். சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நாளை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திலிருந்து பேரணியாகச் சென்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளனர். அந்தப் பேரணி தாளமுத்து நடராஜன் மாளிகையிலிருந்து, லேங்ஸ் தோட்டச் சாலை வரை நடைபெறுகிறது.பேரணியில் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

கண்டிப்பா வந்துருங்க… பேரணியில் பங்கேற்க கமலை நேரில் அழைத்த திமுக..!!

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்க கமலுக்கு திமுக நேரில் அழைப்பு விடுத்துள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளிலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி  ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கல்லூரி மாணவர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மசோதாவுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ், […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் செல்போன் சேவை நிறுத்தம்..!!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும் நிலையில், மத்திய அரசின் உத்தரவால் டெல்லியில் சில பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளிலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டின் வடகிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இப்போராட்டத்தில் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே […]

Categories

Tech |