Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் அறிவோடு பேச வேண்டும்”- ஹெச்.ராஜா எச்சரிக்கை..!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசிவரும் வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் அறிவோடு பேச வேண்டும் என பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடுமையாக சாடியுள்ளார். மத்திய அரசு  கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு  எதிராக நாட்டின் வடக்கிழக்கு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து தமிழகத்திலும் மாணவர்கள்  போராட்டம் வெடித்தது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். குறிப்பாக […]

Categories
Uncategorized அரசியல் தேசிய செய்திகள்

‘ மோடி ஆட்சியில் 600 இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது’ – அமித் ஷா

டெல்லி: மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாட்டில் இருந்து வந்த 600 இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என அமித் ஷா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என அமித் ஷா கூறியுள்ளார். மேலும் இது உறுதியான தீர்மானம் என்றும், இந்தத் தீர்மானத்தை தவறாகப் புரிந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றும் மோடி அரசு […]

Categories
Uncategorized செய்திகள் தேசிய செய்திகள்

வன்முறையை நிறுத்தினால் மட்டுமே வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்!

மாணவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகளை இரு பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு உச்சநீதிமன்றத்திடம் வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் கொலின் கோன்சால்வ்ஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டனர். ஜாமிய பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல் குறித்த வழக்கை நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை கைவிட்டு  அமைதி காத்தால் மட்டுமே வழக்கை விசாரிப்போம் என உச்ச நீதிமன்ற தலைமை […]

Categories

Tech |