மதுரையில் உள்ள காப்பகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து குழந்தைகள் அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டதில் உள்ள சமயநல்லூர் பகுதியில் குழந்தைகள் காப்பகத்தை மாசா அறக்கட்டளை சார்பில் கருமாத்தூரைச் சேர்ந்த ஞானபிரகாசம் மற்றும் ஆதிசிவன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்த காப்பகத்தில் 25 சிறுமிகள் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் ஆதிசிவன் என்பவர் அங்குள்ள 4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து விசாரணை செய்த போலீசார் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். […]
