5 மாத பெண் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை பேருந்து நிலையத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது மனைவி சங்கீதா மற்றும் 4 குழந்தைகளுடன் தங்கியிருந்துள்ளார். இவர் பழைய துணிகளை வாங்கி விற்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேலை காரணமாக மணிகண்டன் தனது குடும்பத்துடன் ஆனைமலை பேருந்து நிலையத்தில் இருந்துள்ளார்கள். இதனையடுத்து மணிகண்டன் பண உதவி கேட்டு அருகில் இருப்பவர்களை பார்ப்பதற்காக […]
