7 நாடுகள் பங்குபெரும் சிலம்பம் போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய நிதி வசதி இல்லாமல் மலேசியா செல்ல முடியாததால் தர்ஷினி வேதனை தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கள் கிராமத்தை சேர்ந்த சங்கரனாதனின் மகள் ஸ்ரீ தேவதர்ஷினி நன்காம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் சிலம்ப போட்டிகளில்பல சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் நடைபெற்ற 7 நாடுகள் பங்கு பெற்றஆசிய சாம்பியன் ஷிப் சிலம்ப போட்டியில் மினி சப்-சீனியர் பிரிவில் ஸ்ரீ தேவதர்ஷினி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். […]
