கோவை: தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறாகப் பதிவிட்டதாக குனியாமுத்தூர் இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கோவை கரும்புக்கடை சேரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிராஜுதீன். இவர் சமூக வலைதளங்களில் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை ஆபாசமாகவும், தரக்குறைவான முறையிலும் செய்திகளைப் பரப்புவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, குனியமுத்தூர் காவல் துறை வழக்குப்பதிவு செய்து, அவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இவர் பல […]
