நதிநீர் பிரச்சனை தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விரைவில் சென்னை வந்து தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க உள்ளதாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வந்திருக்கும் கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். பின்னர் மூவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் […]
