புதுச்சேரியில் 122 ஆண்டு பழமையான பஞ்சு ஆலையை மூடப்படுவதாக வந்த அறிவிப்பு அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் 1898 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் ஏஎப்டி என்ற பஞ்சாலை. இந்த பஞ்சாலையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாக சீர்கேடுகள் பல்வேறு முறைகேடுகள் மற்றும் நவீன காலத்திற்கேற்ப புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பஞ்சாலை நஷ்டத்தை சந்தித்து […]
