கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் பரவியதை அடுத்து ஃபெடரல் உணவு பாதுகாப்பு அலுவலகம் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை கோழிப் பண்ணைகளை மூட உத்தரவிட்டுள்ளது. ஜெர்மனியில் மார்ச் 22ஆம் தேதி முதல் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகளை நேரடியாக விற்பனை செய்யாமல் மொபைல் கோழி வர்த்தகர்கள் மூலம் விற்கப்பட்டதால் இந்த நோய் ஜெர்மனியில் பல மாநிலங்களில் வேகமாக பரவியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக கோழிப் பண்ணைகளை மூட பெடரல் உணவு பாதுகாப்பு அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. […]
