என் மகளின் சாவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட பாத்திமாவின் தந்தை சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப். இவர் சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை பட்டம் படித்துவந்தார். கடந்த சனிக்கிழமை பாத்திமா லத்தீப் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.தற்கொலை குறித்து காவல் துறையினர் விசாரித்து வரும் நிலையில் மன அழுத்தத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னை […]
