Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சடென் பிரேக் போட்டதால்… பேராசிரியருக்கு நடந்த விபரீதம்… சென்னையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பல்கலைக்கழக பேராசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாடம்பாக்கம் பகுதியில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்லாவரத்தில் இருக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அசோக்குமார் பல்கலைக்கழகத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது சாலையின் குறுக்கே இரண்டு பெண்கள் வந்துள்ளனர். இதனை அடுத்து அந்தப் பெண்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதல் தடுப்பதற்காக அசோக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ்காரர் வீட்டிலேயே… அத்துமீறிய மர்ம நபர்கள்… சென்னையில் பரபரப்பு…!!

சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வர்கீஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் வர்கீஸ் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார். இதனை அடுத்து இவரின் மகன் பெஞ்சமின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது மரக்கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடிகர் விவேக்கின் மரணம்…. ஆவேசமாக பேசிய மன்சூர் அலிகான்…. புகார் அளித்தார் பாஜக உறுப்பினர்….!!

நகைச்சுவை நடிகர் விவேக் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய மன்சூர் அலிகான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் மாரடைப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் செய்தியாளர்களிடம் நடிகர் மன்சூர் அலிகான் பேசியபோது “சும்மா இருந்த விவேக்கை தடுப்பூசி போட வைத்து கொன்றுவிட்டீர்கள். எனது ரத்தம் கொதிக்கிறது. கொரோனா டெஸ்ட் தப்பா எடுக்கிறீர்கள். அதற்கு மருந்தும் தப்பா கொடுத்துக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருட முயற்சிக்கும் போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மின் மோட்டாரை திருட முயற்சித்த வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணதாசன் நகர் பகுதியில் எம்.குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கட்டி வரும் வீட்டின் கட்டுமான பணிகள் முடிந்து தொழிலாளர்கள் சென்ற பிறகு இரவு நேரத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலாளி மின்மோட்டார் அருகே வாலிபர் சடலமாக கிடப்பதை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 வாங்கினால் 1 இலவசம்…. அலைமோதிய மக்கள் கூட்டம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்று அறிவித்ததால் பொதுமக்கள் கூடிய கடையை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையின் திறப்பு விழாவில் ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என அறிவித்துள்ளனர். இதனால் பிரியாணி வாங்குவதற்காக சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அந்த கடைக்கு முன்பு மக்கள் குவிந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அந்த கடைக்கு விரைந்து சென்று சமூக இடைவெளி இல்லாமல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் திருநங்கையாக மாற போறேன்” கொடூரமான தற்கொலை முயற்சி… சென்னையில் பரபரப்பு…!!

திருநங்கையாக மாறுவதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி பகுதியில் 22 வயது வாலிபர் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த வாலிபரின் உடை, நடை, பாவனைகளில் கடந்த சில மாதங்களாக மாற்றம் ஏற்பட்டு அவர் திருநங்கையாக மாறி வந்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வாலிபரை கண்டித்து வீட்டைவிட்டு வெளியே அனுப்பாமல் வைத்துள்ளனர். அந்த சமயம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்போ இது விபத்து இல்லையா…? பதற வைக்கும் CCTV காட்சிகள்… சென்னையில் பரபரப்பு…!!

விபத்தில் சிக்கி பலியான வாலிபர் தானாகவே சென்று தற்கொலை செய்து கொண்ட காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கல்யாண சட்டி நகரில் வினோத் வாலிபர் வந்துள்ளார். இவர் அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத் எண்ணூர் விரைவு சாலையை கடந்து செல்ல முயற்சி செய்தபோது, அங்கு வந்த கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்ததும் அச்சத்தில் கண்டெய்னர் லாரி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்டுன்னு அங்கிருந்து குதிச்சிட்டான்… பதறிய வாகன ஓட்டிகள்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

குடும்ப பிரச்சனை காரணமாக வாலிபர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள எம்.ஐ.டி மேம்பாலத்தின் மேல் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் திடீரென அதிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து அந்த வாலிபர் மேம்பாலத்தின் கீழ் இருக்கும் ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது விழுந்து சாலையில் உருண்டு விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன கல்யாணம் பண்ணிக்கோ… பெற்றோரை தாக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

கட்டிட தொழிலாளி 17 வயது சிறுமியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதோடு, அவரது பெற்றோரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் முத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். அதோடு முத்து அந்த சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரொம்ப தொல்லை பண்ணுறான்…. கல்யாணமானவன் செய்யுற வேலையா இது… கைது செய்த காவல்துறை…!!

ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் பத்தாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மாத்தூர் எம்.எம்.டி.ஏ  பகுதியில் இருக்கும் அரசு பள்ளியின் எதிரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் கந்தன் அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடிகை அளித்த புகார்… சப் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்… கமிஷ்னரின் அதிரடி உத்தரவு…!!

முதல் மனைவிக்குத் தெரியாமல் நடிகை ராதாவை சப்-இன்ஸ்பெக்டர் இரண்டாவதாக திருமணம் செய்ததால் கமிஷனர் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ்.புரம் போலீஸ் குடியிருப்பில் வசந்த ராஜ் என்ற சப்-இன்ஸ்பெக்டர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சுந்தரா டிராவல்ஸ் போன்ற பல்வேறு படங்களில் நடித்த பிரபல நடிகை ராதாவை வசந்தராஜா இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் விருகம்பாக்கத்தில் இருக்கும் ராதா வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி நடந்துச்சு…. கடலில் குதித்த வாலிபர்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

பங்குச் சந்தையில் முதலீடு செய்து நஷ்டம் ஏற்பட்டதால் இன்ஜினியர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள குன்றத்தூர் பகுதியில் அஜய் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அஜய் பாபு பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார். ஆனால் அதில் நஷ்டம் அடைந்ததால் எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? விடுதியில் பார்த்த அதிர்ச்சி சம்பவம்… கதறி அழுத தாயார்…!!

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் தொகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பெண்கள் விடுதி ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் சண்முகப்பிரியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சண்முகப்பிரியா திடீரென பெண்கள் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களிடம் பேசிட்டு இருக்கும் போதே…. முதியவருக்கு நடந்த விபரீதம்… சென்னையில் பரபரப்பு…!!

நண்பர்களுடன் பேசிக் கொண்டே முதியவர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சத்யமூர்த்தி நகர் பகுதியில் சங்கரன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் சங்கரன் பக்கிங்காம் கால்வாய் மீது உள்ள மேம்பாலத்தில் அமர்ந்து கொண்டு தனது நண்பர்களுடன் பேசியுள்ளார். இதனையடுத்து நண்பர்களுடன் பேசிக் கொண்டே எதிர்பாராதவிதமாக பின்புறம் சாய்ந்ததால் கால்வாய்குள் தவறி விழுந்து விட்டார். அதன்பின் அருகில் இருந்தவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள்…. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த கொடுமை…. மடக்கி பிடித்த காவல்துறை….!!

பெண்ணின் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.  சென்னை மாவட்டத்தில் தாம்பரம் அருகில் ரேணுகா நகர் பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இவர் கடந்த 9ஆம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் கீதாவின் கழுத்தில் இருந்த நான்கு பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதனால் கீதாவின் கழுத்தில் பலத்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுக்குதான் இந்த நாடகமா….? தீக்குளிக்க முயன்ற வாலிபர்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கொலை முயற்சி வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தீக்குளிக்கப் போவதாக நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் மேட்டுத்தெருவில் ஹரிநாத் என்பவர் வசித்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொத்து தகராறில் ஹரிநாத் தனது தந்தை ஜெய்சிங் மற்றும் சகோதரி சங்கீதா ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான ஹரிநாத்தை தீவிரமாக தேடி வந்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்பா மகள் பாசத்தை பாருங்க…. உயிருக்கு ஆபத்தான நிலையில் தந்தை…. மகள் செய்த அதிர்ச்சி செயல்….!!

தன்னுடைய தந்தைக்கு இதயத்தையும் கல்லீரலையும் தானமாக கொடுக்கும் முடிவெடுத்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூர் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற ஒரு மகள் இருந்தார். இவர் பிகாம் படித்துள்ளார். பவித்ரா ஒரு வழக்கில் கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன்பின் சில மாதங்கள் கழித்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு தனது தாய் தந்தையருடன் வசித்து வந்தார். இந்நிலையில் பாஸ்கருக்கு திடீரென உடல்நிலை மோசமானதால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தப்பை தட்டி கேட்டதற்கு… போலீஸ்காரருக்கு நடந்த விபரீதம்… வசமாக சிக்கிய வாலிபர்…!!

தகராறு செய்ததை தட்டி கேட்டதால் குடி போதையில் வாலிபர் போலீஸ்காரரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள குற்றப்பிரிவு போலீஸ்காரராக கானத்தூர் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் காவல் நிலையத்திற்கு பக்கத்தில் இருக்கும் ஒரு டீ கடைக்கு சென்றபோது, அங்கு ஒரு வாலிபர் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்ததும் போலீஸ்காரர் சதீஷ்குமார் அதனை தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த அந்த வாலிபர் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியதால் அவரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெங்களுருவில் இருந்து வந்து… சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பெங்களூருவைச் சேர்ந்த காதல் ஜோடி சென்னையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சித்தாலபாக்கம் அரசன்கழனி பிரதான சாலை தனியார் குடியிருப்புக்கு பக்கத்தில் இளம்பெண்ணும், 30 வயது மதிக்கத்தக்க ஆணும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பெரும்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுமை தாங்க முடியல… ஊழியர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கடன் தொல்லை அதிகமாக உள்ளதால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் கணேசன் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசனுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த கணேசன் தனது வீட்டில் யாரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெற்றோருக்கு அடிக்கடி தொந்தரவு… திருநங்கை எடுத்த விபரீத முடிவு… சென்னையில் நடந்த சோகம்…!!

குடிபோதையில் திருநங்கை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கல்யாணபுரம் பகுதியில் நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சூர்யா என்ற மகன் இருந்தான். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சூர்யா திருநங்கையாக மாறி லாரா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான லாரா தனது பெற்றோரிடம் அடிக்கடி மது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவர் மீது நடவடிக்கை எடுங்க…. பெரிய போராட்டம் நடத்துவோம்… முடி திருத்தும் சங்கத்தினர் எச்சரிக்கை…!!

முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர் நடிகர் யோகிபாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி எம்.கே.பி நகரில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது சங்கத்தின் மாநில தலைவர் செல்வராஜ் கூறும்போது, தனியார் தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளிவந்த நடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம் ஒளிபரப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் மண்டேலா படத்தில் தங்கள் சமூகத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவங்களை அங்க தான் பார்த்தோம்” பறிபோன சிறுவர்களின் உயிர்… கதறி அழுத பெற்றோர்…!!

விளையாடுவதற்காக சென்ற மூன்று சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் விஷாந்த், கோகுல், சுனில் குமார் என்ற மூன்று சிறுவர்கள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் மாலை நேரத்தில் விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற இந்த மூன்று சிறுவர்களும் இரவு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் அனைத்து இடங்களிலும் அவர்களைத் தேடி பார்த்துள்ளனர். அப்போது பெரிய ஏரி அருகே அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டியூஷனுக்கு சென்ற பள்ளி மாணவி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் பரபரப்பு…!!

சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஜவஹர்லால் நேரு நகரில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் எம்.நகரில் உள்ள டியூஷன் சென்டருக்கு சென்று விட்டு ஷாலினி தனது சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் தனது சைக்கிளில் செங்குன்றம் திருவள்ளூர் கூட்டு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, செங்குன்றத்தை நோக்கி வேகமாக சென்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லிப்ட் கேட்பது போல் நடித்து… இளம்பெண் செய்த செயல்… வசமாக சிக்கிய நான்கு பேர்…!!

லிப்ட் கேட்பது போல் நடித்து வாலிபரிடம் கத்தி முனையில் நான்கு பேர் திருட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருப்போரூர் பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தாம்பரம்-மதுரவாயல் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அவரது மோட்டார் சைக்கிளை வழிமறித்து இளம்பெண் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அப்போது லிப்ட் கொடுப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளை கணேஷ் ஒரு ஓரமாக நிறுத்திய போது அப்பகுதியில் மறைந்திருந்த அந்த பெண்ணின் கூட்டாளிகளான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உங்ககிட்ட தனியா பேசணும்” அண்ணியை கொலை செய்த சகோதரர்கள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

வாலிபர்கள் இணைந்து தனது சகோதரரின் கொலைக்கு பழி வாங்குவதற்காக அண்ணியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குருசாமி நகர் பகுதியில் ரூபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்ரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஆறு மாத காலமாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் சுப்ரியாவிடம் தனியாக பேசவேண்டும் என்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் செல்பி எடுக்க போறேன்…. ஐடி நிறுவன ஊழியரின் செயல்…. அதிரடி நடவடிக்கையில் தீயணைப்பு துறையினர்….!!

ஐடி நிறுவன ஊழியர் கூவம் ஆற்றின் பாலத்தில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் கொடுங்கையூரை சேர்ந்த மூர்த்தி என்ற நபர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் கூவம் ஆற்றின் அருகே உள்ள நோபியர் பாலத்தில் நின்று கொண்டு செல்பி எடுத்துள்ளார். அந்த சமயத்தில் அவர் தவறுதலாக கூவம் ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீங்க இப்படியும் பண்ணலாமே…. எங்க கோரிக்கையை நிறைவேற்றுங்க… எதிர்பார்ப்பில் வியாபாரிகள்…!!

அதிகாரிகளின் அனுமதியோடு கோயம்பேடு சில்லறை காய்கறி கடைகள் செயல்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாடு அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் இருக்கும் சிலரை காய்கறி கடைகள் செயல்பட தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக சுழற்சி முறையில் இன்று வரை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது சில்லறை வியாபாரிகள் கடைகளை அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுக்கு போய் இப்படி பண்ணுவாங்களா…. கத்தியால் குத்தப்பட்ட பணியாளர்… சென்னையில் பரபரப்பு…!!

குப்பைகளை தரம் பிரிக்கும் விவகாரத்தில் துப்புரவு பணியாளர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நாகல்கேணி பகுதியில் கோட்டையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளராக பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கோட்டையாவும் , ஆதிகேசவன் என்ற சக தூய்மை பணியாளரும் இணைந்து நியூ காலனி பகுதியில் உள்ள பிரதான சாலையில் குப்பைகளை சேகரித்து வாகனத்தில் ஏற்றி உள்ளனர். அப்போது அந்த குப்பைகளில் கிடந்த பிளாஸ்டிக் பைகளை தரம் பிரிப்பது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுக்குதான் ரொம்ப கவனமா இருக்கணும்…. மாத்திரை போட அவசரம்…. துடிதுடித்து இறந்த பாட்டி….!!

தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த பாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அய்யம்பாக்கம் பகுதியில் செல்வம் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும் இவருடன் செல்வத்தின் தாயான மேனகாவும் வசித்து வந்துள்ளார். மேனகாவுக்கு சர்க்கரை நோய் மற்றும் கண் பார்வை குறைபாடு இருந்துள்ளது. இதனால் அவர் மருந்து எடுத்துக் கொள்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மேனகா உணவு உண்ட பின்பு மாத்திரையை வாயில் போட்டு விட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்போதான் நல்ல நிலைமைக்கு வந்தோம்… அதுக்குள்ள இப்படி சொல்லிடாங்க… உத்தரவை எதிர்த்து வியாபாரிகள் போராட்டம்…!!

சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதித்ததால் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக அனைத்து இடங்களிலும் பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கறி கடைகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்படுவதாக அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்பேடு சில்லறை காய்கறி கடை வியாபாரிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெட்ரோல் ஊற்றி கள்ளகாதலி எரிப்பு…. உடல் கருகி உயிரிழந்த இருவர்… CCTV கேமராவில் பதிவான பதற வைக்கும் காட்சிகள்…!!

பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி அவரை எரித்து கொன்றதோடு, கள்ளக்காதலும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனம் சார்பில் துப்புரவு பணியாளராக கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் வடபழனி பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்துவந்த முத்து என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருக்கும் நடைமேடையில் சாந்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“10 ரூபாய் டாக்டர் கோபாலன்” மருத்துவத்தால் மனதை வென்ற நாயகன்… இறப்பால் சோகத்தில் மூழ்கிய பொதுமக்கள்…!!

பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் கோபாலன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டையில் டாக்டர் கோபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். 77 வயதான இவரை அனைவரும் “பத்து ரூபாய் டாக்டர்” என்ற அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். அதாவது 1966 ஆம் ஆண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு மன்னார்குடியை சேர்ந்த இவர் சென்னைக்கு வந்துள்ளார். அதன்பின் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ் பட்டம் பெற்ற பிறகு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காட்டி கொடுத்த உறுதி சான்றிதழ்…. தப்ப முயன்ற அந்தமான் கல்லூரி மாணவர்… சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு…!!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அந்தமான் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு நேற்று விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்களுக்கு சான்றுகளை டிக்கெட் கவுண்டரில் ஆய்வு செய்து போர்டிங் பாஸ் வழங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த அந்தமானை சேர்ந்த கல்லூரி மாணவர் மெடம்சாமி என்பவருக்கு வைரஸ் தொற்று இருப்பது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுதான் இரண்டாவது தடவை… மொத்தம் 3 டன் கச்சா எண்ணெய்…. மிகப்பெரிய டேங்கருடன் வந்த கப்பல்…!!

மிகப்பெரிய டேங்கருடன் கூடிய கப்பல் 3 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள துறைமுகத்திற்கு 60 மீட்டர் அகலம் மற்றும் 333 மீட்டர் நீளம் கொண்ட மிகப்பெரிய டேங்கருடன் கூடிய கப்பல் வந்து சேர்ந்துள்ளது. இந்த கப்பலில் 3 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை பெட்ரோலியம் கழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இது சென்னை துறைமுகத்திற்கு வந்த இரண்டாவது மிகப்பெரிய டேங்கருடன்  கூடிய கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரவுடி கும்பலுடன் மோதல்…. தந்தையின் கண்முன்னே மகன் கொடூர கொலை… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தந்தையின் கண்முன்னே மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டேல் ரோடு பகுதியில் பிரம்ம தேவன் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு நாராயணன் என்ற மகன் உள்ளார். இவர் தனது பாலிடெக்னிக் படிப்பை முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தியதோடு, வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் நாராயணன் சாலையோர கடையில் சாப்பிட்டுவிட்டு தனது வீட்டிற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 7 மர்ம நபர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விடாமல் துரத்தி சென்று…. கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஊழியர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டதால் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புழல் காவல்துறையினருக்கு விநாயகபுரம் செகரெட்ரியேட் காலனி பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இறந்தவரின் சட்டைப்பையில் இருந்த செல்போனை எடுத்து சோதனை செய்தபோது, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? கல்லூரி மாணவிக்கு நடந்த சோகம்… அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்…!!

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள என் கண்டிகை கிராமத்தில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மகள் உள்ளார். இவர் பொன்னேரி பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சர்மிளா வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐயோ அவங்க பாத்துட்டாங்க…. ரோட்டில் வீசி சென்ற பணம்… அடித்து பிடித்து ஓடிய மர்ம நபர்கள்…!!

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை அதிகாரிகளை பார்த்ததும் மர்ம நபர்கள் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு கருவேப்பிலைபாளையம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கண்காணிப்பு குழு அலுவலரும், உளுந்தூர்பேட்டை துணை தாசில்தாருமான அந்தோணிராஜ் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த சில மர்ம நபர்கள் அதிகாரிகளை பார்த்ததும் வாக்காளர்களுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவங்கள சும்மா விடாதீங்க” திருமணமான 5 மாதத்தில்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

வரதட்சணை கொடுமை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தந்தை பெரியார் தெருவில் ஜோதிஸ்ரீ என்ற பி.காம் பட்டதாரி பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அன்னை சத்யா நகரில் வசித்து வரும் பாலமுருகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜோதிஸ்ரீயிடம் அவரது கணவரும், மாமியார் அம்சாவும் இணைந்து தாங்கள் கடன் வாங்கி வீடு கட்டி உள்ளதாகவும், அதற்கு பணம் […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

2 வயது மகனின் கண்முன்னே… பீர் பாட்டிலால் குத்தி மனைவி கொடூர கொலை… சென்னையில் பரபரப்பு…!!

தன் மகன் கண்முன்னேயே மனைவியை கணவர் பீர் பாட்டிலால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் ரவி என்ற பெயிண்டர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குடிப்பழக்கம் உள்ள ரவிக்கும் அவரது மனைவி விஜயலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விஜலட்சுமி தன் கணவரிடம் கோபித்துக் கொண்டு தன் தாய் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவ்வளவு பேர் தான் ஊருக்கு போறாங்களா….? ஆர்வம் காட்டாத பொதுமக்கள்…. போக்குவரத்து கழக அதிகாரியின் பரபரப்பு தகவல்….!!

சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம்  காட்டவில்லை. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக நாளை முதல் 5ஆம் தேதி வரை 2225 தினசரி பேருந்துகளுடன் 3990 சிறப்பு பேருந்துகள் என மொத்தம்  14,215 பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன.இந்நிலையில் 2644 சிறப்பு பேருந்துகள் கோவை, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அந்த மனசுதான் கடவுள்” மூதாட்டியை தூக்கி கொண்டு ஓடிய வீரர்…. அடுத்தடுத்து அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவங்கள்…!!

பாதுகாப்பு படை வீரர் 90 வயது மூதாட்டியை பத்திரமாக தூக்கிக்கொண்டு ரயிலில் ஏற்றி விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடை எண் 8-ல் வந்து நின்றுள்ளது. அப்போது ஒவ்வொரு பயணிகளும் வேகமாக ரயிலுக்குள் ஏறியுள்ளனர். இந்நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரயில் புறப்பட தயாரான கடைசி நிமிடத்தில் ரயிலில் முயற்சிசெய்து “ரயிலை நிறுத்துங்கள்” என எஞ்சின் டிரைவரைப் பார்த்து கத்திக்கொண்டே நடைமேடை படிக்கட்டில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஹோட்டல் அறையில் அடைத்து வைத்து…. 3 வாலிபர்கள் இணைந்து செய்த செயல்…. பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…!!

15 வயது சிறுமியை 3 வாலிபர்கள் இணைந்து ஹோட்டல் அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி திடீரென காணாமல் போனதால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் காணாமல் போன […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“டிக்டாக்-கில் மலர்ந்த காதல்” புதுப்பெண்ணின் விபரீத முடிவால் அதிர்ச்சி… தாய் அளித்த பரபரப்பு புகார்….!!

டிக்டாக்கின் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் தரணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்வேதா மற்றும் பிரியதர்ஷினி என்ற 2 மகள்களும், மணிகண்டன் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் முனியாண்டி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தரணி கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 11ஆம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதை கண்டிப்பா வைத்திருக்க கூடாது…. 64 துப்பாக்கிகள் ஒப்படைப்பு…. தேர்தலை முன்னிட்டு அதிரடி நடவடிக்கை….!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனுமதி பெற்று வைத்திருந்த 64 துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதனை ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், மல்லி, கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு, நத்தம்பட்டி, வளையம்பட்டி போன்ற பகுதிகளில் வசிக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கை,கால்களை கட்டி கழுத்தறுத்து…. கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்…. நகைகளுக்காக குடும்பத்தினர் செய்த செயல்…!!

தங்க நகைகளுக்கான பெண்ணின் கை, கால்களை கட்டி கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை சவுகார்பேட்டையில் பைனான்சியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி உள்ளார். இவர்களின் மகன் பூனேவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்களது வீட்டின் காவலாளியாகவும், வீட்டு வேலைகளை பார்க்கவும் பெங்களூருவில் வசித்துவரும் ராகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து ஏற்பட்ட தாமதம்…. பதற்றத்தால் மயங்கி விழுந்த பயணி…. சிக்னல் கோளாறால் ஏற்பட்ட பரபரப்பு….!!

ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் ரயில் புறப்பட தாமதமானதால் பயணி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பணி மற்றும் தொழில் சம்பந்தமாக வெளியே செல்பவர்கள் மின்சார ரயில் சேவையை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தாம்பரம் செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் ரயில் சேவைகளை குறைத்ததோடு, பல்லாவரம், தாம்பரம் பகுதிகளில் இருந்து சில குறிப்பிட்ட நேரங்களில் ரயில்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கல்லை கட்டி வீசப்பட்ட இரு சடலம்” வழிப்பறி வழக்கில் கைதானவர்கள்…. பரபரப்பு வாக்குமூலத்தில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நந்தனம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ராமகிருஷ்ணன் என்ற முதியவரிடம் இருந்து கடந்த 13-ஆம் தேதி ஒரு கும்பல் 10 பவுன் தங்க நகை மற்றும் காரை வழிப்பறி செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை காவல் துறையினர் சிவகங்கை பகுதியில் தலைமறைவாக இருந்த கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ராகப்பன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படியும் பண்ணுவாங்களா…. ரகசியமான காதல் திருமணம்…. முதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

முதல் மனைவிக்கு தெரியாமல் ஒருவர் 2-ஆவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ண பாளையம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீதேவி என்ற இளம்பெண்ணை ராஜேஷ் காதலித்து வந்துள்ளார். இதனால் தனது முதல் மனைவிக்கு தெரியாமல் ஸ்ரீதேவியை கடந்த 9ஆம் தேதி ராஜேஷ் திருத்தணி முருகன் கோவிலுக்கு அழைத்து […]

Categories

Tech |