Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து ஓடிகொண்டிருக்கும் போதே… மளமளவென எரிந்த தீ… சென்னையில் பரபரப்பு…!!

ஓடும் போதே மாநகரப் பேருந்தின் பின்புறத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கீழ்கட்டளை நோக்கி மாநகர பேருந்து ஒன்று திருவான்மியூரில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தை சிவானந்தம் என்ற ஓட்டுனர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். இதில் கண்டக்டராக சங்கரன் என்பவர் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் மடிப்பாக்கம் சதாசிவம் நகர் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென மாநகரப் பேருந்தின் பின்புறத்தில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மார்பில் உள்ள நகக்கீறல்கள்… கட்டிட தொழிலாளியின் மர்மமான மரணம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் சாந்தி காலனியில் இருக்கும் தனியார் சொந்தமான இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டுமான பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கட்டுமான பணியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் திருமங்கலம் காவல் துறையினருக்கு கட்டிட தொழிலாளி குமார் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இங்க விளையாட கூடாது” கன்னத்தில் அறைந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்… மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு…!!

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஜாபர்கான் பேட்டை பகுதியில் எம். சரண்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனுவினை அளித்துள்ளார். அந்த மனுவில் எம். சரண்ராஜ் கடந்த 2019ஆம் ஆண்டு ஜாபர்கான்பேட்டை பகுதியில் இருக்கும் ராகவ ரெட்டி காலனியில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்நிலையில் அந்த இடத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அதுக்காக தான் கேட்டேன்” வாலிபர் எடுத்த விபரீத முடிவு… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

செல்போன் பழுது பார்க்க தாய் பணம் தராததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயில் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் இவருடைய மனைவி மங்கை தனது பிள்ளைகளான கௌசல்யா மற்றும் சௌந்தர்ராஜன் போன்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கூலி வேலை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்த சௌந்தர்ராஜன் தனது செல்போனை பழுது பார்க்க பணம் தரும்படி தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடைசி நேரத்திலும் வராத ஆம்புலன்ஸ்… துடிதுடித்து பறிபோன உயிர்… கணவர் கண்முன்னே நடந்த சோகம்…!!

விபத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்பதற்கு ஆம்புலன்ஸ் வராததால் கணவன் கண் முன்னேயே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பட்டரவாக்கம் ஆவின் சாலையில் மனோகரன் என்பவர் தனது மனைவி ஜான்சிராணியுடன் மோட்டார் சைக்கிளில் அம்பத்தூர் நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக சென்ற ஆவின் பால் பண்ணை ஒப்பந்த லாரியானது திடீரென இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஜான்சிராணி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீங்கெல்லாம் ஒரு நண்பர்களா… பெயிண்டர் கொடூர கொலை… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அய்யப்பன்தாங்கல் பகுதியில் டேவிட் என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களான பழனிச்சாமி மற்றும் லட்சுமணன் என்பவர்களுடன் ஒன்றாக அமர்ந்து டேவிட் மது குடித்துள்ளார். இதனையடுத்து நண்பர்கள் மூன்று பேருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். அப்போது டேவிட் தனது வீட்டில் இருந்த மூங்கில் கம்பை எடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் எப்படி போறது” மகன்-மருமகளுக்கு விழுந்த வெட்டு… சென்னையில் பரபரப்பு…!!

குடும்ப தகராறில் தந்தை மகன் மற்றும் மருமகளை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் சுப்ரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் சைக்கிள் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த சுப்பிரமணியனுக்கு ஐந்து மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணமான தனது அனைத்து பிள்ளைகளுக்கும் சுப்ரமணியன் சொத்துக்களை சரிபாதியாக பிரித்து கொடுத்து விட்டு தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனை அடுத்து இவரது ஆறாவது மகனான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பதறி சத்தம் போட்ட பெண்… மடக்கி பிடித்த பொதுமக்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அம்மா உணவக ஊழியரிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆழ்வார் திருநகர் பகுதியில் இருக்கும் அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் செல்வி பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர் ஒருவர் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரகசியமாக கண்காணித்த தந்தை… சிறுவனிடம் 12 லட்ச ரூபாய் மோசடி… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

வாலிபர் ஒருவர் ஆன்லைன் விளையாட்டு மூலம் சிறுவனிடம் இருந்து 12 லட்ச ரூபாயை  மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் ராம்விலாஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராம்விலாஸ் தனது வீட்டு லாக்கரில் வைத்திருந்த பணம் அடிக்கடி காணாமல் போவதை கண்டு அதிர்ச்சி அடைந்து ரகசியமாக வீட்டில் இருப்பவர்களை கண்காணித்து வந்துள்ளார். அப்போதுதான் 13 வயதான தனது 8-ஆம் வகுப்பு படிக்கும் மகன் பணத்தை எடுத்தது ராம் விலாஸுக்கு தெரிய வந்துள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொற்று இருந்தும் சவாரிக்கு போறாங்களா… அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்… ஆட்டோ டிரைவருக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!!

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஆட்டோ டிரைவர் சவாரிக்கு சென்றதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள மணலி பகுதியில் 44 வயதுடைய ஆட்டோ டிரைவர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவருக்கு அறிகுறிகள் எதுவும் பெரிதாக இல்லாததால் ஆட்டோ டிரைவர் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஆட்டோ டிரைவர் வீட்டில் இல்லாமல் சவாரிக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன விட்டு போயிட்டாளா… கேட்ட உடனே மயங்கி விழுந்த கணவர்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் தங்கப்பன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு விசாலாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் விசாலாட்சியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளியலறையில் கேட்ட கூச்சல் சத்தம்…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பெண்… கைது செய்த காவல்துறையினர்…!!

இளம் பெண் குளித்துக் கொண்டிருக்கும்போது எட்டிப்பார்த்த வடமாநில தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மணல் பகுதியில் கௌதம் என்ற வடமாநில தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கௌதம் அதே பகுதியில் வசிக்கும் திருமணமான 23 வயது இளம்பெண் அவரது வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது எட்டி பார்த்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறப்பு சிகிச்சை மையத்தில்… முதியவர் செய்த செயல்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திலேயே முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் செல்லையா என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 24ஆம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் இந்த முதியவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த முதியவர் அத்திப்பட்டு பகுதியில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் மிகுந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இது என்ன புது டெக்னிக்கா இருக்கு… பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்… சோதனையில் வசமாக சிக்கியவர்…!!

டிவிக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து துபாயில் இருந்து கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரின் உத்தரவின்படி சுங்க இலாகா அதிகாரிகள் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை தீவிரமாக கண்காணித்துள்ளனர். இந்நிலையில் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வசித்து வரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அலறி துடித்த விதவை பெண்… ஊழியரின் மூர்க்கத்தனமாக செயல்… CCTC கேமராவால் வெளிவந்த உண்மை…!!

விதவை பெண்ணை காரில் கடத்திச் சென்று டீக்கடை ஊழியர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கீழ்பாக்கம் பகுதியில் 35 வயதான கணவனை இழந்த பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த பெண்ணை காணவில்லை என அவரது சகோதரர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஒருவர் அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 போலீசார் பணியிடை நீக்கம்… உறுதி செய்யப்பட்ட குற்றச்சாட்டு… அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

மாணவனிடம் பணம் பறித்த 2 போலீஸ்காரர்களை அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவன் தனது பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டில் இருந்த 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அந்த மாணவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன் எங்கே செல்வது என்று தெரியாமல் அங்கேயே படுத்து தூங்கியுள்ளார். இந்த மாணவரை பார்த்த கோயம்பேடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போலீஸ் தான் பறிச்சிட்டு போனாங்க” வீட்டை விட்டு வெளியேறிய மாணவர்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

இரண்டு போலீஸ்காரர்கள் மாணவரிடமிருந்து 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறித்து சென்றதாக புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமத்தில் 17 வயதான பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவர் தனது பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டில் இருந்தார் 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டார். இதனையடுத்து அந்த மாணவன் பேருந்து மூலம் இரவு நேரத்தில் சென்னை கோயம்பேடு பேருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வாலாஜா பகுதியில் நந்தகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வநாதன் என்ற ஆறாம் வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளான். இந்நிலையில் செல்வநாதன் தனது வீட்டில் உள்ள மின்விசிறியின் சுவிட்சை போட முயற்சி செய்த போது, எதிர்பாராத விதமாக சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் மயங்கி விழுந்த சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆசையாக பிரியாணி வாங்கி கொடுத்து…. அம்மிக்கல்லை தலையில் போட்ட கணவர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

மனைவியின் மீதுள்ள சந்தேகத்தில் அம்மி கல்லை தலையில் போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் பகுதியில் ஆலோன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனது வீட்டின் எதிரே பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஆலோன் தனது மனைவி லட்சுமியின் தலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டிக்கெட் எடுக்க சொன்னது தப்பா… 3 சிறுவர்களின் வெறிச்செயல்… சென்னையில் பரபரப்பு…!!

டிக்கெட் எடுக்குமாறு கூறியதற்கு கண்டக்டரை மூன்று சிறுவர்கள் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாத்தூர் பகுதியில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகரப் பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கருணாகரன் பாரி முனையில் இருந்து மூலகடை நோக்கி சென்ற தடம் எண் 64-சி கொண்ட பேருந்தில் பணி செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து எம்.கே.பி நகரில் இருக்கும் பாரத் பேருந்து நிறுத்தத்தில் மூன்று சிறுவர்கள் பேருந்தில் ஏறினர். அதன்பிறகு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீங்கெல்லாம் ஒரு நண்பர்களா…? அலறி துடித்த ஆட்டோ டிரைவர்… விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

ஆட்டோ டிரைவரை நண்பர்களே இணைந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் நவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நவீன் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது ஆட்டோவில் மது போதையில் படுத்து தூங்கி உள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பர்களான கார்த்திக், பிரகாஷ், பழனி ஆகியோர் நவீனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுக்காக தான் இப்படி பண்ணிருக்காங்க… கார் டிரைவருக்கு நடந்த கொடூரம்… சென்னையில் பரபரப்பு…!!

பழிவாங்கும் விதமாக கார் டிரைவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் உள்ள பாடி புதுநகர் பகுதியில் கண்ணதாசன் என்ற கார் டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு இரவு 9 மணி அளவில் கண்ணதாசனை அவனது பெரியப்பா மகன் குமார் என்பவர் அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் பையன கண்டுபிடிச்சி தாங்க” முட்புதரில் கிடந்த அழுகிய சடலம்… விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்…!!

மாயமான வாலிபர் முட்புதரில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் வினோத் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு புறப்பட்டு சென்ற வினோத் கடந்த ஒரு வாரமாக வீடு திரும்பாததால் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் தங்களது மகனை கண்டுபிடித்து தருமாறு வினோத்தின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான வினோத்தை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனை அடுத்து மேடவாக்கம் காந்திபுரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவனை பார்ப்பதற்காக… சுடுகாடு வரை சென்ற மனைவிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

கணவனின் முகத்தை பார்ப்பதற்காக சுடுகாடு வரை சென்ற மனைவி மயங்கி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூர் பகுதியில் மகா மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்காலிக ஊழியராக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வேலைக்கு சென்று கொண்டிருக்கும்போது மகா மணியின் மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கார் ஓட்டும் பயிற்சி பெற்ற இளம்பெண்… சக்கரத்தில் சிக்கி பலியான சிறுவன்… அடித்து நொறுக்கிய பொதுமக்கள்…!!

பயிற்சியின் போது இளம்பெண் காரை பின்னோக்கி இயக்கியதால் விளையாடி கொண்டிருந்த சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் இருக்கும் பொன்னியம்மன் கோவில் தெருவில் நிரோஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் விஜய் அப்பகுதியில் இருக்கும் காலி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அதே பகுதியில் வசிக்கும் அஜய் என்பவருடன் அவரது உறவினர் பெண்ணான மோனிகா என்பவர் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“25 வருடம் இதை செய்யவே கூடாது” 7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து கொன்ற குற்றத்திற்காக குற்றவாளிக்கு நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரை துடியலூர் காவல் துறையினர் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றத்திற்காக கைது செய்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தோஷிற்கு தூக்கு தண்டனை விதித்ததோடு, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் ஜாலியா இருந்த போது… மாணவனுக்கு நடந்த விபரீதம்… சென்னையில் நடந்த சோகம்..!!

கோவில் குளத்தில் மூழ்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தனது நண்பர்களுடன் இணைந்து திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது குளித்துக்கொண்டிருந்த விக்னேஷ் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார். இதுகுறித்து தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எங்கிட்ட கருப்பு பணம் இருக்கு” நூதன முறையில் மோசடி செய்த இளம்பெண்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற வேண்டும் என்று கூறி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் மற்றும் சிறுமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி என்பவர் தற்போது மலேசியாவில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரேவதி அடிக்கடி 17 வயது சிறுமியுடன் இணைந்து சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு தயாராக இருக்கும் ஆட்டோவில் பயணம் செய்வது வழக்கம். இதனையடுத்து தன்னை ஒரு பணக்கார பெண் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மயானத்தில் வைக்கப்பட்ட மனைவி… கணவருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய கிராமம்…!!

மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நிலை சரியில்லாததால் ரஜெஸ்வரி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து ராஜேஸ்வரியின் உடலை மயானத்தில் தகனம் செய்வதற்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காப்பாற்ற சென்றவர்களையும் விடல… கொட்டி கொண்டே இருந்த குளவி… படுகாயமடைந்த 12 பேருக்கு சிகிச்சை…!!

ஒப்பந்த தொழிலாளர்களையும், காப்பாற்ற சென்ற தீயணைப்பு வீரர்களையும் குளவி கொட்டியதால் ஒருவர் உயிரிழந்து, 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் கொடுங்கையூரில் வசித்துவரும் சுந்தர், மைக்கேல், கோபிநாத், ரகுநாத் போன்ற ஒப்பந்த ஊழியர்கள் இந்த தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த தொட்டியின் அருகில் இருக்கும் மரத்தில் கூடு கட்டியிருந்த குளவிகள் சுத்தம் செய்ய சென்ற ஒப்பந்த தொழிலாளர்களை கொட்டியுள்ளது. அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காரை வச்சிக்கிட்டு 1 லட்சம் தாங்க” காவல்துறையினரிடம் தகராறு செய்த வாலிபர்… சென்னையில் பரபரப்பு…!!

காவல்துறையினர் மீது காரில் மோதுவது போல் சென்றதோடு, 1 லட்ச ரூபாய் கேட்டு வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள போரூர், பூந்தமல்லி போன்ற பகுதிகளில் ஊரடங்கு காரணமாக காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போரூர் நான்கு சாலை சந்திப்பில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, அவ்வழியாக வேகமாக சென்ற காரை நிறுத்தும்படி கூறியுள்ளனர். ஆனால் காரை ஓட்டிச் சென்ற வாலிபர் காவல்துறையினர் மீது மோதுவது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சோபாவில் இருந்து பரவிய தீ… எரிந்து நாசமான ஐ.டி கம்பெனி… சென்னையில் பரபரப்பு…!!

ஐ.டி கம்பெனியில் பற்றி எரிந்த தீயை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலை ஆயிரம் விளக்கு பகுதியில் 3 மாடிகள் கொண்ட வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் முதல் மாடியில் தனியாருக்கு சொந்தமான ஐ.டி கம்பெனி ஒன்று செயல்படுகின்றது. இந்நிலையில் காலை 11 மணி அளவில் ஐ.டி நிறுவனத்தில் இருந்து திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனை பார்த்ததும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துண்டிக்கப்பட்ட ஆணின் கால்… அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்திற்கு வந்த சரக்கு ரயிலில் துண்டிக்கப்பட்ட ஆணின் கால் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துறைமுகத்திற்கு இரும்பு கம்பிகளை ஏற்றுக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று சேலம் மாவட்டத்தில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் துறைமுக ஊழியர்கள் இந்த சரக்கு ரயிலில் இருந்த இரும்பு கம்பிகளை இறக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இரும்பு கம்பிகளுக்கு நடுவில் துண்டிக்கப்பட்ட ஆணின் கால் கிடப்பதை பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாகப் துறைமுக காவல்துறையினருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள்ள இருந்து தான் வருது… வழக்கறிஞருக்கு நடந்த விபரீதம்… அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர்…!!

வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து அழுகிய நிலையில் வழக்கறிஞரின் உடலானது மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் பகுதியில் மாரி குமார் என்ற வழக்கறிஞர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு அனுஷா என்ற மகள் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சி இறந்தாலும், அனுஷா விடுதியில் தங்கி படிப்பதாலும் மாரிகுமார் மட்டும் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனக்கும் அது வந்துருச்சா… அச்சத்தில் கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சென்னையில் நடந்த சோகம்…!!

தனக்கு கோரானா தொற்று வந்ததாக அச்சத்தில் இருந்த கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆதம்பாக்கம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் லோகநாதன் கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததுள்ளது. இதனையடுத்து லோகநாதனுக்கு தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுக்கு இவ்ளோ பெரிய சண்டையா… செடியை சேதப்படுத்திய கோழி… இருதரப்பினர் இடையே மோதல்…!!

கோழி ஒன்று 10 வயது சிறுமி ஆசையாய் வளர்த்த செடியை சேதப்படுத்தியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் வெள்ளையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மரியா என்ற பேத்தி உள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் ஆசையாக மரியா ஒரு செடியை வளர்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாஷா என்பவரது கோழி மரியா ஆசையாக வளர்த்த செடியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீங்க மட்டும் மாஸ்க் போடல…? அதிகாரியிடம் வாக்குவாதம்… சென்னையில் பரபரப்பு…!!

முக கவசம் அணியாமல் அபராதம் விதித்த அதிகரிக்கும், கடை உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள அத்திப்பட்டு பகுதியில் இருக்கும் கடைகளில் அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்று சோதனை செய்துள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள் ஐ.சி.எப் காலனியில் இருக்கும் அரிசி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூங்கும் போதே பற்றி எரிந்த உடல்…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்… சென்னையில் பரபரப்பு…!!

கடையின் முன்பு படுத்து தூங்கிய வாலிபரின் உடலில் திடீரென தீப்பிடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கரையான்சாவடி டிரங்க் ரோடு பகுதியில் இருக்கும் ஒரு கடையின் முன்பு இரவு நேரத்தில் வாலிபர் படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் திடீரென இரவு நேரத்தில் அந்த வாலிபர் உடலில் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் தீயை அணைக்க போராடி உள்ளனர். ஆனாலும் தீயில் கருதி அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து பூந்தமல்லி காவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டிக் டாக் செயலி மூலம் காதல்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கைது செய்த காவல்துறையினர்…!!

டிக் டாக் செயலி மூலம் அறிமுகமான மாணவியை காதலித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் டிஜிட்டல் டிசைனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் டிக் டாக் செயலியின் மூலம் தனக்கு அறிமுகமான எர்ணாவூரில் வசிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இதனை அடுத்து இவர்கள் இருவரும் காதலிப்பது அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தமா எடுத்துட்டு போயிட்டாங்க…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் 25 செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள செந்நீர் குப்பம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் 25 செல்போன்களை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து சுரேஷ் பூந்தமல்லி காவல் துறையினருக்கு தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முடியாததுனால ஓடிட்டாங்க… அடுத்தடுத்து கொள்ளை முயற்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

மளிகைக் கடையின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாயை திருடிய மர்ம நபர்கள் கோயில் உண்டியலை உடைக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் செம்பியம் அம்மன் கோவில் தெருவில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது மளிகை கடைக்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த பத்தாயிரம் ரூபாயை திருடியுள்ளனர். இதனையடுத்து பக்கத்தில் இருந்த அம்மன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்னால சமாளிக்க முடியல… வியாபாரி எடுத்த விபரீத முடிவு… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்த துணி வியாபாரி குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோதண்ட ராமன் கோவிலுக்கு சொந்தமான குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி குமரன் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சடலத்தை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் வீட்டிலேயே இருக்க போறேன்” பாதிக்கப்பட்டவர் திடீரென மரணம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட சமயத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள் நகரில் மதனகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை பாரிமுனையில் இருக்கும் ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதன கோபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து டாக்டர்களிடம் மதனகோபால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கூறிவிட்டு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட மதனகோபால் திடீரென […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குப்பை தொட்டியில் தங்க நகையா…? தூய்மை பணியாளரின் நேர்மை… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தூய்மைப் பணியாளர் குப்பைத் தொட்டியில் கிடந்த 10 பவுன் நகையை நேர்மையாக காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் மோகன சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கொருக்குப்பேட்டை பகுதியில் இருக்கும் குப்பை தொட்டியில் மோகனசுந்தரம் குப்பைகளை தரம் பிரித்து கொண்டிருந்த போது அதில் கிடந்த ஒரு பையில் தங்க நகை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் மோகனசுந்தரம் அந்த நகையை கொருக்குப்பேட்டை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குறைந்த விலைக்கு தரேன்னு சொன்னாங்க… மொத்தம் 46 லட்ச ரூபாய் மோசடி… வலை வீசி தேடும் போலீசார்…!!

முகக் கவசங்களை குறைந்த விலைக்கு வெளிநாடுகளில் இருந்து வாங்கி தருவதாக கூறி ஒரு நிறுவனம் 46 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆலந்தூர் பகுதியில் நரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கொரோனா தொற்றின் முதல் அலை கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பரவி இருந்த நிலையில் முகக்கவசத்திற்கு பெரிய அளவில் தேவை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்கிட்ட அவர் பேசுனாரு…. கொட்டாச்சியிடம் விவேக் பேசியது…. வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ….!!

நகைச்சுவை நடிகர் விவேக் கடைசியாக போனில் பேசியது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவருடன் பணியாற்றியவர்கள் தங்களது நினைவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி கொட்டாச்சியும் விவேக் தனக்கு கடைசியாக செய்த போன் காலை உருக்கத்துடன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “இது எல்லாருக்கும் வரும் கஷ்டம்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லெவல்ல கஷ்டம் இருக்கு. உலகம் முழுவதும் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் இது நடக்குது…. வரதட்சனை கொடுமையால் பெண் தற்கொலை…. வசமாக சிக்கிய மாப்பிள்ளை குடும்பம்….!!

வரதட்சனை கொடுமையால் பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில் கணவரையும் அவரது பெற்றோரையும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அவருடைய கணவருக்கும் கணவரின் பெற்றோர்களுக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பை அவர்கள் மேல் முறையீடு செய்வதற்காக தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது “எங்கள் மகன் திருமணமான நாளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எனக்கு கோவா போக ஆசை” சொந்த அத்தையிடமே தில்லுமுல்லு… வசமாக சிக்கிய வாலிபர்கள்…!!

நண்பர்களுடன் கோவா செல்வதற்காக சொந்த அத்தையிடமிருந்து வாலிபர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் ரத்தினமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரத்தினமாள் திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலத்தின் கீழ் இருக்கும் ரயில்வே குடியிருப்பு நுழைவுவாயில் பக்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த 3 மர்ம நபர்கள் அவரை வழிமறித்துள்ளனர். அதன் பின் அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நாங்கதான் மண்ணுக்குள்ள புதைச்சோம்” நண்பர்களின் வெறிச்செயல்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

காவல்துறையினரிடம் சரணடையப் போவதாக கூறியதால் வாலிபரை நண்பர்கள் அடித்துக் கொன்று கடற்கரை மணலில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் தாளங்குப்பம் சுனாமி குடியிருப்பு பகுதியில் அப்பனு என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பனு தனது நண்பர்களான எண்ணூரில் வசிக்கும் ஸ்ரீதர், ஜி.எம் பேட்டை பகுதியில் வசிக்கும் தினேஷ், முத்தமிழ், நிசாந்தன் போன்றோருடன் இணைந்து எண்ணூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் முடிவெட்டும் கடை வைத்திருக்கும் லோகேஷ் என்பவரிடம் சென்று வீட்டு வேலைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதான் காரணமா…? அடுத்தடுத்து பற்றி எரிந்த 3 கடைகள்… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

மின் கசிவினால் மூன்று கடைகள் அடுத்தடுத்து தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சந்தோஷ் நகரில் இருக்கும் ஒரு கடையில் இரவு 8 மணி அளவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனால் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வில்லிவாக்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஜே.ஜே. நகர் போன்ற தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் […]

Categories

Tech |