Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் இறங்கிய வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராமாபுரம் பகுதியில் முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்த பிறகு முகமது தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். இவர் கிண்டி சின்னமலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் இறங்கியதால் முகமது நிலை தடுமாறி கீழே விழுந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாரி மீது மோதிய கார்…. உடல் நசுங்கி பலியான தொழிலதிபர்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் தொழிலதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மேட்டுக்குப்பம் பகுதியில் ரப்பர் விற்பனை செய்யும் தொழிலதிபரான சசிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வியாபாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூருக்கு காரில் சென்றுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சசிகுமார் பரிதாபமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பரோட்டா சாப்பிட்ட மாணவர்…. மூச்சு திணறி இறந்த சோகம்…. போலீஸ் விசாரணை…!!

பரோட்டா சாப்பிட்டு தூங்கிய கல்லூரி மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியில் அரிய குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிபி சங்கமித்திரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் கடைக்கு சென்று பரோட்டா சாப்பிட்ட பிறகு சிபி சங்கமித்திரன் வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். இதனையடுத்து அதிகாலை 3 மணிக்கு மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட சிபிசங்கமித்திரனை அவரது பெற்றோர் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவல்துறையினரின் செயல்…. ரயிலை மறித்த மாணவர்கள்…. சென்னையில் பரபரப்பு…!!

கல்லூரி மாணவனை கைது செய்ததற்காக நண்பர்கள் ரயிலை மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் கல்லூரி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் திடீரென அண்ணனூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் ஏறிய ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் அங்கிருந்த கல்லூரி மாணவர்களில் ஒருவரது பையை சோதனை செய்துள்ளார். நடந்த சோதனையில் அந்தப் பையில் இருந்து சுமார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மோசடி…. சிக்கிய சூதாட்ட நபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேடு பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் 87 லட்சம் ரூபாய் பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் பறிகொடுத்து விட்டதாக எழுதியுள்ளார். மேலும் அதில் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சைபர் க்ரைம் காவல்துறையினருக்கு விக்னேஷின் இழப்பு குறித்து உரிய நடவடிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏறி இறங்கிய லாரி…. உடல் நசுங்கி பலியான நபர்…. போலீஸ் விசாரணை…!!

சடலமாக மீட்கபட்டவரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சென்னை மாவட்டத்திலுள்ள சென்னீர்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தண்ணீர் விநியோகம் செய்யும் கம்பெனி ஒன்று இருக்கிறது. இந்த கம்பெனி வளாகத்தில் 50 வயதுடைய நபர் ஒருவர் உடல் நசுங்கி இறந்து கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த பூந்தமல்லி காவல்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த ஆணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாரி இரு சக்கர வாகனம் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சென்னையில் பரபரப்பு…!!

லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாமலை பகுதியில் முகமது ஜீனத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாலாஜா சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் முகமது ஜீனத் ஓமந்தூர் மருத்துவமனைக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று அவரது வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதனால் நிலைதடுமாறி சாலையில் விழுந்த முகமது ஜீனத் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதனையடுத்து முகம்மது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை” மூதாட்டியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி திடீரென தீக்குளித்து தற்கொலை சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூரில் ரோஸ்மேரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகளும் மூன்று மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவரது மூத்த மகனான இரட்சகா தாஸ் என்பவர் இராணுவ வீரராக இருந்துள்ளார். இந்நிலையில் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி பல்வேறு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து ரோஸ்மேரி அடிக்கடி தனது மகன்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருடப்பட்ட காலணிகள்…. பணியாளர்கள் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன காலணிகளை சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள பெரியமேடு என்ற பகுதியில் முகமது அப்தாப் என்பவர் காலணி விற்பனை செய்யும் கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடையில் இருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள காலணிகள் கொஞ்சம் கொஞ்சமாக திருட்டு போய் இருப்பதை அவர் கவனித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த கடையில் வேலை செய்யும் பணியாளர்களே இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக முகமது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உலா வரும் நாய்கள்…. அச்சத்தில் பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

நாய்களின் அச்சுறுத்ததால் எழும்பூர் ரயில் நிலையத்தில்  பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் நாய்கள் உலா  வருகின்றது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்கு அவதிப்படுகின்றனர்.  இதுகுறித்து பயணிகள் தரப்பில்  கூறும்போது எழும்பூர் ரயில் நிலையத்தில், பயணிகள் அமர்ந்திருக்கும் இருக்கைகளுக்கு அருகில் நாய்கள் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருப்பதால் பயணிகள் மிகவும் அச்சத்தில் இருகின்றனர். மேலும் உணவு பொட்டலங்களை பிரித்து வைத்தவுடன் நாய்கள் அருகில்  சென்று நிற்பதால்  கடித்து விடுமோ என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. கரை ஒதுங்கிய சடலம்…. போலீஸ் விசாரணை…!!

நண்பர்களுடன் சேர்ந்து கடலில் குளித்த வாலிபர் ராட்சத அலையில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பீகாரை சேர்ந்த ரோகித் குமார் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில்ரோகித் குமார் தனது  நண்பர்களுடன் அண்ணா சமாதிக்கு பின்புறமாக இருக்கும் கடலில் குளித்துக் கொண்டிருந்துள்ளனர்.  அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கிய  ரோகித் குமார் கடலுக்குள் மாயமாகிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோசடி வழக்கில் கைது….. கைதிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி திடீரென உயிரிழந்து விட்டார். சென்னை மாவட்டத்திலுள்ள மடிப்பாக்கம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவர் பணத்தை  மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாலசுப்பிரமணியம் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி கைதி பாலசுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியம் உடலை பிரேத […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிக்கப்பட்ட இடமா….? முன்னாள் கவுன்சிலர் தற்கொலை முயற்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

முன்னாள் கவுன்சிலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் அதிமுக அம்மா பேரவை கட்சியின் துணை செயலாளரும், முன்னால் கவுன்சிலரான எம். எஸ் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார்.   இவர் தனக்கு  சொந்தமான நிலத்தில்  ஒரு ஷெட் அமைத்துள்ளார். அதில் இறந்தவர்களை அஞ்சலிக்காக வைக்கப்படும் குளிர்சாதன பெட்டிகளை பொதுமக்களுக்கு இலவசமாக  கொடுத்து வருகிறார். இந்நிலையில் அந்த இடத்தை மூர்த்தி  ஆக்கிரமித்துள்ளதாக  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பொக்லைன் வைத்து அந்த ஷெட்டை இடிக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அறுவை சிகிச்சை செய்த பெண்…. திடீரென நடந்த விபரீதம்… உறவினர்களின் போராட்டம்…!!

அறுவை சிகிச்சை செய்த பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள கொளத்தூர் பகுதியில் இருக்கும்  பெருமாள் தெருவில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார்.   இவருக்கு  சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார்.  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.  இந்நிலையில்  சசிகலாவிற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனால் சசிகலாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன்பின் குணமடைந்து வந்த நிலையில் திடீரென சசிகலா மருத்துவமனையியே உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…. பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்கள்…. போலீஸ் விசாரணை…!!

பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில்  மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை மாவட்டத்திலுள்ள டி.பி.சத்திரத்தில் இருக்கும் சமுதாய நலக் கூடத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட  இரு தரப்பினருக்கு  இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.  அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக  தாக்கிகொண்டனர் . இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்கள் தெருவில் நின்ற 4 மோட்டார் சைக்கிள்களுக்கு நெருப்பு வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தேர்வுக்கு படிக்கல” மாணவனின் விபரீத செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தேர்வு குறித்த பயத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் பகுதியில்  இருக்கும் அண்ணா தெருவில் சந்தோஷ் குமார் என்ற மாணவன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  இவருக்கு தந்தை கிடையாது. இந்த சிறுவன் தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணித தேர்விற்காக சரியாக படிக்காததால் மன உளைச்சலில் இருந்த சந்தோஷ் வீட்டில் யாரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அம்மாவை அழைக்க சென்ற மகன்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டர் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுதிள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள திருவான்மியூரில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு  வினோத்குமார்  என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடித்துவிட்டு அக்கா வீட்டில் இருக்கும்  தனது அம்மாவை அழைப்பதற்காக வினோத் குமார்  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் வினோத்குமாரின் மோட்டார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெற்ற பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

2-வது மாடியில் இருந்து தவறி கிழே விழுந்த கட்டுமான தொழிலாளி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள பாடி ஜெகதாம்பிகை நகரில்  தனியார் கட்டுமான நிறுவனத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இனா முல்ஹக் என்பவர்  பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் திருமலைவாசன் நகரில்  தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பணி நடந்து வருகின்றது. அங்கு  2-வது மாடியில் இனா முல்ஹக் துளையிடும் பணியில் ஈடுபட்டு கொண்டுஇருந்தார் . அப்போது  எதிர்பாராதவிதமாக அவர் மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டார். இதில் பலத்த  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான ஒரே மாதத்தில்…. சடலமாக தொங்கிய புதுப்பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் எம்.எம்.டி.ஏ. காலனியில் திவ்யபாரதி என்பவர் வசித்து வந்துள்ளார்.  இந்த பெண் வளசரவாக்கத்தில் வசிக்கும் விஸ்வநாத் என்பவரை கடந்த 1-ஆம் தேதி அன்று பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திவ்யபாரதி அரும்பாக்கத்தில் இருக்கும் தனது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து சோகமாக காணப்பட்டுள்ள திவ்யபாரதி தன் அறைக்கு சென்று நீண்ட நேரமாக  கதவை திறக்காமல் இருந்துள்ளார்.  இதனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயிலில் சென்ற பெண்…. வாலிபர் செய்த செயல்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

ஓடும் ரயிலில் பயணிகளின் நகையை  திருடிய வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  சென்னை மாவட்டத்தில் உள்ள பூங்கா ரயில் நிலையத்தில்இருந்து சென்ற  ரயிலில் பயணித்த  பெண் ஒருவரிடம் இருந்து மர்மநபர்  தங்கச்சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றார்.  இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்துள்ளனர்.  அதேபோல்  செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் நகையும்,  மாம்பலம் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் நகை மற்றும்  செல்போனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

30 ஆண்டுகள் பழமையான கோவில்…. காணாமல் போன உற்சவர் சிலை…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன முருகர் சிலையை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள, காசிமேடு சூரிய நாராயண சாலையில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் உள்ளது. இந்த கோவில் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது. இந்த கோவிலை, அறங்காவலர் அலமேலு என்பவர் வழக்கம்போல் திறந்துள்ளார். அப்போது கோவிலில் உள்ள மூலவர் சிலை அருகிலிருந்த, பித்தளை மற்றும் செம்பு கலந்த உலோகத்தினாலான, முருகர் உற்சவர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து அலமேலு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காவல் நிலையத்திற்குள் நுழைந்த வாலிபர்…. அதிகாரிக்கு கொலை மிரட்டல்…. வைரலாகும் வீடியோ…!!

குடி போதையில் வாலிபர் ஒருவர் காவல்துறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அபிராமபுரம் காவல் நிலையத்தில் இரவு 10 மணி அளவில் காவல்துறை அதிகாரியான சதீஷ்குமார் பணியில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்ற வாலிபர் குடிபோதையில் காவல் நிலையத்துக்குள் நுழைந்து, தகராறு செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட காவல்துறை அதிகாரியான சதீஷ்குமாரை, அந்த வாலிபர் பிளேடால் வெட்டி விடுவேன் என்றும், ரோந்து பணிக்கு வரும்போது கொலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-பேருந்து மோதல்…. தலை நசுங்கி பலியான ஊழியர்…. சென்னையில் பரபரப்பு…!!

இருசக்கரவாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் மாநகராட்சி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .  சென்னை மாவட்டத்திலுள்ள  செட்டி தோட்டம் பகுதியில் மெக்கானிக்கான ஆகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவர் சென்னை மாநகராட்சியில் குப்பை லாரிகளை பழுதுபார்க்கும் பணியினை செய்து வந்துள்ளார்.   இந்நிலையில் ஆகாஷ் தனது இருசக்கர வாகனத்தில்  ராயர்புரம் சிமெண்ட்ரி சாலையில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த  மாநகரப் பேருந்து ஆகாஷின் இருசக்கர வாகனம்  மீது  பலமாக மோதிவிட்டது. இதனால் நிலைதடுமாறி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதை எப்படி குடிக்கிறது….? பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பாதிக்கபட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள ஓட்டேரி பகுதியில் கோவிந்தபுரம், செங்கம் தெரு, வீரராகவன் தெரு, கந்தன் தெரு உள்ளிட்ட உட்பட 16 தெருக்கள் இருக்கின்றன.  இந்த பகுதிகளில்  கடந்த சில நாட்களாக  கழிவுநீர் கலந்த குடிதண்ணிர் வந்துள்ளது.இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர்.  ஆனாலும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இந்நிலையில் கோபம் அடைந்த பொதுமக்கள் திடீரென அப்பகுதியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்கு காசு இல்ல…. தம்பதியினரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாததால்  தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள தடபெரும்பக்கம் கிராமத்தில் கூலி தொழிலாளியான ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவரின் மனைவி ராஜம்மாள் இவர்மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்துள்ளார்.  இந்த  தம்பதிகளின் பிள்ளைகள் அவரவர் குடும்பத்துடன்  தனியாக வசிக்கின்றனர்.  இந்நிலையில் பக்கவாதம் நோயினால்  பாதிக்கப்பட்ட ஜெயராமனுக்கு போதிய வருமானம் இல்லாததால்  சிகிச்சை பெற முடியாமல் மிகவும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேர்வுக்காக சென்ற வாலிபர்…. மர்ம நபர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்பேடு மார்க்கெட்டில் மர்ம நபர்கள் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் தனியார் கல்லூரியில் பணியில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்பதற்காக, வேலூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ,கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். பின்னர் மதுரவாயலில் உள்ள தனது நண்பரை காண்பதற்காக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.  அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் மணிகண்டனின் கையிலிருந்த கைப்பேசியை பறிக்க முயன்றுள்ளனர். இதனை சுதாரித்த மணிகண்டன் கைபேசியை பறிக்க […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த நண்பர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீரில் மூழ்கிய வாலிபரின் சடலத்தை 5 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் எனும் பகுதியில் சஞ்சீவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி. நிறுவனத்தில் கணினி பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சீவ் தனது தோழர்களான வானகரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் சோரஞ்சேரியை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோருடன் திருவள்ளூருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து செல்லும் வழியில் அரண்வாயல் பகுதியில் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி…. பிரசவ பயத்தால் நடந்த விபரீதம் …. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பிரசவ அச்சத்தால் மாத்திரை சாப்பிட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொரட்டூர் தந்தை பெரியார் நகரில் குமாரி கஞ்சக்கா என்பவர் தனது கணவர் பிரதாப் உள்காவுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியினர் ஒடிசாவை சேர்ந்தவர்கள். பிரதாப் சென்னையில் கூலி தொழிலாளியாக பணிபுரிகிறார். மேலும் குமாரி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரது மதினி, பிரசவத்தின்போது உயிரிழந்துள்ளார். அவரின் இறுதி சடங்குக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பிய குமாரிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது…. போலீஸ் மீது மண்ணெண்ணெய் ஊற்றிய பெண்…. சென்னையில் பரபரப்பு…!!

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது மண்ணெண்ணெய் ஊற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள நெற்குன்றம் பகுதியில் இருக்கும் மதுரவாயல்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மார்க்சகாய ஈஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 23 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் உள்ளது. இந்த இடமானது இந்து சமய அறநிலையத்துறையின் பாற்பட்டது. இந்நிலையில் கோவிலுக்குச் சொந்தமான அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கடைகளை கட்டி அதில் பல வருடங்களாக வசித்து வருகின்றனர். ஆனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த சிறுவன்…. மேம்பாலத்திற்கு அடியில் கிடந்த மாணவன்…. சென்னையில் பரபரப்பு….!!

ஓரினச்சேர்க்கைக்கு மறுப்புத் தெரிவித்த சிறுவனை கல்லால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் மேம்பாலத்திற்குக் கீழ் தலையில் பலத்த காயங்களுடன் ஒரு சிறுவன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காயமடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவன் அதே பகுதியில் வசிக்கும் 4-ம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. மகனின் பரபரப்பு புகார்…!!

கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மூதாட்டி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் எண்ணூரில் 60 வயதுடைய ஆண்டாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் தண்டையார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண் புரை நீக்குவதற்காக அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 20-ம் தேதி அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் திடீரென மூதாட்டிக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த மூதாட்டியை சென்னை அரசு ஸ்டான்லி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வீட்டைத் தர முடியாது” பெண்ணிற்கு கொலை மிரட்டல்…. பா.ஜ.க பிரமுகர் கைது….!!

வாடகைப் பணத்தை கேட்க சென்ற பெண்ணிடம் பா.ஜ.க பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பொத்தேரி பகுதியில் லீனா பெர்னாண்டஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அயல்நாட்டில் வசிக்கும் மருமகன் உள்ளார். அந்த மருமகனின் இல்லம்  கொட்டிவாக்கத்தில் அமைந்துள்ளது. அந்த வீட்டின் பராமரிப்புகளை லீனா பெர்னாண்டஸ் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட பா.ஜ.க வழக்கறிஞர் அணி செயலாளர் சிவஅரவிந்தன் என்பவருக்கு மாதம் 40ஆயிரம் ரூபாய் என்று அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைகுப்புற கவிழ்ந்த ஷேர் ஆட்டோ…. புதுமாப்பிள்ளை உட்பட 3 பேர் பலி…. சென்னையில் பரபரப்பு…!!

ஷேர் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து பெருங்களத்தூர் பகுதிக்கு 6 நபர்களை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ புறப்பட்டுள்ளது. இந்நிலையில் மிகவேகமாக சென்றுக்கொண்டிருந்த ஆட்டோ இரும்புலியூர் சிக்னலில் நிறுத்தபட்டிருந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் அதனைத் திருப்பியுள்ளார். அப்போது திடீரென  கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஆட்டோ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உள்ளாடையில் இருந்த தங்கம்…. அதிகாரிகளின் கிடுக்குப்பிடி விசாரணை…. விமான நிலையத்தில் பரபரப்பு…!!

தங்கத்தை கடத்தி செல்ல முயன்ற வாலிபரை சுங்க அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து விட்டனர்.  சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் உள்ளது. அங்கு துபாயிலிருந்து  சிறப்பு விமானம் வந்து இறங்கியுள்ளது. அதில் தங்கத்தினை கடத்தி வந்துள்ளதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த ஒரு வாலிபரை அதிகாரிகள் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாய்க்கு 2 லட்ச ரூபாய் செலவா….? விமானத்தில் வந்திறங்கிய பெண்….. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெண் ஒருவர் ஆடம்பரமாக செலவு செய்து நாய்க்குட்டியை அழைத்து வந்த வீடியோ சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியுள்ளது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் “மால்டீஸ்” என்ற உயர்ரகப் பிரிவு நாய்க்குட்டியோடு வந்துள்ளார். இதுகுறித்து விசாரித்ததில் அவர் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு இல்லாமல் தனது செல்லப் பிராணியான “பிலா” என்ற பெயர் கொண்ட அந்த நாய் குட்டியையும் தன்னோடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காத்திருந்த அந்தமான் பெண்…. மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாபம்…. விமான நிலையத்தில் பரபரப்பு….!!

பெண் விமான நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தமான் தீவில் பீர்முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கேரளாவிற்கு சென்று சிகிச்சைப் பெறவேண்டும் என்ற நோக்கில் இருந்துள்ளார். அதன்படி அந்தமானில் இருந்து சென்னைக்கு வந்த பாத்திமா அங்கிருந்து கோயம்புத்தூர் சென்று, பின் கேரளா செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்.  அந்த திட்டத்தின்படி பாத்திமா சென்னைக்கு வந்துள்ளார். கோயம்புத்தூர் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வடிகால்கள் தூர்வாரும் பணி…. தலைமை செயலரின் நேரடி ஆய்வு…. அதிகாரிகளுக்கு அறிவுரை…!!

மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை தலைமை செயலர்  நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். சென்னை மாவட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகமானது வரும் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளனர். இந்த முகாம் மூலம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும் 20% தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமைச் செயலாளரான வெ. இறையன்பு வெஸ்ட்காட் சாலை, எம்.ஆர்.சி நகர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீ விபத்து முன்னெச்சரிக்கை…. கேஸ் சிலிண்டர் வெடிப்பில் தற்காப்பு…. நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி….!!

அரசு மருத்துவமனையில் தீ விபத்து முன்னெச்சரிக்கை குறித்து செயல் விளக்கம் அளித்த தீயணைப்பு விரர்களை மக்கள் பாராட்டியுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தீயணைப்புத்துறையினர் சார்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அந்த சூழலை எவ்வாறு கையாளுவது என்றும், தீயை எப்படி கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், தீக்காயம் அடைந்தவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது குறித்தும், ஒத்திகை நிகழ்ச்சி நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டுள்ளது. அதில் தீயணைப்புத்துறையினர் வருவதற்கு முன்னதாக பொதுமக்கள் தங்களை எவ்வாறு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உனக்கு சமைத்து தர வேண்டுமா….? மகனின் கொடூர செயல்… சென்னையில் பரபரப்பு…!!

மதுவெறியில் மகன் தாயை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி நேருநகர் பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மூர்த்தி என்ற மகன் உள்ளார். மதுபோதைக்கு அடிமையான மூர்த்தி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இதனால் லட்சுமிக்கும் மூர்த்திக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் இரவில் மதுபோதையில் வந்த மூர்த்தி சாப்பிட்டுவிட்டு வெளியில் சென்றுள்ளார். அதன்பின் வீட்டுக்கு திரும்பியவர் லட்சுமியிடம் மீண்டும் உணவு கேட்டுள்ளார். அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதையில் ரகளை செய்த அதிகாரி…. வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ…. சென்னையில் பரபரப்பு…!!

குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசிய காவலரின் வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் போக்குவரத்து காவல்துறை அதிகாரியான கிருஷ்ணகுமார் வசித்து வருகிறார். இவருக்கு அண்டைவீட்டார் முருகன் என்பவரோடு வாகனம் நிறுத்துதல் தொடர்பான தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் குடிபோதையில் இருந்த கிருஷ்ணகுமார் தனது அக்கம்பக்கத்தினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அங்கே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை கீழே தள்ளிவிட்டும் அக்கம்பக்கத்தினரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியும் கிருஷ்ணகுமார் ரகளை செய்துள்ளார். அதோடு தன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போக்குவரத்து நெரிசல்…. அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்….!!

போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பூக்கடை ரத்னா பஜார் ரோடு மற்றும் என்.எஸ்.சி போஸ் ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட சாலையோரம் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அங்கு ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டுள்ள கடைகளே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல செயற்பொறியாளர் சொக்கலிங்கம் மற்றும் 59-வது வார்டு உதவி பொறியாளர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரத்த வாந்தி எடுத்த சிறுவர்கள்…. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்…. சென்னையில் பரபரப்பு…!!

குளிர்பானம் அருந்திய இரு சிறுவர்கள் இரத்த வாந்தி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் புது வண்ணாரப்பேட்டையில் உள்ள வெங்கடேசன் தெருவில் மாநகரப் பேருந்து ஓட்டுநரான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமன் சாய் என்ற மகன் உள்ளான். இந்த சிறுவன் திருவெற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 2- ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் செந்தில்குமாரின் தங்கை மகனான 4-ஆம் வகுப்பு படிக்கும் ஓமேஷ்வரன் இவர்களது வீட்டிற்கு வந்துள்ளான். இந்த இரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு நீதிமன்றம் 5 வருட ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக  தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் 2013-ம் வருடம்  திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் பூபாலன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு சென்னை மகளிர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு கொடுத்த சாக்லேட் பிஸ்கட்…. 4 மணி நேரத்தில் மீட்பு…. சென்னையில் பரபரப்பு…!!

கடத்தப்பட்ட குழந்தையை 4 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டரவாக்கம் பகுதியில் தனியார் கம்பெனியின் ஊழியர்களான மிதிலேஷ்- மீராதேவி தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விஷ்ணு, ஷ்யாம் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த தம்பதிகள் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை பராமரிக்க  முடிவதில்லை. அதனால் இவர்கள் வீட்டின் மாடியில் வசிக்கும் மத்திய பிரதேசத்தை சார்ந்த  ஷிவ்குமார் மற்றும் மோனுவிடம் குழந்தைகளை விட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல் குழந்தைகளை விட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வேலை ரெடியா இருக்கு” பல லட்சம் ரூபாய் மோசடி….பாதிக்கப்பட்டவர்களின் பரபரப்பு புகார்…!!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேர் பண மோசடியில் ஈடுபட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிலர் புகார் மனு அளித்துள்ளனர். அதில் ரயில்வேதுறையில் உதவியாளர் பணியினை வாங்கி தருவதாக கூறி 11 நபர்களிடமிருந்து 55 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த புகார் மனுவை  வியாசர்பாடி பகுதியில் வசிக்கும் தினேஷ் உள்பட பணத்தை இழந்த 11 பேர் அளித்துள்ளனர். மேலும் ரயில்வே துறையில் வேலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விவாகரத்து கேட்ட மனைவி…. பேஸ்புக் பழக்கத்தால் நடந்த சம்பவம்…. பல லட்சம் ரூபாய் மோசடி…!!

விவாகரத்து வாங்கி தருவதாக கூறி பெண்ணிடமிருந்து ஒருவர் 13 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டத்திலுள்ள சூரப்பட்டு சிவப்பிரகாசம் நகர் பகுதியில்  தனியார் கம்பெனி உதவி மேலாளரான லட்சுமிபிரியா என்பவர் மனக்கசப்பின் காரணமாக கணவரை பிரிந்து 8 வயது மகளுடன் வசித்து வருகிறார். கடந்த  2 வருடங்களுக்கு முன் மதன்குமார் என்பவர் புழல் ஜெயிலில் அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறி லட்சுமி பிரியாவுக்கு பேஸ்புக்கில் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் தன் கணவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களால் நடந்ததா….? ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மர்மநபர்கள் வாலிபரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காந்தி சாலை மெயின்ரோட்டில் ரத்தவெள்ளத்தில் தலையில் வெட்டுக்காயத்தோடு ஒரு ஆணின் சடலம் கிடப்பதாக திருவேற்காடு காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை பார்வையிட்டனர். அப்போது அந்த வாலிபரின் உடல் மற்றும் தலையில் வெட்டுக் காயங்கள்  இருந்ததால் மர்ம நபர்கள் அவரை கொலை செய்திருப்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சடலமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இழுத்து செல்லப்பட்ட பைக்குகள்…. ஓட்டுநரின் அலட்சியத்தால் நடந்த விபரீதம்…. சென்னையில் பரபரப்பு…!!

ஆம்னி பேருந்து ஓட்டுனரின் அலட்சிய போக்கால் நால்வர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் தனியார் ஆம்னிபேருந்து ஈ.வி. கே. எஸ். சாலை வழியாக வந்துள்ளது. அப்போது பேருந்தின் மேல்பகுதியில் கயிறு தொங்கியுள்ளது. இதனை யாரும் கவனிக்கவில்லை. இந்நிலையில் சென்னை மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தை பேருந்து நெருங்கிய சமயத்தில் கவனிக்கப்படாத கயிறு அருகில் சென்ற பைக் சக்கரத்தில் சிக்கியதோடு அதனை தாறுமாறாக இழுத்துச் சென்றுள்ளது. இதனால் பைக்கில் சென்ற 2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மீன்பிடிக்க சென்ற நண்பர்கள்….மாணவனுக்கு நடந்த விபரீதம்….சோகத்தில் குடும்பத்தினர்….!!

7-ம் வகுப்பு  படிக்கும் மாணவன் குட்டையில் முழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை மாவட்டத்திலுள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7ம் வகுப்பு படிக்கும் ரஞ்சன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது தோழர்களுடன் எர்ணாவூர் முருகன் கோவில் அருகேயுள்ள குட்டையில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கால்தவறி குட்டைக்குள் விழுந்த ரஞ்சன்குமாரை காப்பாற்றுவதற்காக தோழர்கள் அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளனர். ஆனால் ரஞ்சன்குமாரை காப்பாற்ற இயலாததால்  தீயணைப்பு படையினருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எனக்கு நெஞ்சு வலிக்குது” பேருந்தில் பெண் செய்த வேலை…. போலீஸ் விசாரணை…!!

நெஞ்சு வலியால் துடிப்பது போல் நடித்து பெண் 10 பவுன் தங்க நகையை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பெத்தானியாபுரத்தில் ஜெயசுதா என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள  திருமங்கலத்தில் வசிக்கும் தனது சித்தி மகளின் திருமணத்திற்காக சென்றுள்ளார். இந்நிலையில் திருமண விழா முடிந்தபிறகு வீடு திரும்புவதற்காக திருமங்கலம் -கோவில்பட்டி பேருந்தில் ஜெயசுதா ஏறியுள்ளார். அப்போது பக்கத்தில் இருந்த பெண் தனக்கு நெஞ்சுவலிப்பது போல நடித்து தீடிரென கள்ளிக்குடியில் இறங்கிவிட்டார். அதன்பிறகு […]

Categories

Tech |