அரூர் அருகே அரசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த 3 கோடியே 47 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலையில் இருந்து தருமபுரி நோக்கி புறப்பட்டு சென்ற அரசு பேருந்தை பையர்நாயக்கன்பட்டி அருகே சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.அப்போது அந்த பேருந்தில் 7 பைகள் கேட்பாரற்று கிடந்ததால் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. யாரும் உரிமைக்கோராத அந்த பைகளை திறந்து பார்த்த போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததைக் கண்டு தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பையில் இருந்த மொத்தம், 3 கோடியே […]
