பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என்று இஸ்ரோ உறுதியாக தெரிவித்துள்ளது. சந்திரயான் 2 திட்டத்தின்படி இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என ஒட்டு மொத்த இந்தியாவும் காத்திருந்தது. நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை என்பதால் பிரதமர் மோடி இஸ்ரோ மையத்திற்கு ஆர்வமுடன் இதனை காண வந்திருந்தார். ஆனால் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கிமீ தூரத்தில் இருக்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு சிக்னல் கிடைக்கவில்லை. […]
