தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவரது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஐதராபாத் பேகும்பேட்டை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு நேற்று மாலை ரேணிகுண்டா வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் திருமலைக்கு வந்தனர். திருமலைக்கு வந்தவுடன் முதல்வர் சந்திரசேகர ராவை, திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி […]
