மத்திய அரசின் அறிவிப்பின்படி பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளை கடந்து செல்வதற்கு வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் கண்டிப்பாக ஓட்டப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான சுங்க சாவடியான உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பணம் கட்டி சுங்க சாவடியை கடந்து செல்பவர்களுக்கான தனி வரிசை அமைக்கப்பட்டு, ஸ்டிக்கர்கள் இல்லாமல் […]
