ராஜஸ்தானில் மேலும் 57 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று பிறந்த குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,535 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ராஜஸ்தானில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பாதிக்கப்பட்டவர்களில் ஜெய்ப்பூரில் 43 பேருக்கும், ஜோத்புரில் 6 பேருக்கும், கோட்டாவில் 3 பேருக்கும் புதிதாக கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று 67 வயது நிரம்பிய நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். […]
