பஞ்சராகி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் அடுத்திருக்கும் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அஸ்தாஜ் அகமத். இவருடைய தந்தை ரஷீத் அஹ்மத் மற்றும் தாயார் துரையா, மனைவி சப்பனா மற்றும் 2 வயது குழந்தை இணையா ஆகியோருடன் பெங்களூருவில் இருக்கும் தங்களது உறவினர்களை பார்ப்பதற்காக வேலூரில் இருந்து காரில் புறப்பட்டனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கல்குட்டை பெருமாள் கோவில் எதிரில் சென்ற […]
