மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மலையனூர் தொகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்தியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜீவா, அம்முலு என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் பரமசிவம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர் விழுப்புரம் […]
