வாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தென்கரை மற்றும் கட்டளை பாசன விவசாயிகள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தென்கரை வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் தண்ணீர் திறக்க உயர் அதிகாரிகளிடம் பேசி ஒரு வாரத்திற்குள் […]
