அரசு பஸ் ஒன்று திடீரென நிலைதடுமாறி வாய்க்காலுக்குள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலிருந்து சிதம்பரத்திற்கு 30 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை காட்டுமன்னார்கோவில் பகுதியில் வசித்து வரும் குபேந்திரன் ஓட்டி வந்தார். இந்த பேருந்தானது கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி அருகே உள்ள ரெட்டைகுலம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறிய பேருந்து சாலையோரம் உள்ள வாய்க்காலில் பாய்ந்து விட்டது. இதனால் பேருந்தில் பயணித்த பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, […]
