தனியார் பேருந்து பாலத்திற்கு அடியில் தேங்கிய நீரில் சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோவை ராமநாதபுரம், கவுண்டன்பாளையம், காந்திபுரம், உக்கடம் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு சென்றவர்கள் என அனைவரும் சிரமப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவை ரயில் நிலையம் அருகே இருக்கும் லங்கா கார்னர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் மழைநீர் அதிகமாக […]
