பூதலூர் அருகே நேருக்கு நேர் 2 பைக்குகள் மோதிக்கொண்டதில், அதில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள புதுப்பட்டி என்ற பகுதியில் சானூரப்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்தவர், மீனாட்சி சுந்தரம் என்பவரது மகன் தனசேகரன் (வயது 39). இவர் புதுப்பட்டியிலுள்ள தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாகப் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பிச் செல்லும்போது தனசேகரனும், செங்கிப்பட்டியிலிருந்து பைக்கில் எதிரே வந்து கொண்டிருந்த திருச்சி மாவட்டம் காட்டூர் […]
