குடியரசு தினத்தை முன்னிட்டு ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி 1,999 ரூபாய்க்கான பிளான் பயன்படுத்துவோர், அப்பிளானின் வேலிடிட்டியை 345 நாட்களிலிருந்து 71 நாட்கள் அதிகரித்து 436 நாட்களுக்கு பயன்படுத்தலாம். இந்த பிளானில் ஏற்கனவே தினமும் 3 ஜி.பி டேட்டாவும், அளவில்லா அழைப்புகளும், தினமும் 100 குறுஞ்செய்திகளும் இருந்து […]
