Categories
திருச்சி திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் ஐந்து நாட்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். வாணியம்பாடி தனியார் மைதானத்தில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மாபெரும் கண்டன பேரணி […]

Categories
தேசிய செய்திகள்

“தேச துரோகிகளை சுட்டுத்தள்ளனும்”…. சர்ச்சையாக பேசிய அமைச்சர்… விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்..!!

தேர்தல் பிரச்சாரத்தின் போது தேச துரோகிகளை சுட்டுத்தள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் முழக்கமிட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்வருகின்ற  பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முடிவுகள் பிப்ரவரி 11-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் […]

Categories
தேசிய செய்திகள்

‘சிஏஏவுக்கு எதிராகப் போராட பணம் வாங்கினேனா?’ – மூத்த வழக்கறிஞர் ஆவேசம்

சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிடம் பணம் பெறவில்லை என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறியுள்ளார். சமீபத்தில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டு கடும் விமர்சனத்துக்குள்ளானவர் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங். ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை சோனியா காந்தி மன்னித்ததை மேற்கோள் காட்டிய அவர், அதேபோல் நிர்பயா தாயார் ஆஷா தேவியும் குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என்று ட்வீட் செய்திருந்தார். இதற்கு ஆஷா […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பாஜக செயலாளர் கொலை… பாஜக ஆர்ப்பாட்டத்தில் கடை ஊழியர் படுகாயம்…

திருச்சியில் பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளை அடைக்க வேண்டும் என்று பாஜகவினர் வற்புறுத்தியுள்ளனர் அப்போது ஏற்பட்ட தகராறில் கடை ஊழியர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காந்தி மார்க்கெட் அருகே உள்ள உப்புபாறை பகுதியை சேர்ந்தவர் விஜயரகு. பாலகரை மண்டல பாஜக செயலாளராக இருந்து வந்த இவர் மார்க்கெட்டில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணியையும் செய்து வந்துள்ளார். இன்று அதிகாலை மார்க்கெட் நுழைவாயில் பகுதியில் நின்று கொண்டிருந்த விஜயரகுவை  அடையாளம் […]

Categories
தேசிய செய்திகள்

”முதல்வருக்கு நேர்ந்த கதி” வைரலாக போட்டோவால் அதிர்ச்சி ….!!

வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு என்ன நேர்ந்தது, அவர்கள் எப்படி உள்ளார்கள் என்பது குறித்து கூட வெளியுலகுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இதையடுத்து, வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் வெளியிடப்பட்டது. இது, சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. தாடியுடன் இருக்கும் அவரை […]

Categories
மதுரை மாநில செய்திகள்

“மதுரை AIMS” 1 ஆண்டு நிறைவு…. கல்லு மட்டும் தான் நட்டீங்க…. கட்டிடத்த காணோம்…. ஏமாற்றுகிறதா மத்திய அரசு…? பொதுமக்கள் கேள்வி..!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மத்திய அரசு 2015-16 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை சார்ந்த அதிகாரிகள் தமிழகம் வந்து இடங்களை ஆய்வு செய்தனர். இறுதியாக மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 1,264 கோடி ரூபாய் செலவில் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாஜக வலையில் சிக்கமாட்டார் ரஜினி – கே.எஸ்.அழகிரி

பாரதிய ஜனதா கட்சி விரித்திருக்கும் வலையில் ரஜினிகாந்த் சிக்க மாட்டார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருக்கிறார் குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் ஆளும் மோடி அரசு துக்ளக் தர்பாரை மிஞ்சி விட்டதாக கூறினார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது துக்ளக் தர்பார் தலை நகரத்தை மாற்றியது ஆனால் இவர்கள் ஒரு மனிதனுடைய குடியுரிமை மாற்ற நினைக்கிறார்கள் இது மிகவும் தவறு எனவும் […]

Categories
அரசியல் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை… திருச்சியில் பரபரப்பு..!!

திருச்சியில் பாஜக பிரமுகர்  விஜயரகு என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் பாலக்கரை பாஜக மண்டலத் துணைத் தலைவர் விஜயரகு என்பவர் காந்தி மார்க்கெட் சாலையில் இன்று அதிகாலை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி  காலையில்  உயிரிழந்தார். இதனிடையே முன்விரோதம் காரணமாக விஜயரகுவை அரிவாளால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமருக்கு பரிசாக சட்ட புத்தகம்

இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்காக ஆர்டர் செய்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 71வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.  இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு புத்தகம் முன்பதிவு செய்யப்பட்டதை தெரிவிக்கும் புகைப்படம் ஒன்றும் பதி விடப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில் அரசியலமைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல்: தொண்டர் வீட்டில் சாப்பிட்ட அமித்ஷா..!!

தேர்தல் பரப்புரையை முடித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தொண்டர் வீட்டில் உணவருந்தினார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதனால் தற்போது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் வேலைகளில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் நேற்று தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக தலைவருக்கானதேர்தல் பாத்து நாளில் – இல கணேசன்.

பாரதிய ஜனதாவின் மாநில தலைவர் பதவிக்கு ஒருவாரம் அல்லது பத்து நாட்களில் தேர்தல் நடைபெறும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார். பாஜக தலைவராக தமிழிசை இருந்த சமயத்தில் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  இதனைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் பதவி தற்போது காலியாக உள்ளது. இந்த  பதவியை நிரப்பும் பாஜக தலைவர் தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் கூறியது, டிசம்பர் முதல் வாரத்தில் பாஜக மாநில தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறக் கூடும் அப்போது […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பட்ஜெட் 2020: அதிக செலவு & சரியாக செலவு

கோடீஸ்வரன் முதல் சாமானியன் வரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 2020-2021 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதையை நோக்கி செலுத்த அரசாங்க செலவினங்கள், ஏன் சரியான செயல் என்று பொருளாதார வல்லுநர் மகேந்திர பாபு குருவா தெரிவிக்கிறார் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான முதல் முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைப்பார். இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று பேசப்படும் இன்றைய […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பட்ஜெட் 2020: வரி விலக்கை எதிர்பார்க்கும் வரி வல்லுநர்கள்

இந்த ஆண்டுக்கான பட்ஜெட், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பொது மக்கள் செலுத்தும் வருமான வரியில் விலக்கு அல்லது நிவாரணம் வழங்கவேண்டும் என வரி வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து மூத்த பத்திரிகையாளர் கிருஷ்ணானந்த் திரிபாதி எழுதிய கட்டுரையின் சாராம்சம் இதோ மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வருமான வரி செலுத்துவோர் கூச்சலிட ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். வரி விலக்கு, நிவாரணம் என எதிர்பார்ப்புகள், […]

Categories
தேசிய செய்திகள்

‘அதிகாரத்தில் இருப்பவர்கள் ஜனநாயகத்தைத் துண்டாடுகிறார்கள்’ – சிதம்பரம்!!

ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்தங்கியுள்ளதைத் தொடர்ந்து, அதிகாரத்தில் உள்ளவர்கள் நாட்டை துண்டாடுவதாக சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜனநாயக நாடுகளில் மனித உரிமைகள் எப்படி காக்கப்படுகிறது என்பது குறித்த பட்டியலை ‘தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 10 இடங்கள் கீழே சென்று 51ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜனநாயக முறை குறைந்ததற்கு மனித உரிமைகள் பறிக்கப்படுவதே காரணம் என்று ‘தி எகனாமிக் இன்டெலிஜன்ஸ் யூனிட்’ கருத்து தெரிவித்தது. தேர்தல் நடத்தும் முறை, பன்முகத்தன்மை, […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சேலத்தில் ஆன்மிக பேரணி சென்ற பாஜகவினர் கைது.!!

சேலத்தில் ஆன்மிக பேரணி சென்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது, சேலத்தில் 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஆகியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்கவேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் உள்ளிட்டவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து DYFI அமைப்பினர் கண்டன பேரணி…!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்(DYFI) கண்டன பேரணி நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன பேரணி நேற்று நடைபெற்றது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டம் வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவா இல்ல மோ(டி)திமுகவா? முணுமுணுப்பில் ரத்தத்தின் ரத்தங்கள் …!!

பெரியார் குறித்து அவதூறாக பேசிய ரஜினிக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும், தன் கட்சியினரும் கொந்தளித்துக்கொண்டிருக்க, பாலாஜியோ கூலாக ரஜினிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. போருக்கு தயாராகி இருக்கும் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய பேரணியில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்ததாகவும் அதை துக்ளக் இதழ்தான் வெளியிட்டதாகவும் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு அவர் மன்னிப்பு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

விவசாயம் மூலம் இந்திய பொருளாதாரத்தை உயர்த்த முடியும் – வேளாண் பொருளாதார நிபுணர் விஜய் சர்தானா …!!

வேளாண் பொருளாதார நிபுணர் விஜய் சர்தானா இந்தியாவின் பொருளாதாரத்தை விவசாயத் துறையின் மூலம் உயர்த்த என்ன தேவை என்பதை விளக்கினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். மத்திய நிதியமைச்சர் சீதாராமன் நாடாளுமன்றத்தில் ஒரு சீரான பட்ஜெட் உரையை நிகழ்த்துவார் என கருதப்படுகிறது. பட்ஜெட் தொடர்பான அனைத்து விவாதங்களுக்கிடையில், விவசாய பொருளாதார நிபுணர் விஜய் சர்தானா பேசிய போது நொறுக்கப்பட்ட பொருளாதாரத்தை விவசாயத்தால் எவ்வாறு புதுப்பிக்க […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

மத்திய பட்ஜெட்… ஒரு வரலாற்று பார்வை….. !!

இந்தியாவின் தேவைகள் என்ன ? என்பதை வகைப்படுத்தி அதற்கு தேவையான நிதிகளை ஒதுக்கும் பட்ஜெட் முதலில் எப்போது ? தொடங்கியது யார் ? முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதை சுருக்கமாக பார்க்கலாம் என்ற பெயர் ”பூசெட்டி”  பிரெஞ்சு சொல்லிலிருந்து உருவானது. பூசெட்டி என்ற பிரெஞ்ச் சொல்லுக்கு லெதர் பேக் என்று பொருள். இந்தியாவில் ஈஸ்ட் இந்தியாகம்பனி தான் முதன் முதலில் பட்ஜெட் என்ற விஷயத்தை துவங்கியது. 1860 ஆம் ஆண்டு ஜான் வில்சன் என்ற ஆங்கிலேயே […]

Categories
அரசியல்

வரலாற்றை மறைந்திட முடியாது – எஸ்.வி.சேகர்.

வரலாற்றை மறைத்து விட முடியாது என நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு பாஜக சார்பில் எஸ்.வி.சேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நடிகர் ரஜினி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதிலளித்த இவர் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என தெரிவித்ததோடு எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு, ரஜினி ஆற்றியது எதிர்வினையே தவிர அவர் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

2020 பட்ஜெட் – எதிர்பார்ப்புகள் என்ன? சிறப்பு தொகுப்பு …!!

பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சி காலத்தின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் இந்த பட்ஜெட்க்கான எதிர்பார்ப்புகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார மந்த நிலை உள்ளதால் அதை போக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இந்த பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு உள்ளது. முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்றும் , உள்கட்டமைப்பில் அதிக […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் …..!!

வருகின்ற பிப்ரவரியின் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கின்றார். உலகின் தற்போதைய காலகட்டத்தில் அனைத்து நாட்டின் பொருளாதாரமும் கீழ் நோக்கு பார்வையில் சென்று கொண்டு இருக்கின்றது. இதனால் இந்திய பொருளாதாரமானது  3.5% வளர்ச்சியை மட்டும்தான் அடைந்துள்ளது என்று அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.  காலகட்டத்தில் தான் நிதியமைச்சர் நீர்மலாசீத்தராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றார். இதனால் நாடே உற்று நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றது. இந்திய பொருளாதாரம், இந்திய வணிகம் என அனைத்து சேவைகளும் இந்த பட்ஜெட்டை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக, காங்கிரஸ்சுக்கு….. ”தமிழர் என்றாலே கிள்ளுக்கீரை தான்” …. வேல்முருகன் …!!

7 பேர் விடுதலையில் ஆளும் பாஜகவும் , ஆண்ட காங்கிராஸ்ஸும் அரசியல் செய்வதாக வேல்முருகன் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறுங்கியில் , மத்தியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் , பிஜேபி க்கு எந்த வேறுபாடும் இல்லை. அவர்களுக்கு தமிழர்கள் என்றாலே கிள்ளுக்கீரை . 7 பேர் விடுதலை , பரோல் விடுப்பு என தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி  நீதிமன்றம் தான் வழங்குகின்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பிரிவு 161ஐ  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சவாலுக்கு நாங்க ரெடி – நீங்க ரெடியா…? அமிஷா நோக்கி பாயும் தலைவர்கள் ..!!

குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தன்னுடன் விவாதிக்க தயாரா என சவாலுக்கு அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதம் நடத்த ராகுல்காந்தி , மமதா பானர்ஜி , அரவிந்த் கெஜ்ரிவால் , […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நான் அல்வா அல்ல…… காரமான மிளகாய் ….. பாஜகவை விளாசிய ஓவைசி …!!

நான் இனிப்பான அல்வா அல்ல. காரமான சிவப்பு மிளகாய் என்று பாஜகவை கண்டித்து மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி  பேசியுள்ளார். ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் நிறுவனத் தலைவருமான அசாதுதீன் ஓவைசி, கரீம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-பொதுப் பட்ஜெட்டுக்கு முன்னதாக, பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படும் வரை அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நான் பாஜகவிடம் கேட்கிறேன்.அல்வா என்ற சொல் எங்கிருந்து வந்தது? அல்வா என்பது இந்தி அல்லது உருது வார்த்தையோ கிடையாது. […]

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் 2020: பொருளாதாரத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகள் நிச்சயம் இருக்கும்!

வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் நிச்சயம் பொருளாதாரத்தை சீர்திருத்தத் தேவையான அறிவிப்புகள் இருக்கும் என்று தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி முன்பு கணித்ததைவிட தற்போது குறைவாக(4.8) இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரகாஷ் ஜவடேகர், “வரும் பிப்ரவரி ஒன்றாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ஸ்கெட்ச்….. ”ரஜினியை தாக்கும் அமைச்சர்கள்…. தட்டி தூக்கிய எடப்பாடி …!!

பெரியார் விவகாரத்தில் நடிகர் ரஜினியை தமிழக அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த 20ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அமைச்சர்கள் முக்கியமானவர்கள் 8 பேரை அழைத்து பேசியிருக்கிறார். முக்கியமானவர்கள் லிஸ்டில் ஓபிஎஸ் இல்லாதது தான் ஹைலைட். இந்த கூட்டம் கிட்டதட்ட 4 மணி நேரம் நடந்து இருக்கிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் வெளிப்பாடுதான் ரஜினியை திடீரென அதிமுக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அல்வா என்ற சொல் எங்கிருந்தது வந்தது? பாஜகவுக்கு ஓவைசி கேள்வி

பொதுப் பட்ஜெட் (நாட்டின் வரவு-செலவு திட்டம்) கூட்டத் தொடருக்கு முன்னதாக நடக்கும் அல்வா கிண்டும் நிகழ்வு குறித்து அசாதுதீன் ஓவைசி கேள்வியெழுப்பினார். ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் நிறுவனத் தலைவருமான அசாதுதீன் ஓவைசி, கரீம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-பொதுப் பட்ஜெட்டுக்கு முன்னதாக, பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படும் வரை அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நான் பாஜகவிடம் கேட்கிறேன்.அல்வா என்ற சொல் எங்கிருந்து வந்தது? அல்வா என்பது இந்தி அல்லது உருது வார்த்தையோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”விரட்டி விரட்டி வெளுக்கும் வழக்குகள்” வீராப்பு பேசி இருக்க கூடாது…. புலம்பும் ரஜினி …!!

பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேலும் ஒரு புதிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜிர்வாலை எதிர்கொள்ள பாஜகவின் புதிய ஆயுதம்!

நடைபெறவுள்ள டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளுடன் கூட்டணியை அறிவித்துள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இத்தேர்தலில், 70 தொகுதிகளிலும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளது. அதேபோல காங்கிரஸ் கட்சியும் ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து போட்டியிடவுள்ளன. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக டெல்லி மாநிலத் தலைவர் மனோஜ் திவாரி, டெல்லி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரியார் VS ரஜினி…. ”ட்வீட்டரில் கடும் யுத்தம்”…. மோதிக்கொள்ளும் DMK vs BJP …!!

ரஜினிக்கு எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்டாவதை தொடர்ந்து  திமுகவுக்கும் எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. சமீபத்தில் துக்ளக் பத்திரிகை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது  ,பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்தார். ரஜினின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பதில் சொல்லும் காலம் வரும்” ரஜினிக்கு கி.வீரமணி எச்சரிக்கை …!!

நடிகர் ரஜினிகாந்த் சரியான ஆதாரத்தை காட்ட வேண்டுமென்று திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய போது தந்தை பெரியார் சேலத்தில் 1971இல் நடந்த மாநாட்டில் நடத்திய ஊர்வலத்தில் ராமன் , சீதா உருவத்தை நிர்வாணப்படுத்தி , செருப்புமாலை அனுவித்து அழைத்து  சென்றார்கள் என்று துக்ளக் ஆசிரியர் சோ துணிச்சலாக  எழுதினார். பெரியார் ராமர் சீதையை நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு வந்து ,  செருப்பு மாலை போட்டார் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இரையாகிறாதீங்க….. ”பெரியார் வாழ்க’ னு சொல்வீங்க” ரஜினிக்கு திருமா அட்வைஸ் …!!

பெரியாரை வீழ்த்த நினைத்தவர்கள் அவரிடமே சரணடைந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு. ‘பெரியார் வாழ்க’ என ரஜினி சொல்லும் காலம் வரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்சையாக பேசியதாக விமர்சனம் எழுந்தது. இதற்க்கு ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று திராவிட கழகம் , திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது தெரிவித்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி பெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று தெரிவித்தார். […]

Categories
மாநில செய்திகள்

முடங்கும் BSNL… ”75% ஊழியர்கள் இல்லை”…. நாடு முழுவதும் சேவை பாதிப்பு …!!

தமிழகம் முழுவதும் 75 %  BSNL ஊழியர்கள் கட்டாய விருப்ப ஓய்வு பெற்று உள்ளதால் சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக நிரந்தர பணியாளர்களை விருப்ப ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து 75 சதவீத பணியாளர்கள் விருப்ப ஓய்வு அறிவித்துள்ளனர். இதனால் BSNL சேவை எப்போதும் இல்லாத அளவுக்கு முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கிய ஊக்கத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்கியிருந்தால் இந்த சூழல் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 1 முதல்….. ஒரே நாடு…. ஒரே ரேஷன் அமுல்….. உணவுத்துறை அமைச்சர் தகவல்….!!

ஜூன் 1 முதல் நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் செல்லத்தக்க வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே கொண்டுவந்துள்ளது. ஊர் விட்டு ஊர் மாறி வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் அன்றாட கூலிகள் நாட்டின் எந்த இடத்திலும் தங்களுக்கான ரேஷன் பொருட்களை வாங்கும் வகையில் இந்த திட்டம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அப்படி பேசாதீங்க…. ”வாபஸ் வாங்குங்க C.M”…. மம்தாவிடம் ஆளுநர் சரண்டர் …!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் மேற்கு வங்க மக்கள், பிரதமர் மோடியை அனுமதிக்க மாட்டார்கள் என்று மம்தா தெரிவித்த கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தங்கர் வலியுறுத்தியுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் மேற்கு வங்க மக்கள், பிரதமர் மோடியை மாநிலத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்தார். அக்கருத்துக்கு அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தங்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று இது குறித்துப் […]

Categories
தேசிய செய்திகள்

அமலுக்கு வரும் ‘ஒரு தேசம் ஒரு ரேஷன் கார்டு’ மத்திய அமைச்சர் உறுதி …!!

ஒரு தேசம் ஒரு ரேஷன் கார்டு திட்டம்’ ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார். மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பிகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி முதல் ‘ஒரு தேசம் ஒரு ரேஷன் கார்டு திட்டம்’ அமலுக்கு வரும். இந்த திட்டம் மூலம், ஒரு குடும்ப அட்டை மூலம் தங்களின் பயன்களை பெறலாம். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஊழலை ஒழிப்பதே ஆம் ஆத்மி கட்சியின் நோக்கம் – அரவிந்த் கெஜ்ரிவால்

ஊழலை ஒழித்து மாநிலத்தை முன்னோக்கி அழைத்து செல்வதே ஆம் ஆத்மி கட்சியின் நோக்கம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. காலதாமதமாக சென்ற காரணத்தால் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தனுது வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. எனவே இன்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் […]

Categories
அரசியல்

‘துடைப்பம்’ கெஜ்ரிவாலுடன் சண்டை செய்யும் ‘தாமரை’ சுனில் யாதவ்!

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜக சார்பில் யுவ மோர்ச்சா தலைவர் சுனில் யாதவை அக்கட்சி களமிறக்கியுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், டெல்லி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் காரணம் காட்டி பாஜகவுடனான கூட்டணியை சிரோமணி அகாலி தளம் முறித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் பாஜக தனுது இரண்டாவது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில், புதுடெல்லி தொகுதியில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING : பாஜகவின் புதிய தேசிய தலைவராக ஜே.பி. நட்டா தேர்வு …!!

பாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கட்சிக்குள் தற்போது  தேர்தல் நடைபெற்றது.  பாஜகவின் புதிய தேசிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. தேசிய தலைவரை அனைத்து மாநில தலைவர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்பதால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் செயல்படும் பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வு குறித்து மாணவர்களுடன் உரையாடும் மோடி!

பொதுத்தேர்வு எதிர்கொள்ளப் போகும் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று நடத்துகிறார். நாடு முழுவதும் ஆண்டு பொதுத்தேர்வை எதிர்கொள்ளப் போகும் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள ஆக்கப்பூர்வமான அறிவுரைகளை பிரதமர் மோடி இன்று வழங்கவுள்ளார். ‘பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற பெயரில் ஆண்டுதோறும் மோடி இந்த சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியை மோடி நடத்திவருகிறார். 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்வின் மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி இன்று டெல்லியில் உள்ள டல்கடோரா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எத்தனைக் கட்சிதான் மாறுவார்… குழப்பத்தில் திருநாவுக்கரசர்’ – கடம்பூர் ராஜூ கிண்டல்

 பல்வேறு கட்சிகளுக்குச் சென்று திரும்பிய திருநாவுக்கரசர் தற்போது எங்கே இருக்கின்றார் என்பது தெரியாமல் குழம்பி போயிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கிண்டலாக விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மேலத்தட்டப்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி, தூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் […]

Categories
அரசியல் சென்னை

“ஹைட்ரோ கார்பன்” சுற்றுசூழல் அனுமதியும் தேவையில்லை….. மக்கள் கருத்தும் தேவையில்லை….. மத்திய அரசின் முடிவுக்கு ஸ்டாலின் கண்டனம்….!!

இன்று நடைபெற உள்ள தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், குடியுரிமை திருத்த மசோதா சட்டம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் இவ்வேளையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகளை அடியோடு அழிக்க பார்க்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அமித் ஷாவின் இடத்தை நெருங்கும் ஜே.பி. நட்டா?

பாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அக்கட்சிக்குள் தற்போது தேர்தல் நடைபெற்றுவருகிறது. பாஜகவின் புதிய தேசிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. தேசிய தலைவரை அனைத்து மாநில தலைவர்கள் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்பதால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் செயல்படும் பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சகராகப் […]

Categories
தேசிய செய்திகள்

வரும் ஆனால் வராது…. ”வடிவேலு ஸ்டைலில் காங்.தலைவர்கள்” குழப்பத்தில் தலைமை …!!

இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதை வரவேற்பதாகவும் குறிப்பிட்ட பிரிவினரைப் பாகுபடுத்தும் சி.ஏ.ஏ.வை எதிர்ப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார். குடியுரிமை திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே எதிர்க்கட்சிகளும், மாநில கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அம்மசோதா சட்டமான பின்னும் அவர்கள் அதை எதிர்த்து தினமும் கருத்து கூறிக்கொண்டுதான் இருக்கின்றனர். கேரள அரசு இச்சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தமிழ்நாடு அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இச்சட்டத்தை […]

Categories
தேசிய செய்திகள்

வேலைவாய்ப்பை பாருங்க….. மக்கள்தொகை வேணாம்… ஒவைசி தாக்கு

நாட்டில் தற்போது நிலவிவரும் பெரும் பிரச்னையான வேலைவாய்பின்மை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மக்கள்தொகை குறித்துப் பேசுவது ஏன் என்று ஹைதராராபாத் மக்களவை உறுப்பினர் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார். குடும்பத்துக்கு இரு குழந்தைகள் என்ற கொள்கையைக் கட்டாயமாக்கலாம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அவரின் கருத்துக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், நிசாமாபாத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் பேசிய ஹைதராராபாத் மக்களவை உறுப்பினரும் ஏ.ஐ.எம்.ஐ.எம்(AIMIM) கட்சித் தலைவருமான ஒவைசி, “ஆர்எஸ்எஸ் தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விவசாயிகளை விட வேலையில்லாதவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளது

இந்தியாவில் 2018-ம் ஆண்டில் வேலை இல்லாதவர்கள் தற்கொலை 1.34 லட்சம் பேராக அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண தகவல் அதிர்ச்சி  அளிக்கின்றது. நாட்டில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளதாக பேசப்பட்டு வந்தநிலையில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.அதில் கடந்த 2018 ஆம் ஆண்டில் நாடுமுழுவதும் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருந்ததில்2018ஆம் ஆண்டும் நாடுமுழுவதும் ஒட்டுமொத்தமாக  1, 34 , 516 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது 2017-ம் ஆண்டைவிட 3.6 […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் ஐஐடி, ஐஐஎம் – ஸ்மிரிதி இரானி தகவல்

காஷ்மீரில் ஐஐடி, ஐஐஎம் ஆகிய கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கு முன் பாதுகாப்புக் கருதி அங்கு இணையசேவை, தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டு, முக்கியத் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இந்தச் சூழலில், ஜனவரி 10ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மிக முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19இன் படி மக்கள் இணையத்தைப் பயன்படுத்துவது அடிப்படை உரிமைகளில் சேரும் என்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் காஷ்மீர் பண்டிதர்கள் போராட்டம்!

காஷ்மீரில் தங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் காஷ்மீர் பண்டிதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீர் பண்டிதர்கள் 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி, அகதிகளாகத் துரத்தப்பட்டனர். அந்தத் துயரத்தை அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நினைவுபடுத்துவார்கள். அந்த வகையில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தாங்கள் காஷ்மீர் திரும்ப தயாராகவுள்ளதாக முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், அங்கு நடந்துவரும் பயங்கரவாத செயல்களுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”GSTயில் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை” MP வசந்தகுமார் அதிருப்தி ….!!

மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரியில் எதிர்பார்த்த வசூல் கிடைக்காததால், தமிழ்நாட்டின் நான்கு வழிச்சாலை பணிக்கு வேண்டிய 54 ஆயிரம் கோடி ரூபாய் முடங்கியுள்ளதாக மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது போன்ற மோசமான அலுவலர்களை இதுவரை நான் பார்த்ததே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் களியக்காவிளை முதல் காவல்கிணறு வரை உள்ள சாலையை சீரமைக்க 47 கோடி […]

Categories

Tech |