Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்த அதிமுக எம்.பி. மைத்ரேயன் ….!!

மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் முடிவதால் அதிமுக எம்.பி. மைத்ரேயன் பிரதமர் மோடியை சந்தித்தார். பாராளுமன்றத்தில் உள்ள  மாநிலங்களவையின் தமிழக MP_க்கள் ரத்தினவேல், கனிமொழி, மைத்ரேயன், டி.ராஜா, கே.பி.அர்ஜுனன். ஆர்.லட்சுமணன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து திமுக  சார்பில் வைகோ , சண்முகம் , வில்சன் ஆகியோர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகினர். அதே போல அதிமுக சார்பில் முகமது ஜான் , சந்திரசேகர்  , அன்புமணி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகினர்.  இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“மத்திய அரசின் திட்டத்தில் தமிழாக்கம்” கனிமொழி MP கேள்வி …!!

 மத்திய அரசின் திட்டம் தமிழாக்கம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளதை எப்படி மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று மக்களவையில் கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் “பிரதம மந்திரி” என்று அடங்கிய பெயர்களை  வைத்து திட்டங்களை செயல்படுத்துகின்றது. இது குறித்து இன்று நடைபெற்ற மக்களவையில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் , எல்லா திட்டங்களுக்கும் இந்தியிலேயே மத்திய அரசு பெயர் வைக்கிறது. தூத்துக்குடியில் ‘PM Sadak Yojana’ என ஒரு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடகாவில் தொடரும் அரசியல் குழப்பம்…நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் ஆர்ப்பட்டம்..!!

பாஜக ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறி நாடாளுமன்ற வளாகத்தின் முன்  காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக  மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாவை சேர்ந்த 14 அதிருப்த்தி MLAக்கள் திடீரென ராஜினாமா செய்தனர்.அங்கு நடக்கும் ஆளும் கட்சியின் ஆட்சியை கவிழ்க்க பாஜக  சதி திட்டம் தீட்டி வருவதாக காங்-மதசார்பற்ற ஜனதா தள தலைவர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில்,கோவாவிலும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 MLAக்கள் பாஜகவில் தங்களை முழு மனதுடன் இணைத்துக்கொண்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

“வெற்றியும் , தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி” தோல்வி குறித்து மோடி ட்வீட்..!!

வெற்றியும் , தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்று இந்திய அணியின் தோல்வி குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி  239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தற்கொலையால் நீட் தேர்வை இரத்து செய்ய முடியாது” இல.கணேசன் கருத்து ..!!

தற்கொலைகளை மட்டுமே காரணம் காட்டி நீட் தேர்வை ரத்து செய்ய சொல்வது ஏற்புடையது அல்ல என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பிற்கான தேசிய நுழைவு தேர்வான நீட் தேர்வை மத்திய அரசு நிறைவேற்றியற்றது. இதற்க்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் உட்பட மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தமிழக அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால் தமிழக அரசின் தீர்மானத்தை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இது […]

Categories
தேசிய செய்திகள்

“துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட பாஜக MLA” சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை….!!

 துப்பாக்கிகளுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏவை கட்சியிலிருந்து நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்ய கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. டெல்லியில் பத்திரிக்கையாளரை மிரட்டிய புகாரில் ஏற்கனவே மூன்று மாதம் சஸ்பெண்ட் செய்துள்ளார் பாஜக எம்எல்ஏ பிரணவ் . காலில் அறுவைசிகிச்சை செய்து கொண்டு வீட்டிற்கு சென்ற அவர் மது அருந்தி கொண்டு கையில் துப்பாக்கி வைத்து ஆடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சர்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் துப்பாக்கிகளுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏவை கட்சியிலிருந்து நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்ய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திரும்பி போ…!! திரும்பி போ..!! சந்திக்க வந்த அமைச்சருக்கு எதிராக கோஷம்…!!

அதிருப்தி MLA_க்களை சந்திக்க சென்ற கர்நாடக அமைச்சரை திரும்பி போ திரும்பி போ என்று ஜனதா தள ஆதரவாளர் கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு அரங்கேறிய வண்ணம் இருந்து வருகின்றது. ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளமும் , ஆட்சியை கவிழ்க்க பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு மும்பை விடுதியில் தங்கி இருக்கும் 14 சட்டமன்ற உறுப்பினர்களை எப்படியாவது சமாதான படுத்திவிட காங்கிரஸ் முயன்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

 “போலீஸ் எந்த படையையும் குவிக்கட்டும்” கர்நாடக அமைச்சர் ஆவேசம்…!!

அதிருப்தி MLA_க்களை சந்திக்க விடாமல் போலீஸ் எந்த படையையும் குவிக்கட்டும்  என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு அரங்கேறிய வண்ணம் இருந்து வருகின்றது. ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளமும் , ஆட்சியை கவிழ்க்க பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு மும்பை விடுதியில் தங்கி இருக்கும் 14 சட்டமன்ற உறுப்பினர்களை எப்படியாவது சமாதான படுத்திவிட காங்கிரஸ் முயன்று வருகின்றது. அதே போல விடுதியில் தங்கி இருக்கும் சட்டமன்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பரிதவிக்கும் கர்நாடக அரசு…..மும்பை சென்ற அமைச்சர் தடுத்து நிறுத்தம்…!!

மும்பை நட்சத்திர விடுதிகளில் இருக்கும் அதிருப்தி MLA_க்களை சந்திக்க சென்ற அமைச்சர் சிவகுமாரை அங்குள்ள போலீசார் அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக மாநில சட்டசபையில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 119  உறுப்பினர்களும் , பாஜகவுக்கு 105 உறுப்பினர்களும் உள்ளனர். காங்கிரஸ்+ ஜே.டி.எஸ் கூட்டணி சார்பில் குமாரசாமி மாநில முதல்வராகவும் , பாஜக எதிர்கட்சியாகவும் இருந்து வருகின்றது. காங்கிரஸ் + ஜே.டி.எஸ் MLA_க்கள் ராஜினாமா :  கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து நிலவிவரும் அரசியல் குழப்பத்தால் அங்குள்ள காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லும் பாஜக” காங்கிரஸ் MLA குற்றசாட்டு…!!

சுயேச்சை MLA  நாகேஷை பாஜக வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று விட்டதாக கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக அரசியலில் உச்சகட்ட குழப்பம் ஏற்பாட்டு வருகின்றது.எப்போது வேண்டுமெனாலும் ஆட்சி கவிழும் சூழலில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் போராடி வருகின்றனர்.அங்குள்ள கோலார் மாவட்டத்தின் முல்பாகல் சட்டப்பேரவை தொகுதியில், சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றவர் நாகேஷ். இவரின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றியவர் காங்கிரஸ் கட்சியின் சிவகுமார். சிவகுமார் கர்நாடக அரசில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கர்நாடக MLA க்களின் ராஜினாமா ரத்து…சபாநாயகர் அறிவிப்பு..!!

கர்நாடக மாநிலத்தில் 14 MLAக்களின் ராஜினாமாவை ரத்து செய்துள்ளதாக சட்ட சபை சபாநாயகர் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேர், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 14 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, தனி விமானத்தின் மூலம்  மும்பை கொண்டு  செல்லப்பட்டு அங்குள்ள பிரபலமான   நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும்  பாரதீய ஜனதா கட்சி செய்ததாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சி  தலைவர்கள் குற்றம் […]

Categories
அரசியல்

அரசியலில் திடீர் திருப்பம்….கனிமொழிக்கு எதிராக தமிழிசை வழக்கு…!!

தூத்துக்குடி மக்களவையில் கனிமொழி வெற்றி பெற்றதற்கு எதிராக பாஜக  தமிழிசை சௌந்தரராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி  பெருமான்மை இடங்களில்  வெற்றி பெற்றது.அதே போல்  பாரதிய ஜனதா கட்சியானது தனிப்பெருமான்மையுடன்  வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றினாலும், தமிழகத்தில் போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட  வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தூத்துக்குடி   மக்களவை தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக சார்பில் கனிமொழியும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக சார்பில் தமிழிசை சௌந்தராஜனும் போட்டியிட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

பாஜகவில் இணைந்ததால் வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளர் …!!

தன்னுடைய வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர் பாஜகவில் இணைந்ததால் வீட்டை காலி செய்யும்படி சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது . பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். தற்போது இந்தியளவில் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. வாரணாசியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா, உத்தர பிரதேச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குமாரசாமிக்கு வந்த சோதனை…கர்நாடகாவில் மேலும் 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா..!!

கர்நாடகாவில் 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான தகவல் அரசு மத்தியில் உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில்   காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமைச்சர் பதவியில்  இருந்து நீக்கப்பட்டதன் காரணமாக  அதிருப்தியடைந்த  காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின்  12 எம்எல்ஏக்கள் நேற்று திடீரென  பதவியை ராஜினாமா செய்தனர்.இதனால் ஆட்சி கவிழக்கூடிய அபாயம் எழுந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் 5 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பட்ஜெட் அறிக்கை நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம்…நிர்மலாசீதாராமனுக்கு OPS பாராட்டு..!!!

2019-20க்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சித்தராமனை பாராட்டி துணை முதல்வர் o.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். 2019 – 20க்கான   மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்ததையடுத்து,தமிழக  துணை முதலமைச்சர் O. பன்னீர் செல்வம் மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதராமனுக்கு  பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தொழில் முதலீடுகளை  ஊக்குவிக்கவும், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து கொண்டு  செல்லவும், பட்ஜெட் அறிக்கை அடித்தளமாகவுள்ளது  என்று குறிப்பிட்டுள்ளார். மேலும்  பெண்களுக்கான  முன்னேற்றம் மற்றும் சிறு […]

Categories
தேசிய செய்திகள்

2019-20க்கான பட்ஜெட் அறிக்கை: விலை குறைந்த பொருள்களின் பட்டியல் தெரியுமா…??

2019-20க்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் பொருள்களின் விலையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 2019-20க்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் இறக்குமதி செய்யப்படுகிற  புத்தகம் உள்ளிட்ட காகித பொருள்களுக்கு  5% வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் கேமரா,  சிசிடிவி கேமரா,  ரப்பர், பைபர்,  டைல்ஸ்,  பர்னிச்சர் உள்ளிட்ட பொருள்களுக்கும் வரி உயர்த்தப்பட்டு விளையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் 2019-20க்கான மத்திய பட்ஜெட் அறிக்கையின்  படி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக் பொருட் களின்  விலை குறைய உள்ளதாகவும், மருத்துவ மற்றும் பாதுகாப்பு சாதனங்களின் விலை குறைந்துள்ளதாகவும் பட்ஜெட் […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்சி கவிழ்ப்பு…. பாஜக 105 , காங்கிரஸ் கூட்டணி 105…..பரபரப்பாகும் கர்நாடகா …!!

கர்நாடகாவில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தேசியளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இணைத்து ஆட்சி செய்து வருகின்றது. மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதல்வராக இருந்து வருகின்றார். ஆட்சி அமைத்த நாள் முதல் அங்கே காங்கிரஸ் கட்சிக்கும் , மதசார்பற்ற ஜனதா தளத்திற்கும் மோதல் இருந்து கொண்டே வந்தது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சி அமைக்க பாஜக முயன்று வருகின்றது. மேலும் மக்களவை தேர்தலில் அங்குள்ள 20 இடங்களில் 18 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கவிழ்கிறதா கர்நாடக அரசு ? 11 MLA_க்கள் சபாநாயகருடன் சந்திப்பு …!!

கர்நாடகாவில் 11 MLA_க்கள் சபாநாயகரை சந்திக்க இருப்பது அரசியலில் தீடிர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இறுதியாக நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் தனி கட்சியாக 104 இடங்கள் பெற்ற பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றது. மாநிலத்தின் முதலமைச்சராக மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி இருந்து வருகின்றார். இந்த ஆட்சி காங்கிரஸ் கட்சியில் 80 இடங்கள் , மதசார்பற்ற […]

Categories
மாநில செய்திகள்

மகாராஷ்டிராவில் வினோதம்…நண்டுகளை கைது செய்யக்கோரி போராட்டம்..!!

மகாராஷ்டராவில் நண்டுகளை சிறையில் அடைக்க  கோரி தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக  பெய்து வருகிறது. கன மழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள   சிப்லுன் தாலுகாவில் திவாரே என்னும் அணை உடைந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள்  புகுந்த  தண்ணீர்  12 வீடுகளை வெள்ளத்தில் அடித்து சென்றது. இந்த பேரிடரில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.   இச்சம்பவம் குறித்து  மகாராஷ்டிரா மாநிலத்தின்  நீர்வளத்துறை அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

“ஜீரோ பட்ஜெட் விவசாயம்” விவசாயிகளுக்கு நிர்மலாசீதாராமன் வலியுறுத்தல்..!!

விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை பயன்படுத்த வேண்டுமென பட்ஜெட் உரையில்  நிர்மலாசீதாராமன் வலியுறுத்தியுள்ளார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,வேளாண் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை  மேம்படுத்துவதற்காக  மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. வாழ்க்கையை  எளிமையாக்குவது  விவசாயிகளுக்கும், தொழில் முறையை  எளிமையாக்குவது   வேளாண்மை சார்ந்த  தொழிலுக்கும் பொருந்தும் என்று  அவர் தெரிவித்தார். மேலும்  ஜீரோ பட்ஜெட் விவசாய முறையை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என்று    வலியுறுத்தினார். இது புதிய முறையல்ல,ஏற்கனவே சில […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பட்ஜெட் அறிவிப்பு “பெட்ரோல் , டீசல் கிடுகிடு உயர்வு” பொதுமக்கள் அதிர்ச்சி …!!

பட்ஜெட் அறிவிப்பை அடுத்து பெட்ரோல் டீசல் விலை கிடுகிடுவென உயர்வதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று மக்களவையில் 2019_2020_க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் தாக்கல் செய்தார். அதில் சாலை வசதிகளை மேம்படுத்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த்தப்படுமென்று அவர் தெரிவித்தார். இதனால் இன்று இரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்கின்றது. நெடுஞ்சாலைத்துறை காண கூடுதல் வரி மற்றும் கூடுதல் கலால் வரி இரண்டுமே ஒரு ஒரு லிட்டருக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் “தேசிய விவசாய சந்தை”…நிர்மலாசீதாராமன்..!!

நாடு முழுவதும் உள்ள  விவசாயிகள் நேரடி விற்பனையில் ஈடுபட தேசிய விவசாய சந்தை அமைக்கப்படுவதாக   நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 2019-20க்கான பட்ஜெட் மக்களவையில்  தாக்கல் செய்யப்பட்டது.இது குறித்து பேசிய   நிர்மலா சீதாராமன் , மாநிலங்கள் முழுவதும்  உள்ள  விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருளை நேரடியாக  விற்று பயன் பெற   தேசிய விவசாய சந்தை அமைக்கப்படும் என்றும், நாடு முழுவதும் இருக்கும்  விவசாயிகள் 1ரூபாய் கூட முதலீடு செய்யமால்  விவசாயம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் . தொடர்ந்து பேசிய அவர் , […]

Categories
தேசிய செய்திகள்

“மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட்” பிரதமர் மோடி..!!

2019-20க்கான மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019 20 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இதில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன இந்நிலையில் பட்ஜெட் தாக்கலுக்கு பின் பேசிய பிரதமர் மோடி,  2019-20க்கான மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஏழ்மையை ஒழிக்கும் வகையில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. புதிய இந்தியாவை […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் மகிழ்ச்சி “ரூ 1,00,000 கடன் பெறலாம்” பட்ஜெட்டில் அறிவிப்பு

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் அதிகபட்சமாக  தலா ரூ.1 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.   இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின்  2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில்  மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் பொறுப்பு நிதியமைச்சர் பியூஸ்கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து இந்த முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.     அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் கூறுகையில் , பெண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கல்வி கொள்கையை உலகின் சிறந்தாக மாற்ற திட்டம்….. நிர்மலா சீதாராமன்

புதிய கல்வி கொள்கையை உலகின் சிறந்ததாக மாற்ற திட்டம் உள்ளதாக  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக புதிதாக பொறுப்பேற்ற நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.கடந்த ஏப்ரலில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில்  மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில் , புதிய தேசிய கல்வி கொள்கையை அரசு கொண்டு வர உள்ளது. உலகின் சிறந்த கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

“இனி வீடு வாங்க கவலையில்லை” நிர்மலாசீதாராமன் அதிரடி அறிவிப்பு…மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!!

குறைந்த விலை வீடுகளுக்கான வட்டியில் 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கபப்டும் என்று நிர்மலாசீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,குறைந்த விலை வீடுகள் ,கடனில் மின்சார வாகனம் வாங்கினால் வட்டியில் கூடுதலாக 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும்.இதன்படி 15 ஆண்டுகள் வீட்டுக்கடனுக்கு ரூபாய் 7 லட்சம் வரை மிச்சமாகும். பான் அட்டை இல்லாவிட்டால் ஆதார் எண்ணை அளித்து வருமான வரி […]

Categories
தேசிய செய்திகள்

“சில்லரை வணிகர்களுக்கு  ஓய்வூதியம்” நிர்மலா சீதாராமன் தகவல்…!!

பிரதான் மந்திரி கரம் யோகி மான் தன் யோஜனா என்ற பெயரில்  சில்லரை வணிகர்களுக்கு  ஓய்வூதிய திட்டம் வழக்கப்படுமென்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக புதிதாக பொறுப்பேற்ற நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.கடந்த ஏப்ரலில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில்  மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து , பட்ஜெட் உரையை வாசித்து வருகின்றார். இதில் 3 கோடி சில்லரை […]

Categories
தேசிய செய்திகள்

20 ரூபாய் நாணயம் அறிமுகம்….நிர்மலாசீதாராமன்..!!

1,2,5,10,20 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று நிர்மலாசீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்.5 லட்சம் கோடிக்கு பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்கப்படும் என்றார் .குடிநீர் ,சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூபாய் 100 கோடி ஒதுக்கப்படும் . வரி வருவாய் 6.3 லட்சம் கோடியில் இருந்து 11.36 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.நாட்டின் வளர்ச்சியில் வரி செலுத்துவோரின் பங்கு முக்கியமானது, […]

Categories
தேசிய செய்திகள்

“நாடு முழுவதும் சம அளவில் மின்சாரம்” நிர்மலா சீதாராமன் உறுதி ….!!

நாடு முழுவதும் சம அளவில் மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். பாஜக புதிதாக பொறுப்பேற்ற நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.கடந்த ஏப்ரலில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில்  மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து , பட்ஜெட் உரையை வாசித்து வருகின்றார். அதில் , அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்து விமானத் துறை, […]

Categories
தேசிய செய்திகள்

“வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார்கார்டு “நிர்மலாசீதாராமன்..!!

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பாஸ்போர்ட்டுடன் ஆதார் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நிர்மலாசீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,கழிவுநீர் சுத்திகரிப்புகாக ரோபோட்டுகள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.நாட்டில் உள்ள 74 சுற்றுலாத்தலங்கள் உலக தரத்திற்கு உயர்த்தப்படும்.சுய உதவிக்குழு பெண்கள் முத்ரா திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கடன் பெற அனுமதி வழங்கப்படும்.வங்கிகளில் வாராக்கடன் கடந்த ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை  குறைக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

குடிநீர் பிரச்சனைக்கு’ஹர் கர் ஜல்’ திட்டம்…நிர்மலாசீதாராமன் தகவல்…!!

இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய குடிநீர் பிரச்சனையை தீர்க்க “ஹர் கர் ஜல்” திட்டம்  மேற்கொள்ளப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி முழுமையாக செயல்படுத்தப்படும் என்றார் .குடிநீர்  பிரச்னையை தீர்ப்பதே மத்திய அரசின் பிராதன நோக்கம்,   2020க்குள் அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்கும் குழாய் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்க “ஹர் கர் ஜல்” திட்டம் மூலம்  நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

“புதிய இந்தியாவை உருவாக்க மோடி அரசு முயற்சி ” நிர்மலா சீதாராமன் பேச்சு …!!

புதிய இந்தியாவை உருவாக்க மோடி அரசு முயற்சி செய்து வருகிறது என்று மக்களவையில்  நிர்மலா சீதாராமன்  தெரிவித்தார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார். அபோது பேசியவர் , உணவு பாதுகாப்புக்காக கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு பணம் செலவிடப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட பொருளாதார நாடு என்ற நிலையை எட்டும். சிறு மற்றும் குறு தொழில்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுதான் தற்போது எடுக்கப்பட்டுள்ள முதல் இலக்கு என்றார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

2019-20க்கான பட்ஜெட்டை நிர்மலாசீதாராமன் தாக்கல் செய்தார்..!!

2019-20 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலானது தொடங்கியுள்ளது நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் தொகுத்து வழங்கி வருகிறார்.  நாடாளுமன்றத்தில் 2019-20ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அப்போதைய நிதி அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இந்நிலையில் மக்களவையில் 2019-20க்கான முழு பட்ஜெட்டை முதல் பெண் நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன்  தாக்கல் செய்து வருகிறார்.அதில் புதிய இந்தியாவை உருவாக்க முயற்சி எடுத்திருப்பதாகவும் ,பொருளாதாரத்தில் இந்தியாவை 25% உயர்த்துவதற்கும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“துறைவாரியான வளர்ச்சி அறிக்கையாக இல்லை” ஆய்வறிக்கை குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்..!!

மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படட ஆய்வறிக்கை துறைவாரியான வளர்ச்சி குறித்த அறிக்கையாக அமையவில்லை என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இன்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது ஆய்வறிக்கையில் ,  2019-20 நிதியாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவீதமாகவும் , கடந்த நிதி ஆண்டில் பற்றாக்குறை 5.8 சதவீதமாகவும் இருந்தது என்றும் கூறினார். இந்நிலையில்  இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் வெற்றி “குஜராத் முதல் டெல்லி வரை” சைக்கிளின் சென்று வாழ்த்திய பாஜக தொண்டர்…!!

தனி பெரும்பான்மையுடன் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாட குஜராத்தில் இருந்து டெல்லிக்கு பாஜக தொண்டர் சைக்கிளில் வந்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது. இதனை பாஜக தொண்டர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.தற்போது புதிய மக்களவை பதவி ஏற்று மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில் குஜராத்_தில் இருந்து டெல்லி_க்கு சைக்கிளில் வந்து வெற்றி பெற்ற பாஜகவினருக்கு […]

Categories
அரசியல்

குடும்ப அரசியல் செய்யும் திமுக புலி அல்ல பூனை…தமிழிசை விமர்சனம்..!!

திமுக புலி அல்ல பூனை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். அமமுகவிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் விலகி திமுகவில் தனது தொண்டர்களுடன் சென்று இணைந்து அரசியல் களத்திலேயே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது செயல் அதிமுக அமமுக மற்றும் பிற கட்சிகள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி அதிக அளவிலான விமர்சனங்கள் இதுகுறித்து பேசப்பட்டன. தற்பொழுது இது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் […]

Categories
தேசிய செய்திகள்

226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை – பிரதமர் மோடி..!!

நாட்டிலுள்ள 226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னையை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  பாராளுமன்ற மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர், தாங்கள் வெற்றி பெறாவிட்டால் , இந்தியா தோல்வி அடைகிறது என காங்கிரஸ் நினைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இந்தியாவும் ஒன்றா ?. பாஜக வெற்றியடைந்ததால் ஜனநாயகம் தோற்றுவிட்டதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது அப்படியெனில் வயநாடு, ரேபரேலியில் ஜனநாயகம் […]

Categories
தேசிய செய்திகள்

“130 கோடி மக்களுக்கு சேவை செய்வது மிகச்சிறந்த வாய்ப்பு” பிரதமர் மோடி..!!

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி, 130 கோடி மக்களுக்காக  சேவை செய்வதை மிகசிறந்த வாய்ப்பாக கருதுகிறேன் என்று பேசியுள்ளார்   17-வது மக்களவையில் கடந்த 20-ஆம் தேதி அன்று  குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தினார். இந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு விவாதித்தனர். இதையடுத்து மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசினார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு எந்தெந்த திட்டங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மதன்லால் சைனி உடலுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இறுதி அஞ்சலி..!!

நேற்று காலமான ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன்லால் சைனி உடலுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உட்பட  பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.  ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன்லால் சைனி (வயது 75) கடந்த சில நாட்களாகவே உடல்நலம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு ரத்தம் சார்ந்த பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.   […]

Categories
தேசிய செய்திகள்

அமேதியில் வீடு கட்ட தயாராகும் ஸ்மிருதி இரானி..!!

அமேதி தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்மிருதி இரானி அத்தொகுதியில் வீடு கட்ட போவதாக அறிவித்துள்ளார்.   நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்திரபிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிருதி ரானி போட்டியிட்டார். இத்தொகுதியில்  ஸ்மிருதி ரானி 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுலை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் பல ஆண்டுகள் காங்கிரஸ் வசம் இருந்த அமேதி தொகுதியை பாஜக கைப்பற்றியது. கடந்த 2014-ம் ஆண்டு ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இரானி […]

Categories
அரசியல் புதுச்சேரி

“புதுச்சேரி_க்கு மாநில அந்தஸ்து”. மோடியிடம் நாராயணசாமி வலியுறுத்தல்…!!

புதுச்சேரி_க்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக புதுவை முதலவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கடந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த போது மத்திய திட்ட குழு என்ற அமைப்பை கலைத்து விட்டு அதற்க்கு  பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பை ஏற்படுத்தியது. கடந்த  2015_ஆம் ஆண்டு முதல் ஜனவரி 1_ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்த இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடியும், துணைத்தலைவராக ராஜீவ் குமாரும் இருந்தனர்.நிதி ஆயோக் ஆட்சி குழுவில் அனைத்து மாநிலங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

உயிரிழந்த ராணுவ வீரர் உடலில் கட்சி கொடி…. பாஜக கடும் கண்டனம்…!!

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் மீது பிஜு ஜனதா தளம் கட்சிக்கொடி போர்த்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் புல்வாமாவில் பயங்கரவாதிகள்  தாக்குதல் நடத்தினர். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் அஜித் சாகோ பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரான படாசோனாலோவில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவருடைய உடலுக்கு மரியாதையை செலுத்த அம்மாநில ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் நிர்வாகிகள் , அமைச்சர்கள் வருகை தந்தனர். அப்போது ராணுவ […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மோடி என்ன சட்டத்தை உருவாக்குகிறார்” முத்தலாக் குறித்து அசாதுதீன் ஒவைசி விமர்சனம்…!!

முத்தலாக் மசோதா சட்டம் பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய அநீதியாகும், மோடி என்ன சட்டத்தை உருவாக்குகிறார்  என்று அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார். மக்களவையில் இன்று முத்தலாக் மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்பபை மீறி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மசோதா குறித்து பேசிய அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமின் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசும்போது, முத்தலாக் சட்ட மசோதா இந்திய அரசியலமைப்பிற்கு விரோதமானது. இது அரசியலமைப்பில் உள்ள  பிரிவு 14 & 15 ஐ மீறுவதாகும். முத்தலாக் மசோதா ஒரு சட்டமாக மாறினால் அது பெண்களுக்கு எதிரான மிகப் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு தாவிய MP_க்கள் “கவலைப்பட எதும் இல்லை” சந்திரபாபு நாயுடு ட்வீட் …!!

தெலுங்குதேச கட்சியினர் பாஜகவில் இணைந்ததையடுத்து கவலைப்பட எதும் இல்லை , வரலாறு மீண்டு வருமென்று  சந்திரபாபு நாயுடு ட்வீட் செய்துள்ளார். ஆந்திராவில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற சந்திரபாபு நாயுடு_வின்  தெலுங்குதேச கட்சி  படுதோல்வி அடைந்தது. மேலும் தந்து தலைமையில் நடந்து வந்த ஆட்சியையும் ஜெகன்மோகன் ரெட்டியிடம்   பறிகொடுத்தார் சந்திரபாபு நாயுடு . இந்த மோசமான தோல்வியையடுத்து  தெலுங்குதேசம் கட்சியில் தொடர் சலசலப்பு ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை MP 4 பேர் பாஜகவின்  செயல் […]

Categories
தேசிய செய்திகள்

“முத்தலாக் தடை மசோதா” மக்களவையில் இன்று தாக்கல் …!!

முத்தலாக் சட்ட மசோதா மீண்டும் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கின்றது. முஸ்லீம் மதத்தில் கணவன் அவரது மனைவியை விவாகரத்து செய்ய வேண்டுமென்றால் அடுத்தடுத்து ‘தலாக்’ என்று  3 முறை கூறி விவாகரத்து செய்து கொள்ளலாம் என்ற முஸ்லீம் மத சட்டத்தை தடை செய்யும் நோக்கத்தில் மோடியின் முந்தைய கால ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது முத்தலாக் சட்ட மசோதா. இதற்க்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற சட்டம் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

பள்ளியில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி…… செங்கோட்டையன் பேட்டி …!!

பள்ளிக்கூடங்களில் வாரத்திற்கு ஒரு நாள் யோகாசன பயிற்சி அளிக்கப்படுமென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினத்தை அனுசரிக்கும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதியில் யோகாசங்கள் செய்யப்படுகின்றது. இந்நிலையில் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும்  தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பங்கேற்று யோகாசனகளை செய்தனர். பின்னர் செய்தயாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் , பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சர்வதேச யோகா தினம் : செங்கோட்டையன் , தமிழிசை பங்கேற்பு …!!

சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் , பாஜக மாநில தலைவர் தமிழிசை கலந்து கொண்டனர். இந்தியா முழுவதும் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்ற யோகா தினத்தை பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் யோகாசனம் செய்து கொண்டாடி வருகின்றனர்.நாட்டின் பல்வேறு இடங்களிலும் , பள்ளிகளிலும் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. சென்னை நந்தனத்தில் நடைபெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் கூட்டம்..!!

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.  பாரதிய ஜனதா இரண்டாவது முறையாக பொறுப்பெற்ற பின் தனது நிதி நிலையறிக்கையை வரும் ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்வது குறித்து பல்வேறு அமைச்சக செயலாளர்களிடம் ஆலோசித்து, நிதி நிலையறிக்கையை தயார் செய்து வருகிறார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை  தாக்கல் செய்வதற்கு முன்னதாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நேரடி எதிர்ப்பு கிடையாது” ஒரே தேர்தல் முறை குறித்து ராஜ்நாத் சிங் பேட்டி…!!

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த நேரடி எதிர்ப்பு கிடையாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாஜக கடந்த முறை ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் ஒரே நாடு , ஒரே மொழி , ஒரே தேர்தல்என்கின்ற வகையில் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் என ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஒரே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஒரே நாடு ஒரே தேர்தல் முறை” குழு அமைப்பதாக மோடி கருத்து ….!!

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் உள்ள சிக்கலை ஆராய்வதற்கு குழு அமைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியில் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்த பாஜக தலைமையிலான அரசு நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றத்துக்கும்  ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யக்கூடிய  ஒரு நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து வருகின்றது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்றுக்கும் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி  தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளாமல்  காங்கிரஸ் , திமுக  […]

Categories

Tech |