Categories
அரசியல் தேசிய செய்திகள்

”அதிருப்தி MLA_க்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்பேன்” கர்நாடக சபாநாயகர் உறுதி …!!

அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்பேன் என்று கர்நாடக மாநில சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் + மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு கவிழ்ந்து குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பாஜக புதிய அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்கவேண்டுமென்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”கொறடா உத்தரவை மீறியவர்கள் தகுதி நீக்கம்” சபாநாயகரிடம் காங்கிராஸ் கோரிக்கை …!!

கர்நாடகாவில் கட்சி கொறடா உத்தரவை மீறிய சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று சபாநாயகரிடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் + மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு கவிழ்ந்து குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய அரசு அமைக்கும் பணியில் கர்நாடக பாஜக  தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் , […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”அதிருப்தி MLA ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள்” கர்நாடக பாஜக வேண்டுகோள் …!!

கர்நாடகாவில் அதிருப்தி MLA_க்களின் ராஜினாமாவை ஏற்கும் படி பாஜகவினர் சபாநாயகரை வலியுறுத்தியுள்ளனர். கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்ததையடுத்து புதிய அரசு அமைக்கும் பணியில் கர்நாடக பாஜக  தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் குமாரசாமி அரசு கவிழ காரணமான அதிருப்தி MLA_க்கள் 15 பேரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படாமல் பரிசீலனையில் உள்ளதால் அந்த 15 பேரும் MLA _க்களாகவே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”கர்நாடக பாஜகவிற்கு புதிய சிக்கல்” தீராத கர்நாடக பரபரப்பு ……!!

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்த்தநிலையில் ஆட்சியமைக்க இருக்கும் பாஜக_விற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தற்போது அங்கு எதிர் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா ஆட்சி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜனநாயகம் தோல்வி …. நேர்மை தோல்வி ….. கர்நாடக மக்கள் தோல்வி ….. ராகுல் ட்வீட் …!!

ஜனநாயகமும், நேர்மையும் தோற்று, கர்நாடக மக்களும் தோல்வியைந்துள்ளனர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தற்போது அங்கு எதிர் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க […]

Categories
தேசிய செய்திகள்

நம்பர்-1, நம்பர்-2 சிக்னல் கொடுத்தால்…. ம.பி காங்கிரஸ் அரசு கவிழும்…. பாஜக தலைவர் பேட்டி …!!

 நம்பர்-1, நம்பர்-2 சிக்னல் கொடுத்தால் மத்திய பிரதேசம் காங்கிரஸ் அரசை 24 மணி நேரத்தில் கவிழ்ப்போம் என்று அம்மாநில பாஜக தலைவர்  கோபால் பார்கவா கூறியுள்ளார். கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தற்போது அங்கு எதிர் கட்சியாக இருந்த பாரதீய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரசுடன் கூட்டணி தொடர்பாக குமாரசாமி கருத்து …..!!

கூட்டணி தொடர்பான எந்த விவகாரத்தையும் எங்களுடன் காங்கிரஸ் ஆலோசிக்கவில்லை என்று கர்நாடக காபத்து முதல்வர் குமாரசாமி தெரிவித்தார். கர்நாடக மாநில சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் முதல்வர் குமாரசாமி  கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். குமாரசாமியின் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்த  கர்நாடக  ஆளுநர் வஜூபாய் வாலா  புதிய அரசு அமையும் வரை குமாரசாமி  காபந்து முதல்வராக தொடர வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“டெல்லி உத்தரவுக்காக காத்திருக்கின்றேன்” எடியூரப்பா பேட்டி …!!

டெல்லியில் இருந்து உத்தரவு வரும் வரை காத்திருக்கின்றேன் என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் முதல்வர் குமாரசாமி  கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். குமாரசாமியின் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்த  கர்நாடக  ஆளுநர் வஜூபாய் வாலா  புதிய அரசு அமையும் வரை குமாரசா காபந்து முதல்வராக தொடர வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார். இந்நிலையில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக எடியூரப்பா தேர்வு ….!!

கர்நாடக மாநில  பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக எடியூரப்பாவை தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கர்நாடக சட்டப்பேரவையில் 3 நாட்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று  விவாதம் நடந்து முடிந்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரவு 7.15 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில்  மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சிக்கு  99 வாக்குகள் மட்டுமே பதிவானது. குமாரசாமி அரசுக்கு எதிராக 105 வாக்குகள் பதிவானது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.   இதையடுத்து பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இந்தியை யாரும் திணிக்கவில்லை” தமிழிசை கருத்து …!!

இந்தியை யாரும் திணிக்கவில்லை, மத்திய அரசுக்கு இந்தியை திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அசுர வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பாஜக தேசிய புதிய கல்விகொளகை என்ற புதிய வரைவு கொண்டுவந்தது. மேலும் அனைத்து மாநிலங்களும் மூன்றாவதாக ஹிந்தி மொழியை விரும்ப பாடங்களாக படிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதையே புதிய கல்வி கொள்கையும் வலியுறுத்தியது.இதற்க்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக திமுக […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும்” தமிழிசை வேண்டுகோள் …!!

தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்று பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இன்று காலை சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறுகையில், தமிழகத்தில் அதிகமான கொலைகள் நடைபெற்று வருகின்றது. கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் செல்கிறார்கள். தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை கொடுக்கின்றன. தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளிள் அதிக கவனம் செலுத்தி , தமிழகத்தில் ஏற்படும் அசாதாரண சூழலை தடுக்க வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கர்நாடகாவில் தாமரை மலர்ந்து விட்டது” இனி மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும்- தமிழிசை..!!

கர்நாடகவை  போல் மற்ற மாநிலங்களிலும் பாஜக வலுப்பெறும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்  கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று  நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்  குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. ஆட்சி கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார் குமாரசாமி.  கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்துள்ள  நிலையில் பஞ்சாப், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கவிழ்ந்தது குமாரசாமி அரசு” ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார் எடியூரப்பா..!!

கர்நாடகாவில் குமாரசாமி அரசின் ஆட்சி கவிழ்ந்ததைடுத்து எடியூரப்பா ஆளுநர் வஜூபாய் லாலாவை சந்தித்து  ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் 3 நாட்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில் இன்று விவாதம் நடந்து முடிந்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 7: 15 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில்  மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சிக்கு  99 வாக்குகள் மட்டுமே பதிவானது. குமாரசாமி அரசுக்கு எதிராக 105 வாக்குகள் பதிவானது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

“6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” குமாரசாமி உருக்கம்..!!

கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று பேரவையில் குமாரசாமி உருக்கத்துடன் பேசியுள்ளார்  கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததையடுத்து, குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்து. இதையடுத்து சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான தீர்மானம் கடந்த வியாழன் கிழமை தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய குமாரசாமி, நான் முதல்வராக […]

Categories
தேசிய செய்திகள்

செக்ஸ் வீடியோ வெளியிட்டது ”எனது கட்சியினர் தான்” பாஜக MLA குற்றச்சாட்டு ..!!

தன்னை தொடர்புபடுத்திய ஆபாச வீடியோ வெளியிட்டதுக்கு என்னுடைய கட்சிகாரர்கள் தான் காரணம் என்று பாஜக MLA குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் , பெங்களுர் மகாதேவாபுரா தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அரவிந்த் லிம்பாவனி. ஒரு பெண்ணுடன் சேர்ந்து இருப்பது போன்ற செக்ஸ் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து நேற்று நடைபெற்ற   கர்நாடகா மாநில சட்டசபையில் அரவிந்த் லிம்பாவனி கதறி அழுதார். என்னை தொடர்புபடுத்தி, எனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆபாச பேச்சு” காங்கிரஸ் பிரமுகரை கைது செய்ய கோரி பாஜகவினர் சாலை மறியல்..!!

சென்னை பெரவள்ளூரில் பெண் வழக்கறிஞரை தவறாக பேசிய காங்கிரஸ் பிரமுகரை கைது செய்ய வேண்டுமென  பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாவட்டம் பெரவள்ளூர், மேல்பட்டி பகுதியை அடுத்த  பொன்னப்ப தெருவைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான அன்னலட்சுமி என்பவருக்கும், அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் காங்கிரஸ் பிரமுகர் நிஸார் என்பவருக்கும்  இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறி அன்னலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அங்கு விசாரணையை முடித்து விட்டு வெளியே வந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் சட்ட பேரவை 10 நிமிடம் ஒத்திவைப்பு..!!

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ்  கட்சியைச் சேர்ந்த 15 அதிருப்த்தி எம்எல்ஏக்கள் திடீரென்று தங்களது பதவியை ராஜினாமா செய்தது, ஆளும் குமாரசாமி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில், அதற்கு முடிவு கட்டும் விதமாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தயார் என குமாரசாமி தெரிவித்தார். அதன்படி, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நம்பிக்கை வாக்கெடுப்பு” 2 நாள் கால அவகாசம் கேட்டு முதல்வர் குமாராசாமி கோரிக்கை..!!

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த புதன்கிழமை வரை கால அவகாசம் வழங்குமாறு சபாநாயகரை நேரில் சந்தித்து குமாரசாமி  கோரிக்கை வைத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ்  கட்சியைச் சேர்ந்த 15 அதிருப்த்தி எம்எல்ஏக்கள் திடீரென்று தங்களது பதவியை ராஜினாமா செய்தது, ஆளும் குமாரசாமி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில், அதற்கு முடிவு கட்டும் விதமாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தயார் என குமாரசாமி தெரிவித்தார். அதன்படி, ஜூன் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நம்பிக்கை வாக்கெடுப்பு” அவசரமா விசாரிக்க முடியாது, நாளை பார்க்கலாம்… மனுவை மறுத்த உச்சநீதிமன்றம்..!!

நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்தக்கோரி கர்நாடகா சுயேட்சை எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் திடீரென ராஜினாமா செய்தது ஆளும் குமாரசாமி அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுத்தியது. தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்கு முடிவு கட்டும் வகையில் ஜூலை 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தயாராக இருப்பதாக குமாரசாமி தெரிவித்தார். ஆனால் ஜூலை 18 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதங்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“குதிரை பேரம்”கர்நாடகா,கோவாவை தொடர்ந்து மே.வங்கத்திலும் பாஜக சீட்டிங்… மம்தா பேனர்ஜி குற்றசாட்டு…!!

கர்நாடகாவை போல் மேற்கு வங்கத்திலும் குதிரை பேரம் பேசி எம்.எல்.ஏக்களை  பாஜகவில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.  மேற்கு வங்கத்தில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய அவர், கர்நாடகாவில் நடப்பதை போல் மேற்கு வங்கத்திலும் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார். சாரதா சீட்டு நிறுவனம் முறைகேட்டை தொடர்புபடுத்தி சிறையில் தள்ளிவிடுவதாக தங்களது கட்சி  பிரதிநிதிகளை மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் பாஜக மிரட்டுவதாக மம்தா பானர்ஜி புகார் கூறினார். […]

Categories
தேசிய செய்திகள்

” பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றம் ” ஜனாதிபதி அதிரடி ….!!

பல்வேறு மாநில ஆளுநரை மாற்றி இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்த்துள்ளார். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மாநில ஆளுநர்களை மாற்றி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் மத்திய பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருந்து வந்த ஆனந்திபென் படேல் உத்தரபிரதேச மாநில ஆளுநராகவும், பீகார் மாநில ஆளுநராக இருந்த லால் ஜி தாண்டன் மத்திய பிரதேச மாநில ஆளுநராகவும் மாற்றம்ப்பட்டுள்ளனர். மேலும் மேற்கு வங்காள மாநில ஆளுநராக ஜகதீப் தாங்கரும் , பீகார் மாநில ஆளுநராக பிரகு சவுகானும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடி அரசு “சூட்கேஸ்” தூக்கும் அரசு அல்ல…. நிர்மலா சீதாராமன் பேட்டி..!!

சூட் கேஸ் தூக்கும் அரசியலை மோடி அரசு செய்வதில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் பதவியேற்றதை அடுத்து ஜூன் மாதம் 17ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. பின் ஜூலை 5ஆம் தேதி இவ்வாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் ஜூலை 18ஆம் தேதி  மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் 26 ஆம் தேதி வரை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அதிருப்தி MLA_க்கள் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனுதாக்கல் …..!!

அதிருப்தி MLA_க்கள் வர வேண்டுமென்று கட்டாயப்படத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் தினேஷ் குண்டுராவ் வழக்கு தொடுத்துள்ளார். கர்நாடக மாநில அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக  சட்டசபையில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. மேலும் அனைத்து அதிருப்தி உறுப்பினர்களும் பங்கேற்காமல் வாக்கெடுப்ப்பு நடத்த முடியாது என்று கூறி கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கவர்னர் உத்தரவை எதிர்த்து முதல்வர் குமாரசாமி மேல்முறையீடு …..!!

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கெடு விதித்த அம்மாநில ஆளுநர் உத்தரவை எதிர்த்து முதலவர் குமாரசாமி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். கர்நாடக மாநில அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக  சட்டசபையில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனால் வருகின்ற 22-ஆம் தேதி ( திங்கட்கிழமை ) நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”இரவு 12 மணி ஆனாலும் விவாதத்தை முடியுங்கள் ” எடியூரப்பா கோரிக்கை …!!

இரவு 12 மணி ஆனாலும் இன்றே விவாதத்தை முடித்து விடுங்கள் என்று கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். கர்நாடக மாநில அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக  சட்டசபையில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனால் வருகின்ற 22-ஆம் தேதி ( திங்கட்கிழமை ) நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”கர்நாடக சட்டசபை ஒத்திவைப்பு” சபாநாயகர் அதிரடி உத்தரவு ….!!

கர்நாடக மாநில சட்டப்பேரவை வருகின்ற திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்து சபாநாயகர்  ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநில அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் கர்நாடக  சட்டசபையில் ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில்  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று அம்மாநில கவர்னர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு 2 முறை கெடு விதித்தும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவில்லை. இதனால் வருகின்ற 22-ஆம் தேதி ( திங்கட்கிழமை ) நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நம்பிக்கை வாக்கெடுப்பு”சபாநாயகர் தான் என்னை காப்பாற்ற வேண்டும்…. பேரவையில் குமாரசாமி வேண்டுகோள்…!!

கர்நாடக சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சபாநாயகர் சரியான முடிவெடுத்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர்  ராஜினாமா செய்ததை அடுத்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பாஜகவினரால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. ஆனால் ஆளுகின்ற அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதில் காலம் தாழ்த்தி வருகிறது. ஆகையால் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு சபாநாயகரை உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துமாறு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆளுநர் எனக்கு உத்தரவிட முடியாது” கர்நாடக சபாநாயகர் அதிரடி ….!!

ஆளுநர் எனக்கு உத்தரவிட முடியாது என்று கர்நாடக மாநில சபாநாயகர்  கே.ஆர்.ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த 16 MLA_க்கள்  தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.  அதே போல ஆளும் அரசுக்கு ஆதரவளித்து வந்த சுயேச்சை MLA_க்களான  நாகேஷ், சங்கர் ஆகியோரும் தங்களின் ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டதால் ஆளும் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது.இதையடுத்து கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் குழப்பம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. பரபரப்பான சூழலில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  இதில் பங்கேற்க எதிர்க்கட்சியான பாஜகவை சேர்ந்த 105 MLA_க்களும் சட்டசபைக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வெளிநாடு சென்ற போது பல விஷயங்கள் நடந்துள்ளது…. முதல்வர் குமாரசாமி …!!

நான் வெளிநாடு சென்றிருந்த சமயம் பார்த்து இங்கு பல விஷயங்கள் அரங்கேற்றப்பட்டு விட்டன என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பேரவையில் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அரசியலில் தற்போது உச்சக் கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்குள் குமாரசாமி அரசு தன்னுடைய ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்துள்ளார். இந்நிலையில் இரண்டாவது நாளாக நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதம் கர்நாடக மாநில சட்டசபையில் நடைபெற்று வருகின்றது. இதில் பேசிய மாநில முதல்வர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கவர்னர் மூலம் நெருக்கடி கொடுக்கும் பாஜக” கர்நாடக அமைச்சர் குற்றசாட்டு …!!

கவர்னர் மூலமாக அரசுக்கு பா.ஜனதாவினர் நெருக்கடி கொடுக்கின்றனர் என்று அமைச்சர்  டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் அரசின் பெரும்பான்மையை இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பில் நீருபித்துக் காட்ட வேண்டுமென்று கர்நாடக ஆளுநர் வஜூபாய் கெடு விதித்துள்ளார். இது குறித்து கர்நாடக மாநில அமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் , முதலவர்  குமாரசாமி மதியம் 1.30 மணிக்குள் அரசின் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டுமென்று கவர்னர் வஜூபாய் உத்தரவிட்டுள்ளார்.  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிக்கலில் குமாரசாமி “மதியம் 1.30 தான் கெடு” மாறப்போகும் கர்நாடக அரசு …!!

இன்று மதியம் 1.30_க்குள் கர்நாடக முதலவர் குமாரசாமி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்று மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்துள்ளார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த 16 MLA_க்கள்  தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.  அதே போல ஆளும் அரசுக்கு ஆதரவளித்து வந்த சுயேச்சை MLA_க்களான  நாகேஷ், சங்கர் ஆகியோரும் தங்களின் ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டதால் ஆளும் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது.இதையடுத்து கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக அரசியல் குழப்பம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. பரபரப்பான சூழலில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அதிருப்தி MLA_க்கள் மீது நடவடிக்கைக்கு பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு… கர்நாடக காங்கிரஸ் ….!!

அதிருப்தி MLA_க்கள் மீது நடவடிக்கை எடுத்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கர்நாடக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. கர்நாடக அரசியலில்  கடந்த 2 வாரமாக உச்சகட்ட தொடர் குழப்பங்கள் நீடித்து வந்தது. அங்குள்ள ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அரசின் சட்டமன்ற உறுப்பினர்கள்  பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக_விற்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர். MLA_க்களின் ராஜினாமாவிற்கு எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக தான் காரணம் என்று ஆளும் கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். MLA_க்களின் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“எடியூரப்பாவிற்கு என் மீது கருணை ஏற்பட்டுள்ளது” முதல்வர் குமாரசாமி …!!

எடியூரப்பாவிற்கு திடீரென என் மீது கருணை ஏற்பட்டுள்ளது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி பேரவையில் தெரிவித்துள்ளார்.  இன்று காலை கர்நாடக மாநில சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் முதலைமைசர் குமாரசாமி ,  தனது அரசு மீது நம்பிக்கை கோரி பேசும் போது ராஜினாமா செய்த MLA_க்கள்  சுயமரியாதை இல்லாதவர்கள், சபாநாயகரின் அதிகாரத்தை கேள்விகுறியாக்கும் வகையில் செயல்படுகின்றனர். கர்நாடகவில் நடப்பதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய குமாரசாமி , கூட்டணி அரசை தொடர்ந்து நடத்துவேனா, இல்லையா என்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கர்நாடக சட்டசபையில் அமளி” மாலை வரை ஒத்திவைத்தார் சபாநாயகர்…!!

கர்நாடக சட்டசபையில் ஏற்பட்ட அமலியால் மாலை 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை கர்நாடக மாநில சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாநில முதலவர் குமாரசாமி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பேசினார். அதில் இந்த ஆட்சியை கலைக்க எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்திலேயே கடும் அமளி ஏற்பட்டது. இதைதொடர்ந்து பேசிய சபாநாயகர்  ரமேஷ் குமார்  கூறுகையில் , […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எப்படியாவது ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் திட்டம்- குமாரசாமி காரசார பேச்சு..!!

ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு செயல்படுவதாக  குமாரசாமி காரசாரமாக தெரிவித்துள்ளார்.   கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற மதசார்பற்ற ஜனதா தள-காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, கடிதத்தை சபாநாயகர் அலுவலகத்தில் அளித்தனர். ஆனால் சபாநாயகர் ரமேஷ் குமார் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆளுகின்ற அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் நிலவி வருகிறது. இதையடுத்து பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளும் படி உத்தரவிடக்கோரி 15 எம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 30% ஓட்டுநர் உரிமங்கள் போலியானவை… மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் உள்ள மொத்த ஓட்டுநர் உரிமங்களில்  30% போலியானவை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்ட  திருத்தம் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியபோது, இந்தியாவில் மட்டும்தான் எளிமையான முறையில் ஓட்டுனர் உரிமத்தை பெற முடியும் என்றும், ஓட்டுநர் உரிமத்தில் இருக்கும் புகைப்படம் ஓட்டுனருடன் பொருந்துவதில்லை என்றும், அனைவரும் சட்டத்தை மதிக்காமலும் பயமின்றியும் வாகனம் ஓட்டுவதாக தெரிவித்தார்.மேலும்  100 ரூபாய் அபராதம்   குறித்து யாரும்  கவலைப்படுவதில்லை என்றும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் தீடிர் மாற்றம் …….!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பாஜக தலைவர் மாற்றப்பட்டு புதிய தலைவராக ஸ்வதந்திரா தேவ் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி ஆசுரத்தனமான  பெற்று , மத்தியில் தனி பெரும் கட்சியாக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மேலும் பாஜகவின் தேசிய செயலாளர் அமித்ஷா இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்துறை அமைச்சராக தேர்வாகியதால் பாஜவிற்கு செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு செய்யப்பட்டார். ஜே.பி நட்டா தேர்வானத்தில் இருந்து கட்சியை மேலும் பலப்படுத்துவதற்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யாவின் பேச்சு அரவேக்காடு தனமாக உள்ளது…. அமைச்சர் கடம்பூர் ராஜு பரபரப்பு பேட்டி..!!

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது அரவேக்காடு தனமாக உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சனம் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் இதற்கு பாராட்டுக்களையும்,  எதிர்ப்புகளையும்  தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா மற்றும் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சூர்யாவின் பேச்சு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்” முதல்வர் குமாரசாமி நம்பிக்கை …!!

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் என்று முதலவர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அரசியல் உச்சகட்ட குழப்பத்தில் இருந்து வருகின்றது. அங்கு ஆளும் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கட்சியை சேர்ந்த MLA_க்கள் 16 பேர் கூண்டோடு ராஜினாமா செய்து , பாஜக கட்டுப்பாட்டில் இருந்து வருவதால்  முதல்வர் குமாரசாமியின் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதையடுத்து முதல்வர் குமாரசாமி தன்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து  சபாநாயகரை சந்தித்த பாஜக தலைவர் எடியூரப்பா, முதல்வர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஆட்சி காப்பாற்றப்படுமா?கவிழுமா? 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு…!!

கர்நாடக மாநிலத்தில் வருகின்ற 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற மதசார்பற்ற ஜனதா தள-காங்கிரஸ் கட்சிகளின் 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் ஆளுகின்ற அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பங்கள் நிலவி வருகிறது. தற்போது ஆளும் அரசை கவிழ்க்க   பாஜக சதி செய்துள்ளதாக மதசார்பற்ற ஜனதா தள-காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதையடுத்து ஜூலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யா விளம்பரம் தேடுகிறாரா..? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி…!!

நடிகர் சூர்யா அவரது படத்திற்கு விளம்பர ஆதாயம் தேடுவதற்கு அவசரமாக கருத்து கூறுகிறரா? என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கவ்விக் கொள்கை குறித்தும் , நீட் தேர்வு குறித்தும் விமர்சனம் செய்தார்.மேலும் , புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலானோர் புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து பேசாதது வருத்தமளிக்கிறது. அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய […]

Categories
மாநில செய்திகள்

”சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டுகின்றது” H ராஜா கண்டனம்…!!

நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என்று பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கவ்விக் கொள்கை குறித்தும் , நீட் தேர்வு குறித்தும் விமர்சனம் செய்தார்.மேலும் , புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலானோர் புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து பேசாதது வருத்தமளிக்கிறது. அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை வரைவு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திரிபுரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. 85 % இடத்தில் போட்டியின்றி தேர்வு…!!

திரிபுராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சியினரை வேட்பு மனுத்தாக்கள் செய்யவிடாமல் பாஜக அட்டகாசம் செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர். இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் மாநிலமான திரிபுராவில் மொத்தமுள்ள 6,646 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 27_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதில் ஆளும் பாஜக , காங்கிரஸ், ஏற்கனவே ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் சுமார் 12, 03, 070 பேர் வாக்களிக்க இருக்கின்றனர். இதையடுத்து இங்குள்ள 6,646 உள்ளாட்சி இடங்களில் 5, 652 இடங்களில் ஆளும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பங்கு விலக்கல்… 3 மடங்கு லாபம் ஈட்டிய பாஜக…ரூ3,25,00,000 இலக்கு..!!

பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அரசின் பங்குகளை விலக்கிக் கொள்வதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 3.25 லட்சம் கோடி ஈட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருந்த 2009-2014 காலகட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு விலக்கல் மூலம் 14.52 பில்லியன் டாலர்கள் ஈட்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் பங்கு விலக்கல் மூலம் 40.92 பில்லியன் டாலர்கள் ஈட்டப்பட்டு, மும்மடங்கு அதிகத் தொகை பங்கு விலக்கல் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராஜினாமா MLA”காங்கிரஸோடு இணைவது உறுதி….அமைச்சர் சிவக்குமார் பேட்டி …!!

கர்நாடகாவில் ராஜினாமா செய்த MLA நாகராஜன் மீண்டும் காங்கிரஸ்க்கு வர உறுதியளித்துள்ளதாக அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆளும் கூட்டணி கட்சிகளிலிருந்து  16 MLAக்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்வதாக கூறி சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். இது குறித்து  கர்நாடக மாநில மழை கால கூட்டத் தொடரில் விவாதம் நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் சபாநாயகர் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டால் ஆட்சி தானாகவே கவிழ்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் மக்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டவன்” கர்நாடக சபாநாயகர் பேட்டி…!!

மக்களுக்கு மட்டுமே பதிலளிக்க நான் கடமைப்பட்டவன் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து  கர்நாடக அதிருப்தி MLA_க்கள் சபாநாயகரை சந்தித்தனர். பின்னர் இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக சபாநாயகர்  ரமேஷ்குமார் கூறுகையில் , ராஜினாமா கடிதம் கொடுத்த 11 பேரில், 8 பேரின் ராஜினாமா கடிதம் முறையாக அளிக்கப்படவில்லை. அந்த 8 பேரிடமும் முறையாக நேரில் ராஜினாமா கடிதத்தை அளிக்குமாறு கேட்டேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் , ராஜினாமா குறித்து விளக்கம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மிரட்டலால் மும்பை சென்றதாக MLA_க்கள் சொன்னார்கள்” கர்நாடக சபாநாயகர் தகவல்…!!

சிலரின் மிரட்டல் காரணமாக மும்பை சென்றதாக 10 MLA_க்கள் என்னிடம் கூறினார்கள் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகா சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த  சட்டமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையடுத்து கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார்  முன்பு அங்குள்ள 10 சட்டமன்ற உறுப்பினர் ஆஜராகி அதில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். இதை தொடர்ந்து அதிருப்தி MLA_க்கள் சந்திப்புக்கு பின்பு கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , சபாநாயகராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு எனக்குள்ளது. யாரையும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நான் ராஜினாமா செய்யமாட்டேன்” முதல்வர் குமாரசாமி திட்டவட்டம்…!!

அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் நான் ராஜினாமா செய்ய வேண்டுமா அதற்க்கு என்ன தேவை இருக்கிறது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக அரசியலில் தொடர்ந்து நிலவிவரும் சிக்கல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன , இந்த ஆட்சியை தக்க வைக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று ஆலோசித்ததாக தெரிகின்றது. அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் இந்த கூட்டம் கர்நாடக […]

Categories
மாநில செய்திகள்

“ஈரோடு ரெயில் நிலையத்துக்கு பெரியார் பெயர்” கனிமொழி MP கோரிக்கை …!!

ஈரோடு ரெயில் நிலையத்துக்கு தந்தை பெரியாரின் பெயரை வைக்க வேண்டுமென்று மக்களவையில் திமுக MP கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று நடந்த கூட்டத்தில்  உரையாற்றிய தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக M.P கனிமொழி , மத்திய அரசின் எல்லா திட்டங்களும் , எல்லாம் மாநில மக்களும் சுலபமாக புரியும் படி  பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் ,  தெற்கு ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு குறைவு  என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எங்களது ஆட்சி கலைக்கப்படாது…. குமாரசாமி நம்பிக்கை…!!

எங்களது ஆட்சி கலைக்கப்படாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்- ஜனதா தள  அதிருப்த்தி MLAக்கள் 14 பேர் திடீரென ராஜினாமா செய்தனர். இதையடுத்து ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள ஜனதா தள-காங் கட்சிகள் தீவீர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் 2 MLAக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய உள்ளோம் என சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். இதனால் கர்நாடகாவில் ஆட்சி காப்பாற்றப்படுமா?இல்லை கவிழுமா […]

Categories

Tech |