Categories
அரசியல் தேசிய செய்திகள்

SPG பாதுகாப்பு இல்லை…. ”பாஜகவின் பழிவாங்கல்” – அஹமத் படேல் சாடல் …!!

சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது பாஜகவின் பழிவாங்கும் நோக்கை காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமத் படேல் சாடியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர்கள், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினரை பாதுகாக்க எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு (Special Protection Group) வழங்கப்பட்டது.அந்த வகையில் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்வர் பதவி… ”அப்பாக்கு வாக்கு கொடுத்துட்டேன்” அசைந்து கொடுக்காத உத்தவ்

முதலமைச்சர் பதவி குறித்து அமித்ஷாவிடம் முன்கூட்டியே பேசியதாகவும், தாக்கரே குடும்பத்தினர் ஒருவரை முதல்வராக்குவேன் என தனது தந்தை பால்தாக்கரேக்கு வாக்கு கொடுத்துள்ளதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றும் ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. முதலமைச்சர் பதவிக்கான போட்டா போட்டி காரணமாக இருகட்சிகளும் முரண்டு பிடித்துவருவதால் முடிவுகள் வெளிவந்த 15 நாட்கள் கழித்தும் ஆட்சி அமையவில்லை. சட்டப்பேரவையின் காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி தீர்ப்பு நாளை வெளியாகிறது …..!!

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை காலை 10.30க்கு வழங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது. நாடே பெரிதும் எதிர்பார்க்கும் சர்ச்சைக்குரிய ராம் ஜன்ம பூமி – பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தொடர் விசாரணையை மேற்கொண்டது. 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. உச்ச […]

Categories
தேசிய செய்திகள்

ஊட்டச்சத்து குறைபாடு: பாஜகவின் உணவு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா காங்கிரஸ்?

மத்தியப் பிரதேச அங்கன்வாடிகளில் மதிய உணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் பாஜகவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அங்கன்வாடிகளில் நவம்பர் மாதம் முதல் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் முட்டைகள் வழங்கப்பட்டுவருகின்றன. இதனை பாஜக கடுமையாக எதிர்த்து வருகிறது. இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் இமர்தா தேவி, “நாங்கள் மகாராஷ்டிராவிற்கு சென்று அங்குள்ள அங்கன்வாடிகளில் ஆய்வு செய்துள்ளோம். 2016ஆம் ஆண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சில்லித்தனமான அரசியல் …. உள்ளாட்சியில் போட்டியில்லை – பின்வாங்கிய ரஜினி

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது , அவரிடம் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு , பொன்ராதாகிருஷ்ணன சந்திப்பு போன்ற ஏராளமான விஷயங்களுக்கு பதிலளித்து பேசினார். அப்போது திருவள்ளுவர் சிலை வைத்து அரசியல் செய்யப்படுகிறது குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் ரஜினி, திருவள்ளுவர் ஒரு மிகப் பெரிய ஞானி. அவர் ஒரு சித்தர். ஞானிகளையும், சித்தர்களையும் எந்த ஒரு மதம் , ஜாதி  என்ற எந்த ஒரு எல்லைக்குள் அவர்களை […]

Categories
Uncategorized

அது என்ன ? ”குஜராத்திக்கு மட்டும் தனி சலுகை” மம்தா கேள்வி …!!

ஐஐடி நடத்தும் ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு கேள்வித்தாள் குஜாரத்தி மொழியில் வெளியான விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார். இந்தியத் தொழில்நுட்பக் கழகம் எனப்படும் ஐ.ஐ.டி. நிறுவனங்களில் முதுகலைப் படிப்பில் சேருவதற்காக ஆண்டுதோறும் ஜே.இ.இ. மெயின்ஸ்( JEE Main) தகுதித் தேர்வு நடைபெறுவது வழக்கம். இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேட்கப்பட்டு வருகிறது.இந்தாண்டு இந்த இரு மொழிகள் மட்டுமில்லாமல் குஜராத்தி மொழியிலும் கேள்வித்தாள் இருந்தது தற்போது சர்ச்சையைக் […]

Categories
தேசிய செய்திகள்

”பொருளாதாரத்தை உயர்த்தனும்” மாநிலங்கள் உதவனும் – மோடி வேண்டுகோள் …!!

இந்தியப் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக மாற்ற, மாநிலங்கள் அனைத்தும் பங்களிக்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்த, பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதார நிலை குறித்துப் பேசினார்.அதில், ‘நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்தியாவின் மாநிலங்களுக்கு பெரும் பங்குள்ளதாகத் தெரிவித்தார். அனைத்து மாநிலங்களும் தங்கள் முழு ஆற்றலை […]

Categories
மாநில செய்திகள்

உண்மையாகவே….. ‘திருவள்ளுவர் யாருக்குத்தான் சொந்தம்?’…. விரிவான விளக்கம் …!!

உலகம் போற்றும் ஒரு புலவரை அனைவருக்கும் பொதுவானவர் என இச்சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் தொன்றுதொட்டு வந்த காலங்களில் துறவிகள், புலவர்கள் என அனைவரும் அனைவருக்கும் சொந்தம் என்ற நோக்கில் பெரும்பாலும் வெள்ளை உடைகளையே புகைப்படங்களில் வரைந்தோ, பொறித்தோ வைப்பார்கள். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உலகம் போற்றும் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரை, காவி உடையில் இருப்பதுபோன்ற புகைப்படத்தை பதிவிட்டனர். அதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு விஷமிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 25,000,00,00,000 ஒதுக்கீடு…. ”கடன் வாங்கிக்கோங்க” ரியல் எஸ்டேட்_க்கு ஜாக்பாட். ..!!

ரியல் எஸ்டேட் துறையினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதையடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,ரியல் எஸ்டேட் துறையினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க சிறப்பு சாளரம் அமைக்கப்பட்டு, 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இதன்மூலம் நிதிப்பற்றாக்குறையால் கட்டி முடிக்கப்படாத கட்டடங்களை கட்டி முடிக்கலாம். இதனால் 1,600 கட்டுமானத் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

OPS வீட்டருகே….. ”திருவள்ளுவர் சிலை அவமதிப்பு” தொடரும் பரபரப்பு …!!

தஞ்சை பிள்ளையார்பட்டியைத் தொடர்ந்து பெரியகுளத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் அவமரியாதை செய்ததைத் தொடர்ந்து பாஜகவினர் பாலபிஷேகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை கடந்த சில தினங்களுக்கு முன் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கருப்பு மை பூசியும், சாணம் வீசியும் அவமரியாதை செய்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து தஞ்சையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் கிட்ட கேட்காதீங்க…. H.ராஜா_ட போய் கேளுங்க – பிரேமலதா விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த் நன்றாக கம்பீரமாக இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். இன்று தேமுதிக கட்சியின் ஆலோசனை கூட்டம் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா , சுதீஷ் , பார்த்தசாரதி உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில் , வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் எப்படி சந்திக்கணும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் திருவள்ளுவரை ஹிந்துக்களின் அடையாளமாக பாஜகவின் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் 70 லட்சம் மக்களை முடக்கியது – கபில் சிபல்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது, 70 லட்சம் மக்கள் முடக்கப்பட்டனர் என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் சார்பாக வழக்கில் ஆஜராகிய கபில் சிபல், மத்திய அரசின் நடவடிக்கையால் 70 லட்சம் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டது, இதுபோல் சுதந்திர இந்தியாவில் நடந்ததில்லை” எனத் தெரிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

“காற்று மாசு” விவசாயிகளுக்கு இயந்திரம் வழங்க நடவடிக்கை…… பிரதமர் மோடி உத்தரவு….!!

பயிர்க் கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கான இயந்திரங்களை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்குமாறு மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேசம் பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிப்பதை டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. விவசாய கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கான இயந்திரங்களை வாங்க ஹரியானா பஞ்சாப் அரசுகள் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி வந்த போதிலும் இந்த பிரச்சனையே அதிகாரிகள் சரிவர கையாளவில்லை என்றும் உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்நிலையில் பயிர் கழிவுகள் எரிக்காமல் கையாள […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய காற்றில் விஷவாயு கலந்த பாகிஸ்தான் – பகீர் குற்றச்சாட்டு ..!!

இந்தியாவில் காற்றை மாசுபடுத்த எண்ணத்தில் ஆசைப்படும் எண்ணத்தில் பாகிஸ்தானும் சீனாவும் விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் வினீத் அகர்வால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் காற்று தரமதிப்பீடு அளவு ஆபாய உள்ளது. நகரம் முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க வாகன கட்டுப்பாடு விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் காற்று மாசுபடுத்தும் தீய எண்ணத்தில் பாகிஸ்தானும் , சீனாவும் விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘மோடி தலைப்புச் செய்திகளை வடிவமைப்பதில் வல்லவர்’ – சஞ்சய் தத்

மோடி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், மோடி தலைப்புச் செய்திகளை வடிவமைப்பதில் வல்லவர் என விமர்சித்துள்ளார். ராமநாதபுரம் அரண்மனை முன்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாஜக அரசின் பொருளாதார சீரழிவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் பங்கேற்று தலைமை தாங்கினார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் தத், ‘மோடி அரசால் அனைத்து துறைகளும் பின்னோக்கிச் செயல்பட்டுவருகிறது. இதனால் மக்களும் பொருளாதார ரீதியாக […]

Categories
அரசியல் சேலம் மாநில செய்திகள்

என்னது..! ஹெச். ராஜா MP_யா ? யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு அதிஷ்டம் ….!!

அரசு கலைக்கல்லூரியின் 2019-20ஆம் ஆண்டிற்கான மாணவர் கையேட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச். ராஜா என அச்சிடப்பட்டிருந்தது மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சேலம் வின்சென்ட் பகுதியில் அரசுக்கு சொந்தமான தன்னாட்சிக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு கூடுதல் கட்டடம் கட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜாவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”திருவள்ளுவர் ஹிந்து தான்” ஆராய்ச்சியில் முடிவு – அமைச்சர் தகவல் …!!

 திருவள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். கேள்வி: திருக்குறளை பொறுத்தவரையில் உலகப் பொது மறை நூல். ஆகையால் எந்த மதத்தையும் சார்ந்தது கிடையாது என்று கேள்விகள் எழுகிறதே? பதில்: ‘அவர் (திருவள்ளுவர்) மதங்கள் குறித்து எழுதவில்லை. எல்லா மதங்களையும் போற்றிதான் எழுதியுள்ளார். அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று இதுகுறித்து ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே அவர் இந்துவாகத்தான் இருப்பார் என்ற கருத்தை மையப்படுத்தி சிலர் கூறி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”திருவள்ளுவர் கடவுள் பக்தி கொண்டவர்” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி …!!

‘திருவள்ளுவர் கடவுள் பக்தி கொண்டவராகவே  இருந்திருப்பார். நாத்திகராக இருக்க வாய்ப்பே கிடையாது’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட சூடான கேள்விகளுக்கு ராஜேந்திர பாலாஜி அளித்த பதில் பின்வருமாறு: உள்ளாட்சித் தேர்தல்:  கேள்வி: உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி? வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது? பதில்: ‘ஏற்கெனவே இருந்து வரும் கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கூறியுள்ளார்கள். வெற்றி வாய்ப்பைப் […]

Categories
தேசிய செய்திகள்

”பசு உடலில் தங்கம் இருக்கு” அதிர வைத்த பாஜக MP கருத்து …!!

இந்திய பசு மாடுகளில் தங்கம் உற்பத்தி ஆகின்றது என்று பாஜக MP திலீப் கோஷ் பேசியதை சமூகவலைத்தள வாசிகள் கலாய்த்து வருகின்றனர். மேற்கு வங்கத்தின் புர்த்வான் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக MP திலீப் கோஷ் , இந்திய நாட்டு மாடுகளின் திமிலில் தங்கமணி உள்ளது என்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அந்த திமில் மீது சூரிய ஒளி படும் போது அது பசுவின் உடலில் தங்கத்தை உற்பத்தி செய்கிறது என்றும் பலரையும் உறைய வைத்தார்.இதனாலேயே இந்திய நாட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கனிமொழிக்கு எதிரான வழக்கு: களமிறங்கிய வாக்காளர்….!!

கனிமொழிக்கு எதிராக தமிழிசை தாக்கல் செய்த தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி கோரி, தொகுதி வாக்களரான ஸ்ரீ வைகுண்டத்தைச் சேர்ந்த முத்து ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் கனிமொழி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருடைய வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி பாஜக வேட்பாளர் தமிழிசை சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின், தேர்தல் வழக்கைத் திரும்பப் பெற அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளுவருக்கு வர்ணம் பூசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம்..!

திருவள்ளுவர் சிலைக்கு காவி வர்ணம் பூசியவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி திமுக இலக்கிய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளுவர் சிலைக்குகு காவி உடை அணிவித்து தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக இலக்கிய அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சரும் திமுக இலக்கிய அணி செயலாளருமான இந்திரகுமாரி கலந்துகொண்டார். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய திமுக இலக்கிய அணி […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு… அடுத்த பிரச்னையை கிளப்பிய அர்ஜூன் சம்பத்!

பிள்ளையார்பட்டியில் அவமரியாதை செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு, காவி துண்டு, திருநீறு, ருத்ராட்ச மாலை அணிவித்து இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் மரியாதை செலுத்தினார். தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் நேற்று முந்தைய தினம் திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மாட்டு சாணம் வீசி அவமரியாதை செய்தனர். இது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திருவள்ளுவரை அவமதிப்பு செய்தவர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பல்வேறு கட்சியினர் சார்பில் போராட்டம் […]

Categories
மாநில செய்திகள்

வள்ளுவர் சிலைக்கு காவி துண்டு……. அனுமதி மீறல்…… அர்ஜுன் சம்பத் கைது…!!

வள்ளுவர் சிலைக்கு காவிதுண்டு அணிவிதற்காக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும்  நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள  திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு பெரும் […]

Categories
மாநில செய்திகள் வைரல்

காவி துண்டு போட்டு….. ”பூஜை போட்ட அர்ஜுன் சம்பத்”…. வைரலாகும் வீடியோ …!!

திருவள்ளுவர் சிலைக்கு அர்ஜுன் சம்பத் காவித்துண்டு போட்டு பூஜை செய்த வீடியோ சமூக வளையதளத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும்  நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள  திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

காவி துண்டு…. ருத்ராட்சம்….. தீபாராதனை…. சர்சையை கிளப்பிய அர்ஜுன் சம்பத் …!!

பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலைக்கு  காவி துண்டு அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் 2005 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரால் மூன்றடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை மீது நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கருப்பு கலர் சாயம் , சாணி பூசி அவமானப்படுத்தினர். பெரும்  ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பல்வேறு மாணவர் அமைப்புகள் , தமிழ் […]

Categories
அரசியல்

தேசிய கீதத்தை ஏன் தமிழில் பாடக்கூடாது…?? கே.பாலகிருஷ்ணன் கேள்வி….!!

இந்திய தேசிய கீதத்தை தாய்மொழி தமிழில் ஏன் பாடக்கூடாது என சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை காமராஜர் அரங்கில் தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு என்கின்ற தலைப்பில் தென் மாநில மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார். மேலும் கேரள மாநிலத்தின் இடது ஜனநாயக ஒருங்கிணைப்பாளர் கர்நாடக மாநில சிபிஎம் செயலாளர், தெலுங்கானா சிபிஎம் மாநில […]

Categories
தேசிய செய்திகள்

Breaking : மோடியுடன் GK வாசன் தீடீர் சந்திப்பு ….!!

முன்னாள் மத்திய அமைச்சர் GK.வாசன் பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகின்றார். முன்னாள் மத்திய அமைச்சரும் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஜி கே வாசன்  தற்போது டெல்லியில் இருக்க கூடிய பிரதமர் மோடி இல்லத்தில் பிரதமரை சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறார். தற்போது தான் இந்த சந்திப்பானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் , மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவையும் சந்திப்பதற்கு ஜி கே வாசன்  தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. குறிப்பாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராம ராஜ்ஜியம் அல்ல, நாதுராம் ராஜ்ஜியம்” – யோகி அரசு குறித்து அகிலேஷ் ….!!

உத்தரப் பிரதேச அரசு மின்சார தொழிலாளர் வைப்பு நிதி ரூ.2,600 கோடியை வங்கிசாரா தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று யோகி ஆதித்தியநாத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார். மேலும் தற்போது நடப்பது ராம ராஜ்ஜியம் (ஆட்சி) அல்ல நாதுராம் (கோட்சே) ராஜ்ஜியம் என்றும் அவர் கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் (Akilesh Yadav) செய்தியாளர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ட்விட்டரில் இடம்பெற்ற திருவள்ளுவர் புகைப்படம்தான் நிலையான புகைப்படம் – கருப்பு முருகானந்தம்

பாஜக ட்விட்டரில் வெளியிட்டதைப் போலதான் 1800 காலக்கட்டத்தில் திருவள்ளுவர் படங்கள் இருந்துள்ளது என பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு சமூக விரோதிகள் சிலர் சகதியைப் பூசி அவமரியாதை செய்ததை கண்டிக்கும் வகையில், பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.இந்நிலையில் தஞ்சாவூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு பாஜக சார்பில் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூர் முன்னாள் மேயர் குத்தாட்டம்!

மேயராக இருந்த கார்த்திகாயினி திருமண நிகழ்ச்சி ஒன்றில் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது. வேலூர் மாநகராட்சியின் மேயராக இருந்தவர் கார்த்திகாயினி. இவர் கடைசியாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக சார்பில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த கார்த்திகாயினி பின்னர் திடீரென பாஜகவில் இணைந்தார்.தற்போது அவர் பாஜக மகளிர் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் முன்னாள் மேயர் கார்த்திகாயினி குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா அரசியலைத் தீர்மானிக்கும் இரு சந்திப்புகள்….!!

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், உள் துறை அமைச்சர் அமித் ஷா இடையேயான சந்திப்பும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இடையேயான சந்திப்பும் மகாராஷ்டிரா அரசியலை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா கூட்டணி அரசின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் முடிவடைவதால் அம்மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் 24ஆம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 […]

Categories
தேசிய செய்திகள்

சிக்குவாரா சின்மயானந்தா? – வலுக்கும் ஆதாரம்!

 சின்மயானந்தாவுக்கு எதிரான ஆதரங்கள் இருக்கும் மடிக்கணினியை சிறப்பு புலனாய்வுக்குழு கைப்பற்றியது. பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சின்மயானந்தா உத்தரப் பிரதேசத்தில் பல கல்லூரிகளை நடத்தி வருகிறார். தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் சின்மயானந்தாவுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுப்பினார்.இதனைத் தொடர்ந்து, அந்த மாணவி மாயமானார். இதனால் மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் சின்மயானந்தா, தன் மகளை கடத்தியாகப் புகார் அளித்தார். இதற்கிடையே, காணாமல்போன சட்டக் கல்லூரி மாணவியை ராஜஸ்தானிலிருந்து மீட்டுக் கொண்டுவந்த உத்தரப் பிரதேச […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திடீர் அரசியல் திருப்பம்….. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி… கோட்டை விட்ட பாஜக…..!!.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி சிவசேனா ஆதரவில் அமைய வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணி அரசின் பதவிக்காலம் வருகிற 8ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக வருகிற 7ஆம் தேதி புதிய அரசு அமையவுள்ளது. இதையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுக்கும் ஜனநாயகத் திருவிழா (தேர்தல்) கடந்த மாதம் 21ஆம் தேதி நடந்தது. வாக்குகள் 24ஆம் தேதி எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா […]

Categories
தேசிய செய்திகள்

‘பால் தாக்கரே இருந்தால் தைரியம் வருமா?’ பாஜகவுக்கு ரோஹித் பவார் கேள்வி…!!

பால் தாக்கரே உயிருடன் இருந்திருந்தால், பாரதிய ஜனதாவுக்கு இத்தனை தைரியம் வருமா? என்று தேசிய வாத காங்கிரஸ் எம்.எல்.ஏ ரோஹித் ராஜேந்திர பவார் கேள்வி எழுப்பியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவாரின் மருமகனும், மகாராஷ்டிரா மாநிலத்தின் கார்ஜட் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரோஹித் ராஜேந்திர பவார் முகநூலில் பாஜகவின் தற்போதைய நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட பல தலைவர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி மகாராஷ்டிரா. அப்படிப்பட்ட ஒரு தலைவர் தான் பால […]

Categories
மாநில செய்திகள்

‘திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை’ – ஸ்டாலின்

திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை கொளத்தூரில் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பொற்றுவருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாஜக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து நேற்று புகைப்படம் வெளியிட்டதற்கும், பிள்ளையார்பட்டியிலுள்ள திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கும் ஏதாவது தொடர்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டது – ஸ்டாலின் ட்வீட்

திருவள்ளுவர் போலத் தமிழுக்குப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியிலுள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் கறுப்பு மை பூசியும் மாட்டுச் சாணத்தை வீசியும் சென்றனர். இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது – தஞ்சை, […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது ? உயர்நீதிமன்றம் காட்டம் …!!

நீட் தேர்வை ஏன் திரும்ப பெறக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  நீட்தேர்வு ஆள்மாறாட்டம் குறித்த பல்லக்கு  கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு விசாரித்தது இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் ஆள்மாறாட்டம் தொடர்பாக சிபிசிஐடி வழக்கறிஞர் தேசிய தேர்வு முகமையிடம் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள்  கைரேகை , ஆவணங்கள் பெறப்பட்டதாகவும் , தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு மருத்துக் கல்லூரி மற்றும் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், எவ்வளவு காலத்தில் விசாரணையை முடிக்க […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு பாஜகவுக்கு தொடர்பு ? ஸ்டாலின் குற்றசாட்டு …!!

திருவள்ளுவர் சிலையை அவமதித்ததற்கும் , பாஜக ட்வீட்_டர் பதிவுக்கும் தொடர்ப்பு இருக்குமே ? என்று முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும்  நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள  திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

”மோசமான பின் விளைவுகள் ஏற்படும்” சீமான் எச்சரிக்கை …!!

திருவள்ளுவர்  சிலையை அவமதிப்பது பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும்  நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள  திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளுவர் சிலை சேதம் – நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் …!!

தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை சேத படுத்தியவர்களை கைது செய்ய கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும்  நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள  திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காவி உடையா ? கொதித்தெழுவார்கள்….. பதிலடி கொடுப்பார்கள்…. வைகோ ஆவேசம் …!!

திருவள்ளுவர் குறித்து பாஜக பதிவிட்டுள்ள கருத்து சர்சையை ஏற்படுத்திய நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளியன்று தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்த பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீற்றைப் பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் பதிவிடப்பட்டிருந்தது. இதற்க்கு திமுக உட்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு குறள் விளக்கம்: எல்லா எழுத்துக்களும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிள்ளையார்பட்டியில் “திருவள்ளுவர் சிலை அவமதிப்பு” போலீசார் விசாரணை …!!

தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதிக்கும் வகையில் மர்மநபர்கள் செயல்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும்  நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள  திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பிரியங்கா காந்தியின் செல்போனை மத்திய அரசு ஹேக் செய்துள்ளது – காங்கிரஸ் குற்றச்சாட்டு …!!

 காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் செல்போனை மத்திய அரசு ஹேக் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ தொழில்நுட்ப நிறுவனம், ’பெகாசஸ்’ என்ற மால்வேரை (Pegasus malware) அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ்அப் செயலிக்கு அனுப்பி அவர்களை உளவு பார்த்ததாகக் கூறி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள நீதிமன்றத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்திவரும் நிலையில் இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

திருக்குறளுக்கு புதிய விளக்கம் கொடுத்த ஹெச். ராஜா ட்வீட்டால் சர்ச்சை…!!

 ‘திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்’ என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ட்வீட் செய்துள்ளார். கடந்த வெள்ளியன்று தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்த பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீற்றைப் பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் பதிவிடப்பட்டிருந்தது. மானுட நேயத்தைப் போதித்த திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”குறளை தப்பு இல்லாம சொல்லுங்க” அசிங்கபட்ட முக.ஸ்டாலின் ….!!

முக.ஸ்டாலின் திருக்குறளை தவறுமின்றி உச்சரித்தால் பாஜக பதிவை நீக்கி விடுகின்றோம் என்று பாஜக தெரிவித்துள்ளது. நேற்று தாய்லாந்தில் தாய் மொழியில் திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார்.அதனை ஒட்டி தமிழக பாஜக சார்பில் டுவிட்டரில் காவி உடை நெற்றியில் விபூதியுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு செய்தி ஒன்று பதிவிடப்பட்டது. அதில் திருக்குறள் ஒன்றை பதிவிட்டு அதில் இறை நம்பிக்கை உள்ளவர்களை படிப்பவர்களுக்கு அவர்கள் கற்ற கல்வியால் என்ன பயன் என கேள்வி எழுப்பி உள்ளது அந்த குறளை கற்று திராவிடர் கழகமும் திமுகவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ் துரோகம் …. ”படிச்சு திருந்துங்க” …. பாஜகவுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் …!!

எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். திருவள்ளுவர் தொடர்பான தமிழக அரசின் அதிகாரப்பூர்வ படத்தில் மதரீதியான அடையாளம் எதுவும் இருக்காது. இந்நிலையில் நேற்று தாய்லாந்தில் தாய் மொழியில் திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார்.அதனை ஒட்டி தமிழக பாஜக சார்பில் டுவிட்டரில் காவி உடை நெற்றியில் விபூதியுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு செய்தி ஒன்று பதிவிடப்பட்டது. அதில் திருக்குறள் ஒன்றை வெளியிட்டுள்ளது. இறை நம்பிக்கை உள்ளவர்களை படிப்பவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”காவி உடையில் வள்ளுவர்” நம்பி வாழும் கம்யூனிஸ்ட் ….. கிளம்பிய சர்சை …!!

காவி உடை நெற்றியில் விபூதியுடன் திருவள்ளுவர் படத்தை தமிழக பாஜக வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் தொடர்பான தமிழக அரசின் அதிகாரப்பூர்வ படத்தில் மதரீதியான அடையாளம் எதுவும் இருக்காது. இந்நிலையில் நேற்று தாய்லாந்தில் தாய் மொழியில் திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார்.அதனை ஒட்டி தமிழக பாஜக சார்பில் டுவிட்டரில் காவி உடை நெற்றியில் விபூதியுடன் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு செய்தி ஒன்று பதிவிடப்பட்டது. அதில் திருக்குறள் ஒன்றை வெளியிட்டுள்ளது. இறை நம்பிக்கை உள்ளவர்களை படிப்பவர்களுக்கு அவர்கள் கற்ற […]

Categories
தேசிய செய்திகள்

5 ட்ரில்லியன் டாலர் இலக்கு…… தொழில் செய்ய இந்தியாவுக்கு வாங்க….. அந்நிய நாட்டாருக்கு மோடி அழைப்பு….!!

தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு ஆதித்யா பிர்லா குடும்பத்தின் சிறப்பு விழா ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார். தாய்லாந்தில் பிரபல தொழிலதிபர் ஆதித்யா பிர்லா குடும்பத்தினரின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை சுட்டிக்காட்டிப் பேசினார். அதில் முதலீடு செய்வதற்கும் எளிதாக தொழில் புரிவதற்கும்  உலகிலேயே மிகச் சிறந்த இடம் இந்தியா என்று குறிப்பிட்டார். எளிதாக தொழில் செய்வதற்கான சூழல் வாழ்க்கை தரம் உட்கட்டமைப்பு உற்பத்தி திறன் காப்பு உரிமைகளின் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

”முதலீடு செய்ய உகந்த நேரம் இது” அழைப்பு விடுத்த மோடி …!!

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே உகந்த நேரம் என பிரதமர் மோடி தாய்லாந்து தொழில் அதிபருக்கு அழைப்பு விடுத்துள்ளார். தாய்லாந்து பேங்காக்கில் நடைபெற்ற 16 வது ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.அப்போது பிற நாட்டுத் தலைவர்களுடன் ஒரே மேடையில் வீற்றிருந்த மோடி அவர்களுடன் உற்சாகமாக கைகுலுக்கினார். இதையடுத்து இந்தியா ஆசிய நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை வரவேற்பதாகவும், இந்தியா பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா மேற்கொள்ளும் கொள்கைகள் முக்கியமானதாக உள்ளது என்று மோடி தெரிவித்தார். கடல் வழிப் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டும் பாஜக…..!!

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளான பாஜக, சிவசேனா கட்சிகளுக்கிடையே மாற்றுக் கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 105 இடங்களில் பாஜக வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. இதனை […]

Categories

Tech |