தி.மு.க நிர்வாகியின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் தி.மு.க கட்சியின் மாநில செய்தி தொடர்பு இணை செயலாளரான தமிழன் பிரசன்னா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நதியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட வேண்டும் என்று நதியா தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தான் […]
