ஈரோடு மாவட்டம் கல்ராமொக்கை என்னும் கிராமத்தில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கிராமமக்கள் தண்ணீரில் தத்தளித்து நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 104.26 அடியாக உள்ளது. ஆகையால் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் நீர் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது. அதேபோல் சித்தனக்குட்டை பகுதியை அடுத்த கல்ரா மொக்கை என்னும் கிராமத்தில் தார் சாலைகளில் முழங்கால் பகுதியைத் தாண்டி நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் ஊருக்குள் வரக்கூடிய […]
